Wednesday, October 14, 2020

நடிகர் விஜய் சேதுபதிக்கு அன்பு வேண்டுகோளும், எச்சரிக்கையும்!

2009 ல்‌ தமிழீழம் மக்கள் சிங்கள வெறியர்களால் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டு இனப்படுகொலை செய்த  அன்று, இன்றைக்குதான் நான் நிம்மதியாக் தூங்குவேன். இதுதான் என்னுடைய மகிழ்ச்சியான நாள் என்று துரோகம் உரைத்தவன் முரளிதரன்.

இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்‌ஷே ஒரு நெல்சன் மண்டேலா என புகழ்ந்து, நெல்சன் மண்டேலாவின் தியாகத்தை கொச்சைப்படுத்தியவன் இந்த தமிழின துரோகி முரளிதரன்.

தமிழீழ இனப்படுகொலையில் காணாமல் ஆக்கப்பட்ட 20000 இளைஞர்களுக்காக அமைப்பு உருவாக்கப்பட்டு அவர்களை மீட்க  போராடுகின்றவர்களை நாடகமாடுகிறார்கள் என கொச்சைப்படுத்தியவன் இந்த துரோகி முரளிதரன்.

லண்டனில் ஒரு நிகழ்வில், தமிழ் மக்களிடையே ஒருமுறை தமிழில் பேசுங்கள் என‌ கேட்டபோது தமிழ் தெரியாது என தாய்மொழிக்கு துரோகம் செய்தன் தமிழின‌ துரோகி முரளிதரன்.

அந்த தமிழின துரோகி முரளிதரனின் வாழ்க்கை வரலாறை படமாக்க, சிங்களவன் கொடி பொறித்த ஆடை அணிந்து அவர்களுக்கு சேவகம் புரிவது போல, தமிழின பற்றாளனாக இருக்கும் சகோதரர் விஜய் சேதுபதி நடிப்பது ஏற்புடையதல்ல.

அந்த‌ படத்திலிருந்து விலகி, வருத்தம் தெரிவித்து, பச்சை தமிழனாக வலம் வர வேண்டுமென கேட்கிறேன்.

இனதுரோகிகளுடன் உறவாடி தமிழின துரோகி வரிசையில் இடம்பெற கூடாது எனவும் அன்பு வேண்டுகோள் வைப்பதோடு, சிங்களவனுடன் உறவு தொடருமானால் தமிழ் மக்கள் சினத்திற்கு சின்னாபின்னமாக நேரிடும் என்பதையும் எச்சரிக்கையோடு தெரிவித்துகொள்கிறேன்.


மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
14-10-2020
#VijaySethupathi