Tuesday, June 28, 2016

அண்ணன் வடசென்னை செல்வா அவர்கள் காற்றோடு கலந்தார்!

அண்ணன் வடசென்னை செல்வா அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அவசர பிரிவில் வருத்தமான நிலையில் இருக்கிறார் என்றதும் மிகுந்த வேதனையுற்றேன். கடந்த ஓரிரு நாட்களாக இணையதள நேரலை அண்ணன் Ammapet G Karunakaran அவர்களிடம் விபரம் கேட்டறிந்தேன். ஆனால் அண்ணனுக்கு இன்றைக்கு அழைத்து விபரம் கேட்பதற்குள் அண்ணன் வடசென்னை செல்வா அவர்கள் இயற்கையுடன் கலந்துவிட்டார் என்ற செய்தியை இன்று 28-06-2016 காலை முகநூல் திறந்த உடனே கண்டதும் அதிர்ச்சியுற்றேன்.

நேற்றைய பொழுது சிறு முன்னேற்றம் இருக்கிறது என தகவல் வந்த போது சிறு ஆசுவாசம் அடைந்தேன். நண்பர்கள் அனைவருமே இணையத்தின் மூலமாகவே தங்களது வேண்டுதலை வெளிப்படுத்தினார்கள். ஆனாலும் இயற்கை அவரை அரவணைத்துக்கொண்டது.

அவரின் இரண்டு குழந்தைகளும் சிறு வயதிலே தந்தையை இழந்து தவிக்கிறார்கள் என நினைக்கும் போது மனம் கனமாகிறது. குழந்தைகளுக்கு மன தைரியமும், மனைவிக்கு ஆறுதலும் கிடைக்கட்டும்.

அண்ணனே! நீங்கள் காட்டிய பாதையிலே இணையத்தின் கழக கண்மணிகள் நாங்கள் உறுதியோடு பயணிப்போம். அண்ணன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, June 24, 2016

தனியார் பள்ளிகளை முந்தும் கொடுப்பைக்குழி அரசு பள்ளி!

இந்திய தேசத்தின் தென் முனையில் அமைந்திருக்கும், தமிழ்நாடு மாநிலத்தின் எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தில், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமமான கொடுப்பைக்குழியில் பல உயர் பதவிகளை வகித்து வரும் அதிகாரிகளை உருவாக்கிய அரசு மேல் நிலை பள்ளி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.

அதனுடன் அரசு தொடக்கப் பள்ளியும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆங்கில மொழி தெரிந்திருந்தால் வேலை வாய்ப்புகளுக்கு தொடர்பு மொழியாக பயன்படும் என்ற காரணத்தினால், கிராமப்புற மாணவர்களுக்கும் ஆங்கில வழிக் கல்வி கொண்டு சேர்க்கும் பொருட்டு இந்த கல்வியாண்டு (2016-2017) முதல் LKG, UKG வகுப்புகளும் 1 முதல் 4 வகுப்புகள் வரையிலும் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்த வகுப்புகளுக்கு ஆங்கில புலமை மிக்க திறமையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் இந்தி கற்கும் மாணவர்களுக்கும், தனி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

LKG, UKG வகுப்புகள் தொடங்கப்பட்ட முதல் வருடத்திலேயே 25 மாணவர்களை பெற்றோர்கள் ஆர்வமுடன் சேர்த்திருக்கிறார்கள். இதனால் மாணவர்களின் எண்ணிக்கை தொடக்கப் பள்ளியிலும் சேர்த்து 96 மாணவர்களாக உயர்ந்து தரமான கல்வியை பெற்று வருகிறார்கள்.

தரமான ஆங்கில வழி கல்வியை கொடுக்கும் கொடுப்பைக்குழி அரசு பள்ளியின் இந்த அதிரடி மாணவர் சேர்க்கையால், தனியார் பள்ளிகளை கல்வி தரத்தில் பின்னுக்கு தள்ளி, கொடுப்பைக்குழி அரசு பள்ளியானது தர வரிசையில் முந்திக் கொண்டிருக்கிறது என்று கல்வியாளர்களும், கொடுப்பைக்குழி வட்டார மக்களும் தெரிவிக்கின்றனர்.

இதனால் சுற்றுவட்டார பொதுமக்களும் தங்களது குழந்தைகளை, கொடுப்பைக்குழி அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பள்ளியில் சேராத மாணவர்களை பெற்றோர்கள், தரமான கல்வியின் தேவையை உணர்ந்து விரைவில் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வருங்கால தமிழக உயர் அதிகாரிகளாக மாற்ற வித்திடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வளர்ச்சிக்கு அயராத முயற்ச்சியில் ஈடுபட்ட பள்ளி தலைமையாசிரியர் திரு. மரியமிக்கேல், ஆசிரியர்கள் மற்றும் கொடுப்பைக்குழி வட்டார மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பள்ளியானது மேலும் அதீத வளர்ச்சி பெற வாழ்த்துவதோடு, சுற்றுவட்டார இளைஞர்களும், முன்னாள் மாணவர்களும் பள்ளி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றவும் அன்போடு விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்
[முன்னாள் மாணவன்]

Tuesday, June 14, 2016

வைகோ மற்றும் அவரின் தொண்டனுக்கும் இணையத்தின் ஈடில்லா வாழ்த்துக்கள்!

44 ஆண்டுகளுக்கு முன் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் வைகோ-ரேணுகாதேவி தம்பதியரின் திருமணத்தை நடத்தி வைத்து சிறப்பாறினார். அந்த தம்பதியர்தான் இன்றளவும் நாடறிய நல் வாழ்க்கை நடத்தும் தம்பதியர் என்ற பெயருக்கு சொந்தகாரர்கள். கணவனின் பொது வாழ்விற்கு சற்றும் எதிர்மறை இல்லாமல், எதிர்பார்ப்பிற்கு மேலாக ஊக்கமும் ஆதரமும் அளிப்பவர்தான் திருமதி வைகோ அவர்கள்.


தலைவர் வைகோ அவர்களும் பொது வாழ்வில் கடந்த 52 ஆண்டுகளாக ஈடுபட்டு நாடறியும் தலைவர்களில் ஒருவராய், குடும்பத்தை செவ்வனே வழி நடத்தி, கழக கண்மணிகளுக்கு முன்மாதிரியார் விளங்குகிறார்.


உலக மூலையில் இருந்தெல்லாம் வாழ்த்துக்கள் குவிந்திருக்கும். அடியேனும் தொண்டனாக திருமதி&திரு வைகோ தம்பதியினருக்கு நெஞ்சார்ந்த திருமண நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


தலைவருக்கு திருமண நாளென்றால், அவரது தொண்டருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்னால் புலவர் செவந்தியப்பன் தலைமையில் திருமணம் நடந்தேறியுள்ளது. அந்த வைகோயிஸ்ட் தான் சிங்கப்பூர் மறுமலர்ச்சி பேரவையின் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். முக்கியமான தூண் துவார் சுப்பையா அவர்கள். அவர்களுக்கும் நெஞ்சார்ந்த திருமண நாள்.


இந்த ஜூன் 14 ஆம் தேதியின் சிறப்பு என்னவென்றால் புரட்சியாளன் சே குவேரா பிறந்த தினமும் இன்றுதான்.


மறுமலர்ச்சி மைக்கேல்