Monday, May 13, 2019

தமிழீழ விடுதலை புலிகள் சார்ந்த முகநூல் பதிவுகளை முடக்கும் முகநூல் சமூக வலைதளத்தை இந்திய ஒன்றியத்தில் தடை செய்ய வழக்கு தொடர வேண்டும். தமிழ உணர்வுள்ள வழக்கறிஞர்களுக்கு மைக்கேல் வேண்டுகோள்!

தமிழீழ விடுதலை புலிகளையும், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களையும் உள்ளூர் தமிழர் முதல் உலக தமிழர்கள் வரை எங்கள் நெஞ்ச கூண்டில் தாங்கி நிற்கிறோம்.
தமிழருக்கெனெ ஒரு தனி நாடு தமிழீழம் அமைப்பதையே நோக்கமாக கொண்டிருக்கிறோம். எங்கள் மண்ணில் எங்கள் சுதந்திர தமிழீழ தேசத்தை கட்டியமைத்து புலிகொடியை பறக்க விட ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம்.
எங்கள் தாயகத்தை மீட்டெடுக்கவே எங்கள் உணர்வுகளை வலைதளங்களில் படங்களாக, எழுத்துக்களாக பதிவிட்டு வெளிப்படுத்துகிறோம்.
தமிழர்களின் தமிழீழ தாகத்தை கண்டு பொறுக்க முடியாமல், கடந்த சில வாரங்களாகவே முகநூலில் விடுதலை புலிகள் சார்ந்த படமிட்டு தமிழர் உணர்வுகளை வெளிப்படுத்துவதை பொறுக்க முடியாத பாசிச பாசக இயக்கி கொண்டிருக்கும் இந்திய ஒன்றியம், முகநூல் நிர்வாகத்திடம் பிரபாகரன் மற்றும் விடுதலை புலிகள் படமிட்ட பதிவுகளை தடை செய்ய மறைமுக உத்தரவிட்டதோடு தொடர்ந்து செய்தால் முகநூல் கணக்கையே முடக்க சொல்லியிருக்கிறது.
இந்த திட்டமிட்ட சமூக வலைதள தமிழின அழிப்பை தமிழர்களாக வன்மையாக கண்டிக்கிறோம்...
இந்திய ஒன்றிய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், மதிமுக பொதுச் செயலாளருமான திராவிட ரத்னா வைகோ அவர்கள் விடுதலை புலிகள் இயக்கம் இந்திய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் கொள்கைகளை பற்றி பேசலாம் என நீதிமன்றத்தில் வாதாடி காப்புரிமை பெற்றுத்தந்திருக்கிறார்.
ஆகவே விடுதலை புலிகளை பற்றி பேசும்போது முகநூல் நிர்வாகம் அதை முடக்கினால், பேச்சு காப்புரிமையை ஆவணமாக கொண்டு முகநூல் நிர்வாகத்தை மன்னிப்பு கோர வைப்பதோடு, தொடர்ந்து பயனர்களின் பதிவுகளை முடக்கினால், முகநூலை இந்திய ஒன்றியத்தில் தடை செய்ய, தமிழ் உணர்வுள்ள வழக்கறிஞர்கள் ஆயிரகணக்கானோர் வழக்கு தொடர்ந்து முகநூல் என்ற சமூக வலைதளத்தையே இந்திய ஒன்றியத்தில் தடை செய்து விரட்டியடித்து, தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகமும் விடுதலை புலிகளுமே என்பதை உலகிற்கு உணர்த்த இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த வேண்டுமென அன்போடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
தணியாத தமிழீழ தாகத்தோடு,
மைக்கேல் செல்வ குமார்
13-05-2019

No comments:

Post a Comment