Friday, April 23, 2021

உலக புத்தக தினங்களில் தமிழீழ வரலாற்று நூல்களை பரப்புவோம்!

உலக புத்தக தினமானது முதன் முதலாக 1995 ஏப்ரல் 23 அன்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) ஏற்பாடு செய்து கொண்டாடப்பட்டு இப்போது இதை வருடாந்திர நிகழ்வாக கொண்டாடி வருகிறது.

இந்த தினமானது, உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் அல்லது புத்தகத்தின் சர்வதேச நாள் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நாளில் தமிழீழம் சார்ந்த நூல்களை தமிழர்கள் அனைவரும் பரப்புவது, தமிழர்களை அறிய செய்வதும் நமது கடமையாகும். இனி வரும் காலங்களில் இந்த தினங்களில் தமிழீழம் சார்ந்த புத்தகங்கள் அதிகம் வெளியிடவும், தமிழீழம் சார்ந்த புத்தக கண்காட்சி நடத்திடவும் தமிழ் சமூகம் முனைப்பு காட்ட வேண்டும். தமிழீழ வரலாற்றை இன்றைய இளைஞர்கள் தெளிவாக புரிந்துகொள்ள இப்படி பட்ட தினங்களை புதிய நூல்கள் வெளியிட்டும், பழைய நூல்கள் தமிழர்கள் வாங்கி பயன்பெறும் வகையில் அமையவும் நாம் செயலாற்ற வேண்டியது கடமையாகிறது. 2009 மே 18 ல் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட எம் தமிழ் இனத்தின் அடையாளமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்படிருந்தது. இந்த நினைவுதூபி 2021 ஜனவரி மாதம் 8ம் தேதி இரவு, சிங்கள ஆட்சியாளர்களின் நிர்பந்தத்தால், பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இந்த ஒடுக்குமுறையை கண்டித்து, பல்கலை மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள், அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்தியதோடு, பல்கலை. மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் தொடர் போராட்டங்களால், மீண்டும் தமிழின படுகொலைக்கான முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு பல்கலை நிர்வாகம் முன்வந்தது. கடந்த ஜனவரி 11ஆம் தேதி துணைவேந்தரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் தமிழ் இனத்தின் அடையாளமான நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றைய தினம் 23-04-2021 வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் அடங்கிய வரலாறுகள் வரும் புத்தக தினங்களில் உலகம் அறிய செய்திட வேண்டுமென விரும்புகிறேன். சில புத்தகங்களை வாசித்து சில பக்கங்கள் முடித்து முடி வைத்துவிடுவோம். ஆனால் தமிழீழ வரலாறுகளை படிக்கும்போது நாம் மூட இயலாதவாறு தமிழர்களின் ரத்தமும் தமிழ் உணர்வும் போராட்ட குணமும் அறமும் படிப்பவர்களை நூலை மூட விடுவதில்லை. ஆகவே தமிழர்களே புத்தக தினங்களில் தமிழர்களான நாம் தமிழீழம் சார்ந்த புத்தகங்களை அறிமுகம் செய்து, பரிந்துரை செய்து தமிழீழ வரலாற்றை உலகின் முட்டுச்சந்துகளுக்கு எடுத்து செல்வோம். தமிழீழம் மலரும் நாளே தமிழர்களின் விடிவு நாள். பொதுவாக்கெடுப்பே தமிழீழத்தின் ஒரே தீர்வு. "தமிழர்களின் தாகம், தமிழீழ தாயகம்" தமிழீழ தாயகத்தில் கால் பதிக்க காத்திருக்கும் தமிழன்,
மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment