Wednesday, March 25, 2015

வலைதள கருத்துக்காக கைது செய்யும் மத்திய அரசின் 66-ஏ சட்ட பிரிவு செல்லாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு! அதை மீறி கைது செய்தால் நட்ட ஈடு வழங்கவும் உத்தரவு!

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததற்காக கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. அத்துடன் இத்தகைய கைது நடவடிக்கைக்கு பயன்படுத்துகிற தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசு 2008 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதில் சேர்க்கப்பட்ட 66 ஏ பிரிவின் படி, சமூக வலைதளம், மின் அஞ்சல் போன்றவற்றின் மூலமாக அவதூறான கருத்துகளை பரப்புவோரை கைது செய்து 3 ஆண்டுகள் வரை சிறையிலடைக்க முடியும். இந்த 66 ஏ பிரிவின் படி நாடு முழுவதும் வலைதளங்களில் சர்ச்சை கருத்தை தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தேசிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே தகவல் தொழில்நுட்ப சட்டம் பயன்படுத்த முடியும். சமூக வலைதளங்களில் மாற்று கருத்துகள், விமர்சனங்களை வெளியிடுவது குற்றமல்ல. இந்திய குடிமகன் தனது அடிப்படை பேச்சுரிமையை பயன்படுத்துவதை தடுக்க முடியாது. இதை தடுக்கவும் மத்திய அரசு விரும்பவில்லை. இதற்கும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளுக்கும் தொடர்பில்லை. இருப்பினும், சட்டப் பிரிவு 66ஏ துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்துக்காக மட்டுமே அதை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என குறிப்பிட்டுவிடமுடியாது என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 66- ஏ சட்டப் பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த சட்டப்பிரிவு தெளிவானதாக இல்லை. அரசாங்கம் என்பது வரலாம், போகலாம். ஆனால் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அரசியல் சாசனத்தில், அனைவருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே இது உள்ளது. இச்சட்டப்பிரிவில் உள்ள சில வார்த்தைகள் பொதுப்படையாக இருப்பது ஏற்புடையதல்ல. ஒருவருக்கு அவதூறாக தெரியும் விஷயம், மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம். எனவே இச்சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்தாகிறது என்று கூறினர்.


மறுமலர்ச்சி மைக்கேல்.

Friday, March 20, 2015

குமரி கீதம் - இது நம்ம குமரி!

குமரி கீதம் - இது நம்ம குமரி
லே மக்கா..! அடி பொழியா இருக்கு ல... 
பின்னம் பின்னம் பாக்கணும் போல இருக்கு டே..

நண்பர்களே..! அதிகம் பகிருங்கள். . 

மறுமலர்ச்சி மைக்கேல்...

Tuesday, March 10, 2015

வெற்றி வாகை சூடிய, கொடுப்பைக்குழி மக்களின் போராட்டம்!

கடந்த ஒரு வருட காலமாக குமரி மாவட்டத்தின், குருந்தன்கோடு பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட கொடுப்பைக்குழி கிராமத்தின், தினசரி குளிக்க மக்கள் பயன்படுத்தும் ஒட்டாங்குளத்திற்கு அருகில் அரசு அனுமதியின்றி பன்றி பன்ணை இயங்கி வந்த்தது. கொடுப்பைக்குழி சுற்றுவட்டார பொதுமக்கள், பல குழுக்களாக, பலமுறை பஞ்சாயத்து தலைவர், மாவட்ட ஆட்சியர், சுகாதார துறை அதிகார், மத்திய மந்திரி, மாநில சட்டசபை உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து கவுண்சிலர், பஞ்சாயத்து உறுப்பினர்கள் என அனைவரிடத்தும் மனுக்களை கொடுத்தும் பலனில்லாமலிருந்தது. 

பின்னர் கொடுப்பைக்குழி பொதுமக்கள் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியோர்கள் என சுமார் 300 க்கும் அதிகமானோர் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிராக பாரிய உண்ணாவிரத அறப்போராட்டத்தை மேற்கொண்டனர். இந்த அறப்போராட்டத்திற்கு இன்று விடை கிடைத்துள்ளது. 

இன்று காலை நேரத்தில் பன்றி பண்னைக்கு வந்த அரசு அதிகாரிகள் அனைத்து பன்றிகளையும் சிறை பிடித்ததோடு, அனுமதி இல்லாமல் இயங்கின பண்ணையையும் இழுத்து மூடினர். இதனால் கொடுப்பைக்குழி  சுற்றுவட்டார பொதுமக்கள் பேராபத்திலிருந்து விடுபட்டுள்ளனர். இதற்கு காரணமாயிருந்த இளைஞர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களுக்கு நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Tuesday, March 3, 2015

பன்னிரெண்டாம், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு வாழ்த்து!

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை (தேர்வுகள்) சார்பில் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 5 அன்றும்; பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 19 அன்றும் தொடங்குகின்றன. பல இலட்சக் கணக்கான மாணவக் கண்மணிகள் இந்தப் பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். 

மாணவ செல்வங்கள், தேர்வுக்காக வீட்டிலிருந்து புறப்படுவதற்கு, முன்னதாகவே தேர்வுக்கு தேவையான பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் மற்றும் இரத உபகரணங்களை தவறாது சரி செய்து எடுத்து செல்லும்படிய் அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

மேலும் மாணவர்கள் பயிலும் பள்ளிகள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே சென்று பதற்றமோ, அச்சமோ இன்றி இயல்பாக தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

அரசு பேருந்துகள், தேர்வுக்குப் புறப்பட்டுச் செல்லும் மாணவர்களை எல்லா நிறுத்தங்களிலும் நின்று ஏற்றி இறக்கிச் செல்லும் வகையில் அரசு வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும்.

தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிக்கூடப் பகுதிகளில், சத்தமாக ஒலிப்பெருக்கியை இயக்கிடுவதை பொதுமக்கள் முற்றாகத் தவிர்த்திட முன்வர வேண்டும்.

வருங்கால தமிழகத்தின் தூண்களான என் இனிய மாணவச் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய என் அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.