Tuesday, March 10, 2015

வெற்றி வாகை சூடிய, கொடுப்பைக்குழி மக்களின் போராட்டம்!

கடந்த ஒரு வருட காலமாக குமரி மாவட்டத்தின், குருந்தன்கோடு பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட கொடுப்பைக்குழி கிராமத்தின், தினசரி குளிக்க மக்கள் பயன்படுத்தும் ஒட்டாங்குளத்திற்கு அருகில் அரசு அனுமதியின்றி பன்றி பன்ணை இயங்கி வந்த்தது. கொடுப்பைக்குழி சுற்றுவட்டார பொதுமக்கள், பல குழுக்களாக, பலமுறை பஞ்சாயத்து தலைவர், மாவட்ட ஆட்சியர், சுகாதார துறை அதிகார், மத்திய மந்திரி, மாநில சட்டசபை உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து கவுண்சிலர், பஞ்சாயத்து உறுப்பினர்கள் என அனைவரிடத்தும் மனுக்களை கொடுத்தும் பலனில்லாமலிருந்தது. 

பின்னர் கொடுப்பைக்குழி பொதுமக்கள் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியோர்கள் என சுமார் 300 க்கும் அதிகமானோர் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிராக பாரிய உண்ணாவிரத அறப்போராட்டத்தை மேற்கொண்டனர். இந்த அறப்போராட்டத்திற்கு இன்று விடை கிடைத்துள்ளது. 

இன்று காலை நேரத்தில் பன்றி பண்னைக்கு வந்த அரசு அதிகாரிகள் அனைத்து பன்றிகளையும் சிறை பிடித்ததோடு, அனுமதி இல்லாமல் இயங்கின பண்ணையையும் இழுத்து மூடினர். இதனால் கொடுப்பைக்குழி  சுற்றுவட்டார பொதுமக்கள் பேராபத்திலிருந்து விடுபட்டுள்ளனர். இதற்கு காரணமாயிருந்த இளைஞர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களுக்கு நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

No comments:

Post a Comment