Tuesday, March 3, 2015

பன்னிரெண்டாம், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு வாழ்த்து!

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை (தேர்வுகள்) சார்பில் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 5 அன்றும்; பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 19 அன்றும் தொடங்குகின்றன. பல இலட்சக் கணக்கான மாணவக் கண்மணிகள் இந்தப் பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். 

மாணவ செல்வங்கள், தேர்வுக்காக வீட்டிலிருந்து புறப்படுவதற்கு, முன்னதாகவே தேர்வுக்கு தேவையான பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் மற்றும் இரத உபகரணங்களை தவறாது சரி செய்து எடுத்து செல்லும்படிய் அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

மேலும் மாணவர்கள் பயிலும் பள்ளிகள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே சென்று பதற்றமோ, அச்சமோ இன்றி இயல்பாக தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

அரசு பேருந்துகள், தேர்வுக்குப் புறப்பட்டுச் செல்லும் மாணவர்களை எல்லா நிறுத்தங்களிலும் நின்று ஏற்றி இறக்கிச் செல்லும் வகையில் அரசு வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும்.

தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிக்கூடப் பகுதிகளில், சத்தமாக ஒலிப்பெருக்கியை இயக்கிடுவதை பொதுமக்கள் முற்றாகத் தவிர்த்திட முன்வர வேண்டும்.

வருங்கால தமிழகத்தின் தூண்களான என் இனிய மாணவச் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய என் அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

No comments:

Post a Comment