Monday, January 18, 2016

தன்னிகரற்ற பொதுவுடமைவாதி முத்தரசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

எவன் பொருட்டும் மக்கள் நலனை காக்கவே படையமைத்து வலிமை சேர்த்துள்ளோம் என்று மக்கள் நலக் கூட்டணி அமைய காரணமாகயிருந்து கூட்டணி உருவானதும், வைகோவை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்க முன்னெடுத்தவருமாகிய இந்திய கம்யுனிஸ்டு தமிழ்நாடு மாநில செயலாளர், அன்பிற்குரிய ஐயா இரா.முத்தரசன் அவர்களுக்கு பிறந்த நாள்.

அலைபேசியில் அழைத்து நான் மறுமலர்ச்சி மைக்கேல், ஓமன் மதிமுக இணையதள அணியில் இருந்து பேசுகிறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா. என்றதும், சிரிப்புடன் நன்றி என்றார். வாழ்த்து தெரிவித்த போது அவர் அடைந்த ஆனந்தம் அளவிட இயலாது. 

எங்கள் தலைவர் வைகோவுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணி அமைத்து வெற்றி நடை போடுவதற்கு நன்றி ஐயா என்றேன். சரி என்று சிரித்துகொண்டே சொன்னதாய் உணர்ந்தேன். 

வரும் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெறும். மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். உற்சாகமாக பாடுபடுவோம். சரி என்றார் சிரிப்புடன்.

வெளிநாடுகளில் வாழும் மக்கள் நலக் கூட்டணியினர் தாயகம் திரும்புவார்கள். களப்பணியாற்றுவார்கள் என்றேன், மேலும் சிரித்துகொண்டே சரி என்றார். 

அப்படிபட்ட பெருமகனாரை வாழ்த்துவதும், அவர் சரி என்று சிரித்துகொண்டே ஏற்றுக்கொண்டதும் நெகிழ்ச்சியாகவே இருந்தது. மீண்டொருமுறை இரா.முத்தரசன் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ என்ற ஈரெழுத்து தாங்கிய பெருமகனை தலைவனாக கொண்ட தொண்டர்கள் கடல் கடந்து வாழ்ந்திருந்தாலும் வாழ்த்து சொல்லியிருப்பார்கள். அவரின் மனம் மிகுந்த ஆனந்தத்தை அடைந்திருக்கும் என்பதை என்னுடைய உரையாடலிலே அறிந்துகொண்டேன். 

உங்கள் பணிகள் சிறக்கட்டும். மக்களிடையே மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. திமுகவும், அதிமுகவும் வேண்டாமென்று மக்கள் நினைத்துவிட்டார்கள். அப்படியிருக்க ஊழலற்ற, நேர்மையாளர்களை கொண்ட மக்கள் நலக் கூட்டணியை வழி நடத்துகின்ற தலைவர்களாகிய உங்களுடன் நாங்களும் பயணிப்போம் என்பதில் பெருமையே.

வரும் காலம் மக்களுக்காக ஆட்சி அமைக்க மக்கள் நலக்கூட்டணியை ஆதரிப்போம். காரணமாயிருந்த முத்தரசன் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்களையும் வாழ்த்துதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment