Wednesday, January 6, 2016

ஈஸ்வரனே பெரிய சாமியாக உதித்து கழகத்தை காப்பவரே! உதித்த திரு வாழ்த்து!

கழத்திற்கே காவலனாகவும், காவலுக்கே ஈஸ்வரனாகவும் பிறந்து திருப்பூரில் திரும்பும் இடமெல்லாம், வைகோ என்னும் ஈரெழுத்தை பரப்பி, பரம்பொருளே பாராமுகத்தோடு அதிசயிக்கும் வகையில், களத்திலே நின்று போராளியாகவும், தலைவனின் கடமையை செவ்வனே செய்து தனது மாணவர் படைக்கு வலு சேர்த்துக்கொண்டிருக்கும் அண்ணனே!

உங்கள் பாசத்திற்கு முன்னால் எங்களால் பாசாங்கு செய்ய முடியவில்லை. பாசங்கள் அடிநாதத்திலிருந்து வருகிறதே, உங்களின் உணர்ச்சியூட்டுகின்ற வாயின் வார்த்தைகளால் இணையத்திலே உங்கள் இணக்கத்தால் ஈடில்லா இச்சையோடு உமை இசைபாட வைத்தீரே!

தம்பி என்ற வார்த்தையை ஈஸ்வரன்தான் கண்டுபிடித்தானா என்று சொல்லும் அளவிற்கு அளவிலா பாசத்தை பக்குவமாக எடுத்துரைத்து, பணிக்கிடையேயும், பல நிமிடங்கள் பயணித்த பக்குவப்பட்ட பண்பாளனே!

இன்று உங்கள் பிறந்த நாள், ஆனால் எங்களுக்கோ புது அன்பு பெருகும் நாள். புன்னைகையோடு பூ போட்டு பூலோகமே வாழ்த்தினாலும், அன்பு தம்பியின் அளவிலா பாசத்தோடு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொண்டனாய் அவதரித்து, மாவட்ட மாணவப் பட்டாளத்தையே இரண்டாம் தளபதியாக இருந்து, கட்டி காத்து, முன்னோக்கி வீர நடைபோட்டுக் கொண்டிருக்கும், உங்கள் வாழ்வில், வளமில்லா நன்மைகளை வளமாக்கி, ஈரெழுத்து மந்திரமாம் வைகோ என்ற பெருமகனின் ஆசியோடு கழகத்தில் உயர் நிலைகளை அன்போடு வாழ்த்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment