Tuesday, February 21, 2017

தாய் மொழி நாள்! என் தாய் மொழி தமிழ் வாழ்க!

ஒரு இனத்தை எந்த அடக்குமுறையுமில்லாமல் அழித்தொளிக்க முதலில் அவன் தாய் மொழியை அழித்தால் போதும்.

அப்படிதான் ஈழத்தில் சிங்களவன் அழிக்க நினைத்து யாழ்ப்பாணம் நூலகத்தை எரித்து தமிழ் மொழியை அழிக்க பார்த்தான்.

பின்னர் 2009 ஈழப்போரில் அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதி இந்தியத்தை ஆண்டுகொண்டிருந்த காங்கிரசுடன் 10க்கு மேற்ப்பட்ட அமைச்சர்களுடன் பதவி வகித்து ஆயுதங்களை இலங்கை சிங்களவர்களுக்கு கொடுத்தும், 1.5 மணி நேரம் சென்னையில் உண்ணாவிரதம் இருந்துவிட்டு கருணாநிதி ஈழத்தில் போர் நின்றுவிட்டது என பொய்யான வாக்குறுதி கொடுத்து தமிழக நிலமையை கட்டுப்படுத்த நினைத்து வீட்டிற்கு சென்றார்.

ஆனால் போர் நிற்காமல் தொடர்ந்ததால் 175000 அப்பாவி தமிழர்களை இனப்படுகொலை செய்ய காரணமாக இருந்தார் கருணாநிதி. ஈழத்திலும் கருணா என்பவன்தான் காட்டிக்கொடுத்தான்.

அப்படிபட்ட தமிழின அழிப்பு துரோகிகள் இன்று தமிழினம் பேசுகிறார்கள்.

தமிழர்களே! வருங்கால இளைய சந்ததியினரே! மாணவர்க்ளே! உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது வரலாற்றை முறையாக முழுமையாக படித்து தமிழினத்திற்கு துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்.

இன்று தாய்மொழி தினமாம். அன்று தமிழினம் ஈழத்தில் அழிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று புல்க்கொடி ஐக்கிய நாடு சபை முற்றத்தில் பட்டொளி வீசி பறந்திருக்குமே!

கெடுத்துவிட்டார்களே பாவிகள், தன் குடும்ப நலத்திற்காக...

ஆகவே தமிழர்களே நம் மொழியை அடையாளங்களை காக்க, இந்த நாளை கொண்டாடுவோம். இன்றைய ஒருநாளாவது நம் தாய் மொழியாம் தமிழில் பேசுவோம்.


தமிழ் மீது தீரா காதல் கொண்டு....
மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment