Wednesday, March 8, 2017

மாணவர்களே! பெண்களே! திரண்டு வாருங்கள்! கச்சதீவை மீட்டு தாருங்கள்! சிங்களவனை கண்டிக்கிறேன்!

என் சொந்த நிலமான கச்சதீவை சிங்களவன் எப்படி பயன்படுத்த முடியும்.

என் நிலத்தை நான் பயன்படுத்தியிருந்தால் என் சகோதரன் சிங்களவன் குண்டு துளையுண்டு மடிந்திருப்பானா...?

ஏ தமிழினமே! எதற்காக போராடுகிறாய் என தெரியாமலே போராடுகிறாய்! நீதி வேண்டுமென்கிறாய்...

நீதியென்றால், பணமா?, துப்பாக்கி சூடு நிறுத்தமா? மீன்பிடி அனுமதியா? கச்சதீவு மீட்பா? என சரியான வரையறை இல்லாத வரை இந்த இனப்படுகொலையை சிங்களவன் தமிழினம் மீது நடத்திக்கொண்டேயிருப்பான்.

நாம் இந்தியத்திடம் நீதி கிடைக்காதா என 2 நாட்கள் ஆயிரக்கணகானோர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டேயிருப்போம்.

எனவே இப்படி செய்வதால், இதுவரை நமக்கான நீதி கிடைத்திருக்கிறதா என எண்ணிப்பார்த்தோமா?

ஒரே தீர்வு! கச்சதீவு மீட்புதான் என உலக நாடுகள் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு,

"மாணவர்களே திரண்டு வாருங்கள். கச்சதீவை மீட்டு தாருங்கள்"

கச்சதீவை மீட்கும்போது தமிழகம் தானாக தனி நாடாகும் என உறுதியாக சொல்கிறேன்.

இல்லையென்றால் கீழே பதிந்திருக்கும் இந்த வீடியோவில் இருக்கும் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேந்த பிரிட்ஜோ என்ற மீசை எட்டிபார்க்கும் பருவத்திலிருந்த 21 வயது நிரம்பிய சகோதரனை சுட்டுக்கொன்றார்களே சிங்கள ஈன கொலையாளிகள், இதே நிலமை நமக்கும் ஏற்ப்படும். அப்போதுதான் நமக்கான வலியும் வேதனையும் தெரியும். இதை தடுக்க நீங்கள் எப்போது வீதிக்கு வரபோகிறீர்கள்.

நமக்கானது 2 நாள் ஒரு வார போராட்டம் அல்ல. உலகநாடுகள் தலையிடும் அளவிற்கான போராட்டம் வேண்டும். அதற்கு மாணவர்களும் பெண்களும்தான் முன்வர வேண்டும். இளைஞர்களும், பெரியவர்களும் பக்கபலமாக இருக்க வேண்டும்.

அவர்களை பாதுகாக்கும் அரணாக தமிழினத்திற்காக குரல் கொடுக்கும் தமிழர் நலன் சார்ந்த அரசியல் அமைப்புகள் அரண் அமைக்க வேண்டும்.

தொடர் போராட்டத்தில் கச்சதீவை மீட்டெடுத்து நம் சொந்த நிலத்தை ஏன் பயன்படுத்த முடியாது என உறுதிகொள்ளும் மன வலிமை ஏற்ப்படுத்துங்கள்.

நாளை நமது தமிழ்நாட்டுக்கு தனியான கொடி ஐநாவில் பறக்கும் வரை தொடர் போராட்டத்தை முன்னெடுங்கள்.

தமிழன் உலகின் மூலை முடுக்கெல்லாம் இருக்கிறானென்றால் அவன் திறமைக்காக மட்டுமே... ஆனால் அவன் நாடு அடைய மட்டும் திறமை இல்லையா என கேள்வி கேட்டோர் செவிகளில் பறையடிக்கும் விதமாக போராடி தமிழரசு அமையுங்கள்.

தமிழினத்தை, தமிழ் மொழியை பாதுக்காக்க முன்வருவீர்கள் என்ற உயரிய எண்ணத்தில்........

தமிழ் தாயக கனவுடன்,
மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment