Wednesday, March 22, 2017

பரவசமான பிரசாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

2011 ஆம் ஆண்டு பரமக்குடியில் நடந்த அந்த கொடுமையான கலவரம் மதுரை வரை சங்கமமாயிருந்தது. அந்த நேரத்தில் வைகோ மதுரை சிந்தாமணி பகுதியில் பயணித்து கொண்டிருந்த போது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஒரு இளைஞன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டார். பதறிப்போனார் வைகோ.

காவல்துறையின் சில கண்மூடிதனமான போலீஸ்காரர் சுட்டதில் புஜத்திலும், மார்பிலும் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த இளைஞனை, தலைவர் தாமே மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். 

மிகப்பெரிய மரணப்போராட்டத்திற்கு பிறகு உயிர் பிளைத்தான் அந்த இளைஞன்.  

அந்த இளைஞனே இன்னாளில் அந்த தலைவனின் நிழலாக பின் தொடருகிறான். 

ஆதலால் உலக தலைவர்கள் அறிந்துகொண்ட இளைஞன் தம்பி பிரசாந்த்.   வாழ்வின் எல்லா வளமும் புகழும் கிடைத்து பெருவாழ்வு வாழ தம்பி பிரசாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

அன்புடன், 
மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment