Saturday, September 26, 2020

கத்தார் மதிமுக நடத்திய பெரியார் அண்ணா பிறந்த நாள்-மைக்கேல் உரை!

கத்தார் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் இணையவழி கருத்தரங்கமாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் 25-09-2020 மாலை‌ நேரத்தில்  கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினராக திராவிட ரத்னா அன்பு தலைவர் வைகோ அவர்களின் போர்வாள் மல்லை தந்த முல்லை கழக துணை பொதுச் செயலாளர் ஆருயிர் அண்ணன் Mallai C E Sathya அவர்கள் நிகழ்வின் இறுதி பேருரையாக பெரியார் அண்ணா பற்றி விளக்கமாக உரையாற்றினார்கள். 

அண்ணன் ஏ.எஸ்.மோகன் மதிமுக அவர்களும் வேலை பளுவின் மத்தியிலும் உரை நிகழ்த்தினார்.

வளைகுடா அமைப்பாளர் வல்லம் பசீர் அருமையானதொரு உரை தந்தார்.

குழந்தைகளை நல்லவர்களாக வார்ப்பித்து பாடங்களை கற்பித்து வரும் ஆசிரியர் ஒரு சகோதரனாக என்னிடத்தில் அன்பு பாராட்டுகின்ற அன்பு சகோதரி ஆசிரியர் அன்பியல் ஜேஜே தனக்கே உரிதான செருக்கோடு அழகிய தமிழ் மணக்க‌ உரை நிகழ்த்தினார்.

கத்தார் நிர்வாகிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்து நல்லதொரு உரை நிகழ்த்தினார்கள்.

அடியேனும் ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் கலந்துகொண்டு பெரியா‌ர் அண்ணா பற்றி சில கருத்துக்களை கூறி சிற்றுரை நிகழ்த்தினேன்.

பெரியார் அண்ணா புகழ் ஓங்குக.

வாய்ப்பு வழங்கிய கத்தார் கழகத்தாருக்கு நன்றி.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment