Tuesday, September 1, 2020

ஆர் எஸ் எஸ் கொள்கையை நிறைவேற்ற, ₹600 கோடி நிதியா?

சென்னையில், 2019 ஜனவரி மாதம், நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், செங்கல்பட்டு அடுத்த பையனுாரில், 103.07 ஏக்கர் நிலத்தில், சாயி பல்கலை அமைக்க, தமிழக அரசின் உயர் கல்வித் துறைக்கும், சாயி கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.


சாயி பல்கலை, முதல் ஏழு ஆண்டுகளில், 600 கோடி ரூபாய் முதலீட்டில், 12 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில், 6,000 மாணவர்களுடன், 300 பேராசிரியர்கள், 300 நிர்வாக பணியாளர்களுடன் இயங்கும்.இரண்டாம் கட்டமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 30 லட்சம் சதுர அடி கட்டடத்தில், 20 ஆயிரம் மாணவர்கள், 1,000 பேராசிரியர்கள், 1,000 நிர்வாக பணியாளர்களுடன் இயங்க திட்டமிடப்பட்டுள்ளது.


செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிதாக அமைக்கப்பட உள்ள, சாயி பல்கலைக்கு, 600 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்ட, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று 31-08-2020, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அடிக்கல் நாட்டினார் என்பது மத்திய அரசுக்கு கைகூலியா தமிழக அரசு செயல்படுவதை உறுதிபடுத்துகிறது.


தனியார் பல்கலை கழகம் திட்டமிடுவதற்கு அரசின் நிதி எதற்கு வழங்கவேண்டும் என்ற கேள்வியே இப்போது மிஞ்சுகிறது.


தமிழக அரசு ஆர் எஸ் எஸ் கொள்கையை நிறைவேற்ற இந்த பல்கலை கழகத்திற்கு நிதியை வாரி வழங்குவது கண்டிக்கதக்கது.


மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment