Friday, August 13, 2021

அருணகிரிநாதர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

மனிதம் போற்றிய மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு அதிர்ச்சியாக இருக்கிறது.

மதம் சாராமல் மனிதம் மட்டுமே பார்த்த பெரியவர், சைவ மதமே தமிழர் மதம் என்று உரக்க சொன்னவர், இந்து அறநிலைய துறை என்பதை சைவ அறநிலையதுறை என்ற தமிழர்களின் உண்மையான பெயரை சூட்ட வேண்டுமென்று வலியுறுத்துயவர்‌, பெரும்‌ இலக்கியவாதி, அன்பு தலைவர் வைகோ அவர்கள் மீது எல்லையற்ற பாசம் வைத்திருந்தவர். சமூக‌ நல்லிணக்கத்தை வாழ்நாள் முழுதும் காத்தவர் மறைவு தமிழினத்திற்கு பேரிழப்பு.

ஆதீன மக்களுக்கும், தமிழர்களான சைவர்களுக்கு பேரிழப்பு. அவரது மறைவிற்கு ஒமான தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
13-08-2021

No comments:

Post a Comment