Wednesday, May 11, 2022

கருப்பு மே-ல் மகிந்த வீடு கருகியதில் சின்ன ஆறுதல்! பற்றி எரியும் வீடுகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைபவன் நானல்ல. ஆனால் யாருடைய வீடு பற்றி எரியும்போது மகிழ்ச்சியில் இருக்கிறேன் என பார்க்க வேண்டும். என் மக்களை கொத்து கொத்தாக சிதற சிதறடித்து கொன்றாய். 90 ஆயிரம் தாய்மார்களை விதவைகளாக்கினாய். எம் இளைஞர்களை காணாமல் ஆக்கினாய்‌. தாய்மார்கள் இன்றளவும் சாலையில் வந்து தனது மகன்கள் எங்கே என நீதி கேட்கிறார்கள். எம் இனத்தை நீ அழித்தாய் அன்று! உன்னையே உன் இனம் அழிக்க துடிக்கிறது இன்று! எம் மக்கள் வீடில்லாமல் அலைந்தனர் அன்று. உன் வீடோ‌பற்றி எரிகிறது இன்று. எம் பிஞ்சு‌‌ பாலகனை கொன்றாய். உன்‌‌ பாலகர்கள் ஓடி ஒழிகிறார்கள். சிங்களவர்களிடத்தில் இனவெறி தூண்டி தமிழர்களை கொன்றாய். இன்று சிங்களவர்களே உன்னை கொல்ல வகை தேடுகிறார்கள். இரண்டு சம்பவங்களும் மே மாதம்தான். எப்போது எவன் சாவான் என்று நான் நினைப்பதில்லை. ஆனால்‌ இருவர் சாகவேண்டுமென்றே நினைத்தவன். ஒருவன் செத்துவிட்டான். மிஞ்சியதோ நீதான். சிங்களவன் கையாலே உன் சாவு நிகழவேண்டும். அதை கண்டு‌ நான் மகிழ வேண்டுமென்றே நினைக்கிறேன். மகிந்த ராஜபக்சேவே உன் சாவை நோக்கி நான். தமிழினம் உன்னை வரவு வைக்க காத்திருக்கிறது. எங்கள் தியாகங்கள் வரலாறாகின்றன. எங்கள் நிலம்‌ எமதாகும் ஒரு நாள். புலிக்கொடி பட்டொளி வீசி பறக்கும். தமிழரின் தாகம், தமிழீழ தாயகம். தாயகம் மலருவதை காண, மைக்கேல் செல்வ குமார் 11-05-2021


via IFTTT

No comments:

Post a Comment