Saturday, February 28, 2015

குமரி மாவட்டம், குருந்தன்கோடு பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட, நாயக்கன்விளை கிறிஸ்தவ ஊழிய கட்டடத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பஞ்சாயத்து தலைவர், அனுமதியில்லாமல் இயங்கும் தீங்கு விளைவிக்கும் பன்றி பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?

குமரி மாவட்டம், குருந்தன்கோடு பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட, நாயக்கன்விளை கிராமத்தின், குட்டிமாந்தட்டு மடை பகுதியில், சடையால் புதூர் செல்லும் சாலையில், ஒரு கிறிஸ்தவர் தனது சொந்தமான நிலத்தில், சிறிய வீடு கட்டி குடிபுகுந்துள்ளார். தனது வீட்டின் மறு பகுதியில் வெளிபுறத்தில் சிறிய தொழுகை இடத்தையும் உருவாக்கி வயோதிபர்களுக்காக, குடும்ப வறுமையில் கக்ஷ்டபடுபவர்களுக்காக, மற்றும் பல்வேறு பிரச்சனைகளை கொண்டவர்களுக்கு ஜெபித்து வருகிறார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்களும் அதை விரும்பும் பொதுமக்களும் கலந்துகொள்கின்றனர். கடந்த ஐந்து வருடங்களாக இந்த ஊழியத்தை செய்து வரும் இவர் மக்கள் அதிகமாக வருவதால் சிறிய அளவிலான பெந்தேகோஸ்தே சபை போல விரிவு படுத்துகின்ற நிலையில், குருந்தன்கோடு பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி அவர்கள் தமிழக காவல்துறை உதவியுடன் அந்த தொழுகை நடக்கும் இடத்திற்கு சென்று, இப்படிபட்ட ஊழியங்களின் கட்டடங்களுக்கு தாங்கள் அனுமதி வாங்கவில்லையென்று கூறி அதை காவல்துறை உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளார். இது அவர் சார்ந்திருக்கும் பாஜக வின் கொள்கைகளை பறைசாற்றுகின்றது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். 

இப்படிபட்ட கிறிஸ்தவ ஊழியங்களை நடத்த கட்டடங்களுக்கு அனுமதியில்லை என்று கூறி அதை தடுக்கும் பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி அவர்கள், எந்த வித அரசு அனுமதியும் இல்லாமல் சட்ட விரோதமாக, பலமுறை பொதுமக்களின் போராட்டத்திற்கு பிறகும் கடந்த ஒரு வருட காலமாக கொடுப்பைக்குழி ஊரின் ஒரு பகுதியில் இயங்கிவரும் பன்றி பண்ணையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பன்றி பண்ணைக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என்ன? பலமுறை பொதுமக்கள் மனுகொடுத்தும் பொதுமக்களின் மனுக்களை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்வது ஏன்? பன்றி பண்ணையை பற்றி பஞ்சாயத்து தலைவர் வாய் திறக்காமல் மெளனமாக உலாவருவது ஏன்? பன்றி பண்ணை முதலாளிகளிடம் விசுவாசமாக இருக்கிறாரா? அவரோடு சேர்ந்து அவரின் கூட்டாளிகளையும் பன்றி பண்ணைக்கு எதிராக போராட விடாமல் தடுக்கிறாரா?

ஊர் நன்மைக்காக போராட்டத்தில் முனைப்போடு பணியாற்றுகின்ற இளைஞர்களின் மீது பொய் வழக்கு பதிவு செய்த பன்றி பண்ணை முதலாளிகளை கண்டித்து வழக்கை திரும்ப பெற செய்யாதது ஏன்? சொந்த ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் சொந்த ஊரிலே நிகழும் மக்கள் விரோத செயல்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சொந்த ஊர் மக்களையே காப்பாற்ற முடியாத பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி குருந்தன்கோடு பஞ்சாயத்து முழுவதுமுள்ள பகுதி மக்களை எப்படி காப்பற்றுவார்? சிறிய பிரச்சினைகளுக்கே தீர்வு காண முடியாத தலைவரின் தகுதிதான் என்ன?

இவ்வளவு கண்டனங்களுக்கு பிறகும் அதிகாரிகளையும் தன் வசமாக்கி பன்றி பண்ணையை அகற்றாமலிருக்கும் திரு.வைகுண்டமணி அவர்களை மக்கள் மன்றத்தில் நிறுத்தி தமிழக அரசு அவரது தலைவர் பதவியை பறிக்க வேண்டுமென்று முக நூல் வாயிலாக் வேண்டுகோள் வைக்கிறேன்.

அடுத்த தேர்தலில் இவர் போன்ற தலைவர்களுக்கு மக்கள் பணம் பாராமல் பொதுமக்கள் நலம் சார்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதாவது இவரை போன்றவர்களுக்கு புத்தி தெளிகிறதா என பார்ப்போம்.

போராடுவோம் வெற்றி பெறுவோம்.....

மறுமலர்ச்சி மைக்கேல்.

1 comment: