Wednesday, July 15, 2015

காமராஜர் பிறந்த நாளில் அவரது சாதனைகளை பரப்புரை செய்வோம்!

ஒருமுறை காரில் பய‌ணம் செய்து கொண்டிருந்த காமராசர் சிறுவன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தார்.

காரை நிறுத்த சொல்லி, அந்த சிறுவனை அழைத்து "ஏன் தம்பி, பள்ளிக்கூடம் போகலையா? என்று கேட்டார்.

காமராசர் முதலமைச்சர் என்பதை அறியாத சிறுவன் " பள்ளிக்கூடம் போனா சோறு யார் போடுவாங்க? என்று கேட்டான்.

"சோறு போட்டா பள்ளிக்கூடம் போறியா? என்று கேட்டதற்கு " போறேன்" என்றான் சிறுவன்.

உடனே பள்ளிகளில் "மதிய உணவுத் திட்டம்" கொண்டுவந்தார் காமராசர். அப்படி கல்விக்கு முக்கியத்துவம் தந்தார் கல்வித் தந்தை காமராசர். அவரது பிறந்த நாளில் அவரது சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைப்போம்.

மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment