Thursday, October 22, 2015

தலித் படுகொலை அலட்சியம், மத்திய மந்திரி வி.கே.சிங்கிற்கு கடும் கண்டனம்!

அரியானாவில் தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டனர். இதற்கு கருத்து தெரிவித்துள்ள மத்திய இணை மந்திரி வி.கே.சிங், நாட்டில் நடைபெறும் அனைத்திற்கும் அரசையே குறை கூறாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்றும் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “தலித் சிறுமிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இது இரு குடும்பங்களுக்கு இடையேயான பகையால் நிகழ்ந்தது. நாய் மீது யாரோ ஒருவர் கல் எறிந்தால், அதற்கு அரசு பொறுப்பில்லை என்று அலட்சியமாக பேசியுள்ளார்.

மத்தியை ஆளும் அமைச்சர் தனது நாட்டு மக்களை சாதி வெறியை தூண்டி விடுகிற செயல் போல இவரின் பேச்சு அமைகிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் இவர் இந்த வார்த்தையை திரும்ப பெற்று குறைந்தபட்சம், மன்னிப்பு கடிதம் வெளியிட வேண்டுமெனவும், இது போன்ற வார்த்தைதளில் நாட்டு மக்களை தரம் தாழ்த்தி அவதூறாக பேச கூடாது எனவும், தன் தவறையும், தான் ஒரு பொது ஜன பிரதிநிதி என்பதயும் உணர்ந்து திருந்தி மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment