Sunday, March 6, 2016

அன்புக்கு அடிமையாக்கும், பிரேம் அவர்களுக்கு உதித்த திரு வாழ்த்து!

பசுமை பூங்காவில்,

சோலையின் சுவாசத்தில்,

நாஞ்சில் நாட்டில் நல்லவராய்,

4பேர் கூட்டணியியை ஊரூராய்,

கொண்டு செல்லும் மாசற்ற மாணிக்கம்.

இலவசத்தை இல்லாதாக்கி பொழுதெல்லாம்,

புத்தியோடு உத்திகளை உவகையோடு செய்யும்,

உவர் நிலத்தை உழவனாய் கடைந்தெடுக்கும் உழவாளி!

விண்ணுயர மாளிகைகளை ஓமனில் ஓய்வறியாது உருவாக்கி,

வங்கி வரை நாவினால் வாள் வீசி வீரத்தை பறை சாற்றி,

கொஞ்சும் குமரிக்கு பெருமை சேர்த்த பெருந்தகை.

தாயகத்தின் கனவுகளை இயன்றளவு எளிதாக்கிட,

எல்லை தாண்டி, ஏகலைவனே இணையென்று,

குடும்பமே துணையென்று கூதூகலித்திட,

கழகத்தின் கண்மணிகள் அறியப்பெற,

இணையத்திலே இணைந்தோமே,

இணைந்தே களத்தில் உறவாக,

எந்நாளும் பணியாற்றிட,

பிறந்த நாள் வாழ்த்து.


அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment