Saturday, July 16, 2016

குமரி தொண்டர்படை தளபதியுடன் இனிமையான சந்திப்பு!

இன்று 16-07-2016 காலை தூக்கம் விழிக்கும் நேரத்தில் அலபேசி மணி அடித்தது. நான் சுதன் பேசுகிறேன். மஸ்கட்டிலிருந்து மர்மூல் செல்ல நிஸ்வா (பர்க்) வழியாக வருகிறேன். பார்க்க இயலுமா என்றார். 1 மணி 30 நிமிடத்தில் அங்கே வந்துவிடுவேன் என்றார். நான் கண்டிப்பாக வருகிறேன் என்றேன். ஆனால் அவரது பேருந்து 10 நிமிடம் முன்னதாகவே வந்துவிட்டது. 

அவருடைய 20 நிமிட காலை உணவு வேளையில் சந்திக்க திட்டமிட்டு டாக்சிக்காக காத்திருந்தால் அனைத்து டாக்சியும் நிரம்பியே சென்றது. காத்திருக்க நேரம் சென்றுகொண்டிருக்கிறது. அவருடைய அலைபேசி நான் வந்துவிட்டேன் எங்கே இருக்கிறீர்கள் என்றார். நான் சிறுது நேரத்தில் வந்துவிடுவேன் என்றேன். ஆனால் டாக்சி கிடத்தபாடில்லை. சுதனும் வந்துவிட்டார். 

டாக்சி கிடைக்காதோ பார்க்க இயலாதோ என்று எண்ணும்போது ஒரு வழியாக தனியார் மகிழுந்து வந்து அருகில் நின்றது. பாருங்கள். கழகம் குடும்பமாக இருப்பதால், எனது சந்திப்பை நிராகரித்து விடகூடாதென்று இயற்கையும் கருணை காட்டியதால் தனியார் மகிழுந்து கிடைத்தது எவ்வளவு ஒரு உணர்வுபூர்வமானது. டாக்சிக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்துவிட்டு இறங்கி ஓடி சென்றேன். அலைபேசியில் அழைத்தேன். உங்களை பார்த்துவிட்டேன் என்றார். அப்பொது நானும் பார்த்துவிட்டேன். இனிமையான உரையாடல்கள். அவருடன் ஊர் நண்பர்களும் இருந்தனர்.

அரபு தேசத்தில் தமிழ் பேசுகிறவர்களை கண்டாலே நமக்குள் உள்ளூர சந்தோச உணர்வு ஏற்ப்படும். அது இன்று காலையே கிடைத்தது. அவரது பேருந்து புறப்பட தயாராக நானும் விடைபெற்றேன்.

நன்றி வைகோவின் மெய்பாதுகாவலன், குமரி மாவட்ட தொண்டர்படை தளபதி ஆரோக்கிய சுதன்.

அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment