Thursday, September 1, 2016

அரபிக் கடலின் அடிவாரத்திலிருந்து நட்பின் திருமண நல் வாழ்த்து!

சின்ன வயதிலே சிரிப்போடு வேலியெல்லாம் விளையாடி,

மட்டை பந்து விளையாட்டில் மட்டை அடி பட்டதுண்டு,

முப்பிள் மிதிவண்டி பயணம், 3 ஊர்கள் தாண்டி செல்ல,

முப்பதே நிமிடத்தில் தன் நிலம் வந்து சேர்வோம்,

உன் அப்பா வரும் வேளை உனது நிலத்தில்,

அவர் சென்றதுமே பொது நிலத்தில் நண்பர்களுடன்,

சிறு குறு பருவம் முதல் வாலிபம் வரை ஒன்றானோம்.

கால் வயிறு கஞ்சிக்கு மொழி அறியா மாகாணம்,

இளமை கால வாழ்வியலின் வசந்தங்கள் தேடி வர,

உனை கட்டியணைக்க ஒரு குஞ்சு நாடி வர,

இமை பொழுதும் விழி மூடி புன் சிரிக்க,

லோகத்தினை கண்டபடி முகம் வருடி கண்ணயர,

புது வாழ்வின் பொன் நாட்கள் புது யுகங்கள் ஆகிவிட,

மலர் கட்டில் மாளிகையில் மனம்புகுந்து விலாசம் தேடி,

பூமகளை முத்தமிட்டு அன்பினால் அகம் தழுவி,

கண்ணாடி சில்லின் இசை போல மழலைகள் மொழி கேட்டு,

இன்பமுற்று இல்லறம் காண, இந்த புது நன்னாளில்,

கடல் கடந்து சுவாசித்தாலும் ஆக்சிஜனாய் நட்பு இருப்பதால்,

மனதார வாழ்த்துகிறேன். திருமண நல் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment