Saturday, December 10, 2016

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை! கொடுப்பைக்குழி பள்ளிகூடத்தில் முகாம்!

7 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டும் ஆதார் அட்டை வழங்குவது தொடர்பாக புகைபடத்துடன் தகவல் சேகரிக்க இன்று 10.12.2016 சனிக்கிழமை அதிகாரிகள் கொடுப்பைக்குழி அரசு தொடக்கப் பள்ளிக்கு வருகை தருகிறார்கள்.

குழந்தைகள் 5 வயதுக்கு குறைந்தவர்களாக இருப்பதால், விரல் ரேகை பதிவு போன்றவை பெற்றோருடையது மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் புகைப்படம் மட்டும் குழந்தையுடையதை பயன்படுத்தப்படும்.

எனவே குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் ஆதார் அட்டைகளுடன் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து செல்லுங்கள்.


இடம்: அரசு தொடக்கப்பள்ளி,கொடுப்பைக்குழி.
நாள்: 10.12.2016 சனிக்கிழமை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
தகுதியுள்ளோர்: 7 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் மட்டும்.
குறிப்பு: குருந்தன்கோடு பஞ்சாயத்திற்குட்படாத பொதுமக்களும் கலந்துகொண்டு பயனடையலாம்.


தகவல்: Dr. ராஜா - கொடுப்பைக்குழி

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்

Tuesday, December 6, 2016

புதிய முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

தமிழக முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெ.ஜெயலலிதா அவர்களை தொடர்ந்து அந்த வெற்றிடத்தை ஓ.பன்னீர் செல்வம் பூர்த்தி செய்து 26-12-2016 ல் தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருக்கு தமிழக மக்களில் ஒருவனாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுடன் சேர்ந்து பதவியேற்ற அமைச்சர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தமிழக மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தரவும், மக்களின் மன நிலையை அறிந்து நல்ல திட்டங்களை செயல்படுத்தவும், நேர்மையாகவும், சேவை எண்ணத்தோடு செயலாற்றவும் வேண்டுகிறேன்.

மைக்கேல் செல்வா குமார்.

Monday, December 5, 2016

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இன்று 05-12-2016 இரவு 11.30 மணி அளவில் மறைந்தார் என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 68 வயதான அவர் தன்னுடைய அதீத தைரியத்தால் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தமிழீழம் மலர பொதுவாக்கெடுப்புதான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றியவர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்கள் தொடுத்தது போரல்ல, இனப்படுகொலை என தீர்மானம் நிறைவேற்றினார். 7 தமிழர்கள் விடுதலைக்கும் போராடியவர். பல நல்ல திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியவர்.

தமிழக மக்களுக்கு ஒரு சாதனை பெண்மணியாகவே திகழ்கிறார். எவ்வளவு விமர்சனம் அவர் மீது வைத்தாலும், ஒரு பெண்மணியாக திறமையான நிர்வாகியாக அவர் மீது பெண் என்ற அடிப்படையில் ஒரு மதிப்பு உண்டு.

முதலமைச்சர் இழப்பு தமிழக மக்களை சோகத்தி ஆழ்த்தியிருப்பது நிதர்சனம்.
மறைந்த ஜெயலலிதா அவர்கள் உடலுக்கு தமிழக மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்த இருக்கின்ற வேளையில், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அதிமுக தொண்டர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வா குமார்.