Monday, December 5, 2016

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இன்று 05-12-2016 இரவு 11.30 மணி அளவில் மறைந்தார் என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 68 வயதான அவர் தன்னுடைய அதீத தைரியத்தால் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தமிழீழம் மலர பொதுவாக்கெடுப்புதான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றியவர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்கள் தொடுத்தது போரல்ல, இனப்படுகொலை என தீர்மானம் நிறைவேற்றினார். 7 தமிழர்கள் விடுதலைக்கும் போராடியவர். பல நல்ல திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியவர்.

தமிழக மக்களுக்கு ஒரு சாதனை பெண்மணியாகவே திகழ்கிறார். எவ்வளவு விமர்சனம் அவர் மீது வைத்தாலும், ஒரு பெண்மணியாக திறமையான நிர்வாகியாக அவர் மீது பெண் என்ற அடிப்படையில் ஒரு மதிப்பு உண்டு.

முதலமைச்சர் இழப்பு தமிழக மக்களை சோகத்தி ஆழ்த்தியிருப்பது நிதர்சனம்.
மறைந்த ஜெயலலிதா அவர்கள் உடலுக்கு தமிழக மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்த இருக்கின்ற வேளையில், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அதிமுக தொண்டர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வா குமார்.

No comments:

Post a Comment