Saturday, December 10, 2016

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை! கொடுப்பைக்குழி பள்ளிகூடத்தில் முகாம்!

7 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டும் ஆதார் அட்டை வழங்குவது தொடர்பாக புகைபடத்துடன் தகவல் சேகரிக்க இன்று 10.12.2016 சனிக்கிழமை அதிகாரிகள் கொடுப்பைக்குழி அரசு தொடக்கப் பள்ளிக்கு வருகை தருகிறார்கள்.

குழந்தைகள் 5 வயதுக்கு குறைந்தவர்களாக இருப்பதால், விரல் ரேகை பதிவு போன்றவை பெற்றோருடையது மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் புகைப்படம் மட்டும் குழந்தையுடையதை பயன்படுத்தப்படும்.

எனவே குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் ஆதார் அட்டைகளுடன் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து செல்லுங்கள்.


இடம்: அரசு தொடக்கப்பள்ளி,கொடுப்பைக்குழி.
நாள்: 10.12.2016 சனிக்கிழமை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
தகுதியுள்ளோர்: 7 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் மட்டும்.
குறிப்பு: குருந்தன்கோடு பஞ்சாயத்திற்குட்படாத பொதுமக்களும் கலந்துகொண்டு பயனடையலாம்.


தகவல்: Dr. ராஜா - கொடுப்பைக்குழி

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment