Thursday, September 14, 2017

இரண்டே நாளில் ஒட்டான்குளத்திற்கு மழை நீர் செல்லும் கால்வாயை உடைத்த விசமிகளுக்கு கண்டனம்!

2016 ஆம்வ ருடம் முதல் குமரி மாவட்டம், குருந்தன்கோடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொடுப்பைக்குழி ஒட்டான்குளத்தில், பருவ மழை பொய்த்து போன காரணத்தால், தண்ணீர் இல்லாமல் வறண்டு காட்சியளித்தது. பின்னர் அடுத்த பருவ மழை வருவதற்கு முன்னதாகவே குளத்தை தூர்வாரி தயார் நிலையில் வைத்தனர் ஊர் மக்கள். 

இதையொட்டி கடந்த இரண்டு தினங்களுக்கு 11-09-2017 முன்னர் மழை பெய்ததால், ஆற்று கால்வாய் வழியாக ஒட்டான் குளத்த்தை மழை நீர் எட்டியது. ஆனால் இடையில் செட்டிகுளம் அருகில் ஒட்டான்குளம் செல்லும் கால்வாய் உடைப்பு ஏற்ப்பட்டு மழை நீர் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் செட்டிகுளத்திற்குள்ளும், அருகிலுள்ள கால்வாயிலும் சென்று வீணானது.

இதை கண்டறிந்த கொடுப்பைக்குழி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, உடைப்பை மண் வைத்து நிரப்பியும், கனமழை வந்தால் திரும்பவும் உடைப்பு ஏற்ப்படாவண்ணம் மணல் மூட்டைகளை அடுக்கியும் தற்காலிகமாக மழை நீரை ஒட்டான் குளத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் ஒட்டான்குளம் தொடர்ந்து மழை பெய்தால் நிரம்பும் என எண்ணி கொடுப்பைக்குழி ஊர் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால், 13-09-2017 அன்று சரி செய்யப்பட்ட கால்வாயில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை சமூக விரோதிகள் உடைத்தெறிந்திருந்து, ஒட்டான்குளத்திற்கு மழை நீர் வராமல் தடுத்து கொடுப்பைக்குழி மக்கள் மகிழ்ச்சியை சீர்குலைத்திருக்கின்றனர்.

இந்த சமூக சீர்கேட்டு செயல் மூலம் விசமிகள், சமூகத்திற்கு எதிராக கொடுபைக்குழி மக்கள் விழித்தெழ வேண்டுமென அறைகூவல் விடுத்திருக்கின்றனர்.

இதனால் மழை நீர் ஒட்டான்குளத்தில் சென்று சேர முடியாத நிலையில், ஒட்டான்குளம் மூலம் பயன்பெறும் பல ஏக்கர் தென்னை, வாழை மரங்கள் அழியும் நிலையில் இருக்கிறது. விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் இருக்கின்றனர்.

ஆகவே, இந்த சமூக சீர்கேட்டி ஈடுபட்ட விசமிகளை வன்மையாக கண்டிப்பதோடு, காவல்துறை இந்த விடயத்தில் உடனே தலையிட்டு, உடைப்புகளை அகற்றிய விசமிகளை கண்டறிந்து தண்டனை கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் பஞ்சாயத்து நிர்வாகம், கால்வாயை நிரந்தரமாக நீர் செல்லும் வகையில் சரி செய்து ஒட்டான்குளத்திற்கு நீர் நிரப்பி கொடுப்பைக்குழி விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தாயக பணியில்,
மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment