Sunday, April 12, 2015

காவிரி நீரை கேட்ககூடாது என கூறிய சு.சுவாமிக்கு கண்டனம்!

ரெய்ச்சூரில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் என கூறிக்கொள்ளும் சுப்பிரமணியன் சுவாமி, காவிரி நீரை தமிழ்நாடு கேட்க கூடாது எனவும், தண்ணீரை பெற தமிழ்நாடு வேறு வழிகளை தேடவேண்டுமெனவும் கூறியுள்ளார். சுப்பிரமணியன் பாஜக முத்த தலைவரே இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் விதத்தில் பேசியிருப்பது மிகுந்த வருத்தத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. சுவாமியின் இந்த தமிழ் துரோக பேச்சு வன்மையாக கண்டிக்கதக்கது. 

காவிரி நீரை பெற தினந்தோறும் காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் கண்மணிகள், விவசாயிகள், பொதுமக்களென போராடிக்கொண்டிருக்கும் வேளையில் சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு பேசியுள்ளது தமிழர்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது. 

எனவே தமிழகத்திலிருந்து சென்றிருக்கும் மந்திரி பொன்.ராதாகிருக்ஷ்ணன் அவர்கள் சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சை கண்டிக்க வெண்டுமென கேட்டுகொள்கிறேன். மேலும் அமைச்சர் காவிரி நீர் பிரச்சினையில் மேகதாது அணைய தடுக்க பிரதமரிடத்தில் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, April 7, 2015

₹30 ல் பிளாஸ்டிக் ஆதார் அட்டை!

ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு 30 ரூபாய் கட்டணத்தில் ஏ.டி.எம் கார்டு வடிவில் ஆதார் அட்டை வழங்கும் சேவை அரசு பொது இ-சேவை மையங்களில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அட்டை கிழியவே கிழியாது என்பதுதான் முக்கிய அம்சமாம்.நாடுமுழுவதும் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 4.74 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை தண்ணீரில் விழுந்தால் கிழிந்துவிடும் அளவில்தான் உள்ளது.அதனால் ஆதார் அட்டை தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ வேறு அட்டை பெறுவதில் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. அதற்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை.அரசு இ-சேவை மையங்கள்இந்நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பொது இ-சேவை மையங்களில் ஆதார் அட்டைகளை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 254 தாலுகா அலுவலகங்களிலும் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏற்கனவே சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று வழங்குவது மற்றும் அரசின் சமூக நல திட்டங்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பதிவும் ஆன்லைனில் செய்யப்படுகின்றன. மேலும் பல்வேறு புதிய சேவைகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக ஏற்கனவே ஆதார் அட்டை கிடைக்கப் பெற்றவர்களுக்கு ஏடிஎம் கார்டு வடிவில் பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை வழங்கும் சேவை விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஏ.டி.எம் கார்டு வடிவில்"ஆதார் அட்டையை வழங்குவதற்கான உரிமத்தை யூஐடிஏஐ நிறுவனத்திடமிருந்து அரசு கேபிள் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி ரூ.30 கட்டணத்தில் பிவிசி என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக்கில் வண்ண ஆதார் அட்டை வழங்கப்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதை வங்கி ஏடிஎம் மற்றும் பான் அட்டைகளோடு சேர்த்து பாக்கெட்டில் வைத்துக்கொள்வது எளிது. இதற்காக யூஐடிஏஐ நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 196 பிரிண்டர்கள் சம்பந்தப்பட்ட பொது இ-சேவை மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இச்சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.ரூ.30க்கு ஆதார் கார்டுஆதார் அட்டைக்கு உரியவர் தனது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆதார் அட்டை பதியும்போது வழங்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு என்று அழைக்கப்படும் ஓடிபி எண்ணை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே பிளாஸ்டிக் ஆதார் அட்டையை பிரின்ட் செய்ய முடியும். விரைவில் கருவிழி படலத்தை பதிவு செய்து அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபரை அங்கீகரிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். ஒரு நபர் எத்தனை அட்டைகளை வேண்டுமானாலும் தலா ரூ.30 கட்டணத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த அட்டையை வேறு நபர் பெற வாய்ப்பில்லை" என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, April 5, 2015

ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

மனித குலத்தின் பாவங்கலை ரட்சிக்க துன்ப இருளில் இருந்து விடுவித்து நம்பிக்கை ஒளி ஏற்றும் உன்னதத் திருநாள்தான், உலகெங்கும் கிறித்தவ மக்கள் போற்றிக் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை நாளாகும்.
அன்பையும் கருணையையும், தீங்கு புரிந்தோருக்கும் நன்மை செய்யும் மனிதநேயத்தையும் போதித்த இயேசு கிறிஸ்து நிந்தைக்கு ஆளாகி, பிலாத்து சபையில் வேதபாரகர்களின் தூண்டுதலால் ஏற்பட்ட நிர்பந்தத்தால் தண்டனைக்கு உள்ளாகி, சிலுவையைச் சுமந்தார், சித்ரவதைக்கு ஆளானார்.

கொல்கதா எனும் கபால ஸ்தலத்தில் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். சிரசிலும், கைகளிலும், கால்களிலும் ஆணிகள் அறையப்பட்டன. தாங்கள் செய்வது அறியாமல் செய்யும் இவர்களை பிதாவே மன்னியும்! என்று கூறியவாறு உயிர் நீத்தார்.

மூன்றாம் நாள் இயேசுநாதர் உயிர்த்து எழுந்த ஞாயிற்றுக்கிழமை புனித ஈஸ்டர் திருநாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. காலம் காலமாக தமிழகம் சமய நல்லிணக்கத்தைப் போற்றி வருகிறது. ஆனால் சகிப்புத்தன்மைக்கும், சமய ஒற்றுமைக்கும், மதச்சார்பற்ற கொள்கைக்கும் அறைகூவலும் அச்சுறுத்தலும் தலைதூக்கி வரும் இன்றைய காலகட்டத்தில் இயேசுநாதரின் அமுத மொழிகளை நினைவில் கொண்டு மனிதநேயத்தையும், சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க ஈஸ்டர் பண்டிகை நாளன்று உறுதி ஏற்போம்!

தமிழகத்திலும், உலகம் முழுதும் வாழும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, March 25, 2015

வலைதள கருத்துக்காக கைது செய்யும் மத்திய அரசின் 66-ஏ சட்ட பிரிவு செல்லாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு! அதை மீறி கைது செய்தால் நட்ட ஈடு வழங்கவும் உத்தரவு!

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததற்காக கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. அத்துடன் இத்தகைய கைது நடவடிக்கைக்கு பயன்படுத்துகிற தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசு 2008 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதில் சேர்க்கப்பட்ட 66 ஏ பிரிவின் படி, சமூக வலைதளம், மின் அஞ்சல் போன்றவற்றின் மூலமாக அவதூறான கருத்துகளை பரப்புவோரை கைது செய்து 3 ஆண்டுகள் வரை சிறையிலடைக்க முடியும். இந்த 66 ஏ பிரிவின் படி நாடு முழுவதும் வலைதளங்களில் சர்ச்சை கருத்தை தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தேசிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே தகவல் தொழில்நுட்ப சட்டம் பயன்படுத்த முடியும். சமூக வலைதளங்களில் மாற்று கருத்துகள், விமர்சனங்களை வெளியிடுவது குற்றமல்ல. இந்திய குடிமகன் தனது அடிப்படை பேச்சுரிமையை பயன்படுத்துவதை தடுக்க முடியாது. இதை தடுக்கவும் மத்திய அரசு விரும்பவில்லை. இதற்கும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளுக்கும் தொடர்பில்லை. இருப்பினும், சட்டப் பிரிவு 66ஏ துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்துக்காக மட்டுமே அதை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என குறிப்பிட்டுவிடமுடியாது என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 66- ஏ சட்டப் பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த சட்டப்பிரிவு தெளிவானதாக இல்லை. அரசாங்கம் என்பது வரலாம், போகலாம். ஆனால் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அரசியல் சாசனத்தில், அனைவருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே இது உள்ளது. இச்சட்டப்பிரிவில் உள்ள சில வார்த்தைகள் பொதுப்படையாக இருப்பது ஏற்புடையதல்ல. ஒருவருக்கு அவதூறாக தெரியும் விஷயம், மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம். எனவே இச்சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்தாகிறது என்று கூறினர்.


மறுமலர்ச்சி மைக்கேல்.

Friday, March 20, 2015

குமரி கீதம் - இது நம்ம குமரி!

குமரி கீதம் - இது நம்ம குமரி
லே மக்கா..! அடி பொழியா இருக்கு ல... 
பின்னம் பின்னம் பாக்கணும் போல இருக்கு டே..

நண்பர்களே..! அதிகம் பகிருங்கள். . 

மறுமலர்ச்சி மைக்கேல்...

Tuesday, March 10, 2015

வெற்றி வாகை சூடிய, கொடுப்பைக்குழி மக்களின் போராட்டம்!

கடந்த ஒரு வருட காலமாக குமரி மாவட்டத்தின், குருந்தன்கோடு பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட கொடுப்பைக்குழி கிராமத்தின், தினசரி குளிக்க மக்கள் பயன்படுத்தும் ஒட்டாங்குளத்திற்கு அருகில் அரசு அனுமதியின்றி பன்றி பன்ணை இயங்கி வந்த்தது. கொடுப்பைக்குழி சுற்றுவட்டார பொதுமக்கள், பல குழுக்களாக, பலமுறை பஞ்சாயத்து தலைவர், மாவட்ட ஆட்சியர், சுகாதார துறை அதிகார், மத்திய மந்திரி, மாநில சட்டசபை உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து கவுண்சிலர், பஞ்சாயத்து உறுப்பினர்கள் என அனைவரிடத்தும் மனுக்களை கொடுத்தும் பலனில்லாமலிருந்தது. 

பின்னர் கொடுப்பைக்குழி பொதுமக்கள் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியோர்கள் என சுமார் 300 க்கும் அதிகமானோர் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிராக பாரிய உண்ணாவிரத அறப்போராட்டத்தை மேற்கொண்டனர். இந்த அறப்போராட்டத்திற்கு இன்று விடை கிடைத்துள்ளது. 

இன்று காலை நேரத்தில் பன்றி பண்னைக்கு வந்த அரசு அதிகாரிகள் அனைத்து பன்றிகளையும் சிறை பிடித்ததோடு, அனுமதி இல்லாமல் இயங்கின பண்ணையையும் இழுத்து மூடினர். இதனால் கொடுப்பைக்குழி  சுற்றுவட்டார பொதுமக்கள் பேராபத்திலிருந்து விடுபட்டுள்ளனர். இதற்கு காரணமாயிருந்த இளைஞர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களுக்கு நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Tuesday, March 3, 2015

பன்னிரெண்டாம், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு வாழ்த்து!

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை (தேர்வுகள்) சார்பில் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 5 அன்றும்; பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 19 அன்றும் தொடங்குகின்றன. பல இலட்சக் கணக்கான மாணவக் கண்மணிகள் இந்தப் பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். 

மாணவ செல்வங்கள், தேர்வுக்காக வீட்டிலிருந்து புறப்படுவதற்கு, முன்னதாகவே தேர்வுக்கு தேவையான பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் மற்றும் இரத உபகரணங்களை தவறாது சரி செய்து எடுத்து செல்லும்படிய் அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

மேலும் மாணவர்கள் பயிலும் பள்ளிகள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே சென்று பதற்றமோ, அச்சமோ இன்றி இயல்பாக தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

அரசு பேருந்துகள், தேர்வுக்குப் புறப்பட்டுச் செல்லும் மாணவர்களை எல்லா நிறுத்தங்களிலும் நின்று ஏற்றி இறக்கிச் செல்லும் வகையில் அரசு வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும்.

தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிக்கூடப் பகுதிகளில், சத்தமாக ஒலிப்பெருக்கியை இயக்கிடுவதை பொதுமக்கள் முற்றாகத் தவிர்த்திட முன்வர வேண்டும்.

வருங்கால தமிழகத்தின் தூண்களான என் இனிய மாணவச் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய என் அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.