Wednesday, July 15, 2015

காமராஜர் பிறந்த நாளில் அவரது சாதனைகளை பரப்புரை செய்வோம்!

ஒருமுறை காரில் பய‌ணம் செய்து கொண்டிருந்த காமராசர் சிறுவன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தார்.

காரை நிறுத்த சொல்லி, அந்த சிறுவனை அழைத்து "ஏன் தம்பி, பள்ளிக்கூடம் போகலையா? என்று கேட்டார்.

காமராசர் முதலமைச்சர் என்பதை அறியாத சிறுவன் " பள்ளிக்கூடம் போனா சோறு யார் போடுவாங்க? என்று கேட்டான்.

"சோறு போட்டா பள்ளிக்கூடம் போறியா? என்று கேட்டதற்கு " போறேன்" என்றான் சிறுவன்.

உடனே பள்ளிகளில் "மதிய உணவுத் திட்டம்" கொண்டுவந்தார் காமராசர். அப்படி கல்விக்கு முக்கியத்துவம் தந்தார் கல்வித் தந்தை காமராசர். அவரது பிறந்த நாளில் அவரது சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைப்போம்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, July 14, 2015

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசை கொடுத்தவர் இசையோடு கலந்துவிட்டார்!

மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாநதன், ‘நீராடும் கடலுடுத்த' என்ற தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.சுமார் 1200 படங்களுக்கும் மேல் இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். 87 வயதான எம்.எஸ்.விஸ்வநாதன் சமீபகாலமாக முதுமை காரணமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். 

இந்நிலையில், இன்று அதிகாலை மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.பழம்பெரும் இசையமைப்பாளரான எம்.எஸ்.வி.யின் சாதனைகள், பெருமைகள் ஏராளம். அவற்றில் ஒன்று தான் தமிழ்த் தாய் வாழ்த்திற்கு இசையமைத்தது.தமிழ்த் தாய் வாழ்த்தான ‘நீராடும் கடலுடுத்த' பாடலுக்கு எம்.எஸ்வி. மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்திருந்தார். இந்தப் பாடலை ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜனும், இசையரசி பி.சுசீலாவும் இணைந்து பாடினார்கள்.இந்தப் பாடலே இன்றளவும் பள்ளிகள் உட்பட அனைத்து இடங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

அப்படிபட்ட இசை மாமேதை இழப்பு உலகமெங்கும் வாழும் இசை உணர்வாளர்களுக்கு பேரிளப்பாகும். அன்னார் அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.


மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, June 30, 2015

சட்டத்தை மதிக்காமல் சீருடையுடன் மொட்டையடித்த அதிமுக போலீஸுக்கு கடும் கண்டனம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து தேனியில் அ.தி.மு.க.,வினர் ஏராளமானோர் மொட்டை போட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் சீருடையுடன் மொட்டை போட்டுக்கொண்டார். இது அங்கு வந்திருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் அவரது பெயர் வேல்முருகன். இடைத்தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்று இத்தனை நாளாக விரதம் இருந்த நேரு சிலை அருகில் மொட்டை போட்டு தனது வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார். வேல்முருகனின் விரதம் இதோடு முடியவில்லையாம். பிப்ரவரி மாதம் வரும் ஜெயலலிதா பிறந்த நாளில், மிக அதிக எடையுள்ள வாகனத்தை தன்மீது ஏற்றி சாதனை புரிய உள்ளாராம்.

இப்படிபட்ட அரசு அதிகாரிகளை உடனே பணி நீக்கம் செய்யவேண்டும். ஆளூம் கட்சி ஆதரவு ஆட்கள் என்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், எந்த சட்டத்தையும் மீறலாம் என்ற மனப்பான்மை அதிமுகவினரிடையே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாகவே அராஜக ஆட்சியை அதிமுக கட்டவிழ்த்துள்ளது மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக போலீஸ் அதிகாரி சீருடையோடு பணியிலிருக்கும்போதே சட்டத்தை மீறியுள்ளது அதிமுக அரசின் அடாவடியை காட்டியுள்ளது. இதற்கு மத்திய புலனாய்வு துறையானது ஆய்வு செய்து அந்த காவலரை தேச துரோக வழக்கில் கைது செய்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டுமென்று கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

Thursday, June 25, 2015

மனித உறவுகள் சீராக இருக்க A to Z 🔔

இல்லத்தில்...அலுவலகத்தில்... பொது வாழ்வில்...
மனித உறவுகள் சீராக இருக்க A to Z 🔔
 
🔔APPRECIATION - மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்
 
🔔BEHAVIOR - புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச்சொற்களைச் சொல்லவும் கூட நேரம இல்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள்
 
🔔COMPROMISE - அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்
 
🔔DEPRESSION - மற்றவர்களின் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்
 
🔔EGO - மற்றவர்களை விட உங்களையே உயர்த்த கர்வபடாதீர்கள்
 
🔔FORGIVE - கண்டிக்கக்கூடிய அதிகாரமும் , நியாயமும்’ உங்கள் பக்கம் இருந்தாலும் எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்
 
🔔GENUINENESS - எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையாக’ கையாலுங்கள்
 
🔔HONESTY - தவறு செய்தால் உடனே’ மன்னிப்புக் கேட்பதைக்’
கௌரவமாகக் கருதுங்கள்
 
🔔INFERIORITY COMPLEX – எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள் நான் சிறியவன் என்று தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்
 
🔔JEALOUSY - பொறாமை வேண்டவே வேண்டாம் கொண்டவனையே அழிக்கும்.
 
🔔KINDNESS - இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்
 
🔔LOOSE TALK - சம்பந்தளிலாமலும் , அர்த்தமில்லாமலும் பின் அறியாமலும் பேச வேண்டாம்
 
🔔MISUNDERSTANDING - மற்றவர்களைத் தவறாகப புரிந்துகொள்ளதீர்கள்
 
🔔NEUTRAL - எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம் .பேசிவிட்டு முடிவு எடுங்கள் முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்
 
🔔OVER EXPECTATION -அளவுக்கு’ அதிகமாகவும்’ தேவைக்கு அதிகமா ஆசைப்படாதீர்கள்
 
🔔PATIENCE - சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்
 
🔔QUIETNESS -தெரிந்ததை மாத்திரமே அநேகப் பிரச்சனைகளுக்குக் காரணம் தெரியாபததைப் பேசுவதுதான்.கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்
 
🔔ROUGHNESS - பண்பில்லாத வார்தைகளையும் தேவைஇல்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்
 
🔔STUBBORNNESS - சொன்னதே சரி செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்
 
🔔TWISTING - இங்கே கேட்டதை அங்கேயும் அங்கே கேட்டதை  இங்கேயும் சொல்வதை விடுங்கள்
 
🔔UNDERESTIMATE - மற்றவர்களூக்கு மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்
 
🔔VOLUNTARY -அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று  காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள்.பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள் பின்பு அதற்கு பதில் கொடுங்கள்
 
🔔WOUND - எந்தப் பேச்சும் , செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்
 
🔔XEROX - நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டடும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்தவேண்டும்
 
🔔YIELD - முடிந்தவரை விட்டுக்கொடுங்கள் விட்டுகொடுப்பவன் கெட்டுப்போவதில்லை, கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை
 
🔔ZERO - இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியம் ஆகும்

மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, May 1, 2015

தொழிலாளர்களுக்கு நெஞ்சம் நிறைந்த மேதின வாழ்த்து!

ஊரை அடித்து உலையில் போடுகிறவர்கள் மத்தியில், நெற்றி வேர்வை நிலத்தில் சொட்ட சொட்ட கக்ஷ்டபட்டு உழைக்கும் தொழிலாளர்கள், மற்றும் உண்மையாக பணி செய்யும் அலுவலக தொழிலாளர்கள் அனைவரும், மே தினமான 1ஆம் தியதி பெருந்திரளான மக்கள் ஒன்றாக கூடி தொழிலாளர் தினத்தை கொண்டாடி மகிழ வேண்டும். 

தொழிலாளர்களை பெருமுதலாளிகள் அடிமைகளாக நடத்துவதை எதிர்த்தும், தொழிலாளர்களின் ஊதியங்கள் சரியாக கிடைக்கவும், பென்சன் காலங்களில் வயது முதிர்ந்த நிலைகளில் மருத்துவ காப்பீடுகளை இலவசமாக கிடைக்கவும் இந்த நன்னாளில் மத்திய அரசானது தொழிலாளர்களின் நிலையை அறிந்து நல்ல திட்டங்களை அறிவிக்க வேண்டும். 

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் இந்தியாவில் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் தினமான மே 1 ஆம் தியதி வைகோ அவர்களின் தனி நபர் மசோதா மூலம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டதுதான் இன்றளவும் மக்கள் இந்த தினத்தை கொண்டாட வசதியாக அமைந்துள்ளது.

தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களில் ஒருவரையொருவர் அன்பு பாராட்டி, இயலாதவர்களுக்கு உதவி செய்து, அறியாதவர்களுக்கு கற்பித்து, கோபப்படுகிறவர்களுக்கு அன்பை ஊட்டி, எரிச்சலடைபவர்களுக்கு வேலையின் தன்மையை விளக்கி, செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து போற்றி தகுந்த மரியாதை கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை நல்ல முறையில் செலவிட்டு, குடும்பத்தையும், சமுதாயத்தையும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல சபதம் ஏற்பதோடு, இந்த நாளில் தொழிலாளர்களுக்கு எனது அன்பு நிறைந்த தொழிலாளர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, April 28, 2015

இளைஞர்களை பாழாக்கும் குளிர் பானங்கள் உசார்!!!!

அன்பு தமிழ் உறகளே!!! 

இந்த படத்திலுள்ள குளிர் பானங்களை பாருங்கள். அதில் அடங்கியுள்ள சர்க்கரை அளவையும் பாருங்கள். இது மக்களுக்கு தீமையை விளைவிக்க கூடியது... அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் நாகரீகம் என்று இப்படிபட்ட குளிர் பானங்களை அதிக விலை கொடுத்து வாங்கி குடிக்கிறார்கள். இதை பற்றி விழிப்புணர்வு செய்யும் பொருட்டு, அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் இந்த படத்தை பதியுங்கள். வருங்கால நமது தலைமுறையையாவது காப்பாற்ற முயல்வோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, April 14, 2015

சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!

பிறக்கும் போது அம்மா என்னும் முதல் வார்த்தையையே தமிழில்தான் பேசி தொடங்குகிறது குழந்தை. அப்படிப்பட்ட பெருமை தமிழுக்கு உண்டு. சித்திரை திரு நாளிலே தமிழர்கள் அதனை புத்தாண்டாகவும் கொண்டாடி மகிழுகின்றனர். இந்த தினத்திலே அன்பு ஓங்கவும், சமாதானம் பெருகவும், ஒற்றுமை பெருகவும் இந்த தமிழர் சித்திரை திருநாளில் சபதம் ஏற்போம். 

இந்த நாளை குடும்பத்தோடு கொண்டாடி மகிழ சித்திரை திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்