Friday, April 8, 2016

கழகத்தை உயிர் மூச்சாக கருதும் தொண்டனின் மதிமுக கொடி வண்ணம், பூசிய வீட்டின் சுவரை மறைப்பதா? பாசிச ஜெயலலிதாவின் காவல்துறைக்கு ஓமன் மதிமுக இணையதள அணி கடும் கண்டனம்!

மதிமுக என்னும் பேரியக்கம் தொடங்கும் முன்பே, தலைவரின் வீர உரைகளாலும், செயல்களாலும் ஈர்க்கப்பட்டு தமிழின முதல்வராக போற்றப்படும் வைகோ அவர்களின்  கொள்கைகளை பின்பற்றியும், கழகத்தின் கண்மணிகளுடன் கழக தொடக்கம் முதல் இன்று வரை உறுதியோடு கழகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர், ஓமன் மதிமுக இணையதள அணியின் தலைமை உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வீரமங்கலம் ஊராட்சியின், முள்ளியான் வயல் என்னும் கிராமத்தை சார்ந்த ஆருயிர் சகோதரர் ஜகுபர் அலி அவர்கள்.

தனது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது சொந்த ஊரில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். கடுமையான வறுமையின் மத்தியிலும் கழகத்தின் மேலுள்ள காதலால் கழகத்திற்காக ஆற்றும் பணிகளை அவர் நிறுத்தி வைக்காமல், தன்னாலான பணிகளை உலக மக்களிடத்தில் உணர்ச்சிபூர்வமாக எடுத்து செல்கிறார்.

ஜகுபர் அலி அவர்கள் வைகோ என்ற மனிதனின் கொள்கை பிடிப்பால் வைகோ அவர்களை தீவிரமாக உள்வாங்கியதால், தன்னுடைய வீட்டு சுவர், கதவு மற்றும் ஜன்னல் ஆகிய அனைத்தையும் மதிமுக கொடி தாங்கிய சிகப்பு கருப்பு சிகப்பாக மாற்றியிருந்தார்.

அது மட்டுமலாமல், வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் எடுத்த வைத்த வாதங்களால், தன்னை மகனாக கருதிய வாஜ்பாய் அவர்களிடத்திலும் பேசி குவைத் நாட்டின் தலால் ஆஸ்மின் என்ற பெண்ணை, ஆந்திர காதர் பாட்சாவுடன் வாழ அனுமதி வாங்கி கொடுத்து மனிநேயத்தால், அந்த பெண்ணின் பெயரையே தனது மூத்த மகளுக்கு (10 வயது இப்போது) பெயராக சூட்டி அழகு பார்த்தார் ஜகுபர் அலி அவர்கள். மேலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் அனைவருக்குமே கழக கொடி வண்ணத்தினாலான உடையை வாங்கி கொடுத்து ஆனந்தமடைந்தார்.

கழக கொடி வண்ணம் வீட்டை அலங்கரித்திருந்தாலும், வீட்டின் கூரைக்கு மேல் பகுதியிலும் மதிமுக கொடி பறக்க வேண்டுமென்று எண்ணி மதிமுக கொடியை வீட்டில் மேல் மின் இணைப்பு தாங்கி செல்லும் கம்பத்திலே பட்டொளி வீசி பறக்கவிட்டார்.

இதையறிந்த ஜெயலலிதாவின் காவல் துறை 3 வார காலத்திற்கு முன் ஜகுபர் அலி அவர்களின் வீட்டிற்கு வந்து கொடியை கழற்ற வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஜகுபர் அலி கொடியை கழற்ற முடியாது, கொடி என்னுடைய வீட்டில்தான் பறக்கிறது. பொது வெளியில் பறக்கவில்லை. இன்று சாயங்காலத்திற்குள் எங்கள் கூட்டணியிலுள்ள 5 கட்சிகளின் கொடியையும் கட்டுவேன் என்று சவால் விட்டு சாயங்காலத்திற்குள் வீட்டின் மேல் 5 கட்சிகளின் கொடியை பறக்கவிட்டுள்ளார்.

அதன் பின்னர் எப்போதும் அவர் வீட்டிற்கு தாலுகா அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகளும் வந்து கொடியை கழற்ற மிரட்டியபடியே இருந்துள்ளனர். சுவரிலோ, கதவிலோ, நீங்கள் உடுத்தும் உடையிலோ கட்சி சின்னம் இருக்க கூடாது என்று பேசி சென்றுள்ளனர் காவல்துறையினர். அப்போது அவர் என்னுடைய பிள்ளைகள் உடையிலும் மதிமுக கொடிதான் இருக்கிறது எப்படி அகற்ற முடியும் என பேசியிருக்கிறார்.

இப்படி பரபரப்பான சூழலில் ஊர் பெரியவர்கள் சொல்லியதால், அவர்கள் மேலுள்ள மரியாதையால் வீட்டின் மேல் பறக்கவிட்ட கொடியை இறக்கினார்.

ஆனாலும் 5 நாட்களுக்கு முன்னர் தாலுகா அலுவலர் மற்றும் காவல்துறையினர் ஜகுபர் அலி அவர்களின், வீட்டிற்கு வந்து அவருடைய வீட்டின் சுவரில் வரைந்துள்ள மதிமுக கொடியின் நடுவிலுள்ள கருப்பு வண்ணத்தை செய்தி தாள்கள் கொண்டு மறைத்துள்ளனர். இதையும் பொறுத்துக் கொண்டார் ஆருயிர் சகோதரர் ஜகுபர் அலி அவர்கள்.

இந்நிலையில், நேற்று 07-04-2016 இரவு 9.30 மணி அளவில் அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டைக்கு பேருந்தில் பயணித்த போது ஒரு காவலர் அவரின் இருக்கைக்கு அருகில் அமர்ந்தார். அவரும் காவலர் சாதாரணமாக அமருகிறார் என்று நினைக்க ஜகுபர் அலி அவர்கள் இரவு பயணத்தால் சிறுது கண் அயர அருகில் இருந்த காவலர் ஜகுபர் அலி அவர்களின் கையில் விலங்கு மாட்டியிருக்கிறார். இந்த விலங்கு மாட்டிய கையோடுதான் துணிவுடன் காவலருடன் சேர்த்து செல்பி எடுத்தி அனுப்பி யிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது திட்டமிட்டுதான் அருகில் அமர்ந்து கைது செய்திருக்கிறார்கள் என்பது வெளிச்சமாகிறது. உடனே ஜகுபர் அலி அவர்களும் ஏன், எதற்காக கைது செய்துள்ளீர்கள் என்று கேட்க, நீ கட்சி கொடி வைத்து பிரச்சினை செய்கிறாய் என்று சொல்லி புதுக்கோட்டை டவுண் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்.

அப்போதும் ஜகுபர் அலி அவர்கள் என் பிள்ளைகளின் உடையிலும் மதிமுக கொடி இருக்கும், வீட்டு சுவரிலும் இருக்கும். எங்க மனதிலும் நிலைத்திருக்கும் என்று உறுதிபட கூறிவிட்டு, இது குற்றமென்றால் FIR பதிவு செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் காவல்துறையினர் ஜகுபர் அலி அவர்களிடம், இந்த பிரச்சினை முதலமைச்சர் தனி பிரிவிற்கு சென்றுள்ளது (CM cell) என்று கூறியுள்ளனர். மேலும் இன்று காலை அவரை விடுவித்துள்ளனர்.

இதனால் காவல்துறை ஜனநாயகத்தை அடக்கி ஒடுக்க நினைத்து ஜகுபர் அலி அவர்களை கொடுமை செய்கிறது. இதை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வன்மையான கண்டிக்கிறோம். மேலும் இதே போல அடக்குமுறையில் ஈடுபடகூடாது எனவும் ஜெயலலிதாவின் பாசிச அரசின் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். அடக்கி ஆள நினைப்பதால் அடங்கி விடுவார்கள் என நினைத்தால், இன்னும் வேகமாக மதிமுகவும், தொண்டர்களும் வீறுகொண்டெளுவோம் எனவும் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

ஜகுபர் அலி அவர்களின் சொந்த வீட்டில், சொந்த செலவில் வரைந்திருக்கும் மதிமுக கொடியை மறைக்கும் ஜெயலலிதாவில் காவல்துறை, ஜெயலலிதாவின் படம் அடங்கிய, உணவகம், மருந்துகடை, கட்டடங்கள், காணொலி காட்சிகள் அனைத்திலும் ஜெயலலிதாவின் படங்களை அகற்றாதது ஏன்?

ஜனனாயகத்திற்கு ஜெயலலிதாவில் ஆட்சியில் இடமில்லாமல் போனதற்கு காரணம் ஜெயலலிதாவின் ஆணவ போக்கையே காட்டுகிறது. எங்கு பார்த்தாலும் அடக்குமுறை பிரவேசம். ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் மயம். இது தவிர்க்கப் படவேண்டும். இதற்கு உறுதுணையாக,  கைக்கூலியாக இருக்கும் காவல்துறையயும், ஜெயலலிதா அரசையும் கண்டிக்கிறோம். மே 16 ல் இதற்கு முடிவு கட்டப்படும்.

மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, March 27, 2016

ஈஸ்டர் புனித பெரு நாள் நல் வாழ்த்துக்கள்!

மனித குல வரலாற்றில் விவரிக்க இயலாத துன்பமும், துயரமும் ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று கொல்கதா எனப்படும் கபால ஸ்தலத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. நெஞ்சைப் பிளக்கும் அந்த சோக சம்பவம்தான் ரட்சகர் இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்ட அவலமாகும்.

அந்தகார இருள் விலகி ஒளி வெள்ளம் பாய்வது போல் மூன்றாம் நாள் இயேசுபெருமான் உயிர்த்தெழுந்த உன்னதத்தைத்தான் ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறித்தவப் பெருமக்கள் கொண்டாடுகிறார்கள்.

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இதயத்தில் அமைதியையும், இளைப்பாருதலையும் வழங்குகிற இயேசுநாதரின் அறிவுரைகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானவை ஆகும். கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுங்குண்டவர்களுக்கும் விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் ஏற்படுத்துகிறது.

இயேசுநாதர் உயிர்த்தெழுந்தார். மீட்பரின் போதனைகள் மனித குலத்துக்கு வழிகாட்டின.

அனைவருக்கும் வாழ்வில் ஒளியேற ஈஸ்டர் தின நல் வாழ்த்துக்கள்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, March 20, 2016

வைகோவின் கடை தொண்டன் நவீனுக்கு பிறந்த தின வாழ்த்து!

சிறு வயது முதலே வைகோ என்ற ஈரெழுத்து மந்திரத்தால், ஈர்க்கப்பட்டு, சின்ன வயதில் மாலையுடன் காத்திருக்க, இப்போ வருவார், கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார் என்றெல்லாம் சொல்லி நடு இரவு நேரம் ஆன பின்னரும், அவர் வர தாமதமாகும், நீ வா வீட்டுக்கு போகலாம் என்று பெற்றோர் அழைக்க மாலையிட்டு மரியாதை செலுத்திவிட்டுதான் இல்லம் திரும்புவேன் என காத்திருந்து தமிழக தலையாரி வைகோவுக்கு மலர் மாலையிட்டு மரியாதை செலுத்திய தம்பி நவநீதன் அவர்கள், வருகிற தேர்தலில் வைகோவின் ஒருங்கிணைப்பில் ஆட்சி அமைக்க போவதை கண்டுகளித்தும், வாழ்வில் எல்லா வளங்களும் பெற்றும், நீடூழி வாழ பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, March 8, 2016

தமிழீழ தேசிய கொடியும், மதிமுக கொடியும்!

எனதருமை உறவுகளே!

எனக்கு தமிழீழ தேசிய மேஜை கொடியும், மதிமுக மேஜை கொடியும் தேவைப்படுகிறது. எங்கே கிடைக்கும். எவ்வளவு. யாராவது வாங்கி தருவதாக இருந்தால், வங்கி கணக்கு தருகையில் அனுப்புவதற்கு ஆகும் செலவுடன் காசு தருகிறேன். இரண்டும் ஒரே அளவு இருந்தால் மிக்க மகிழ்ச்சி...

விபரம் தெரிந்த தோழர்கள், தனி செய்தியில் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்,
மைக்கேல்

Monday, March 7, 2016

ஈழ அகதி தற்கொலைக்கு காரணமாயிருந்த வருவாய் துறை அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சம்பட்டி கூத்தியார் குண்டு இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 வருடங்களாக வசித்து வருகின்றன.

மாதத்திற்கு 3 முறை அகதிகள் இருக்கை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் நேற்று 06-03-2016 காலையில், அகதிகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட வருவாய்த்துறை அதிகாரி ராஜேந்திரன் முகாமிற்கு சென்றுள்ளார். அப்போது ரவீந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டு ரவீந்திரனின் மனைவியை கண்டித்துள்ளார் வருவாய் துறை அதிகாரி ராஜேந்திரன். அப்போது, ரவீந்திரன் அங்கு வந்துள்ளார்.

தனது மகனை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அப்போது அவர் தெரிவித்தார். ஆனால், அதனை ஏற்காத அதிகாரி, வருகை பதிவேட்டில் குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரவீந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த ரவீந்திரன், ஐயா உங்கள் காலில் விழுகிறேன், என்னை மன்னியுங்கள், எனிமேல் தவறு நடக்காது என மிக பணிவோடு வருவாய் துறை அதிகாரியிடம் கெஞ்சியுள்ளார். ஆனாலும் தகாத வார்த்தைகளில் திட்டியிருக்கிறார் வருவாய் துறை அதிகாரி ராஜேந்திரன்.

இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ்வது என வருவாய் துறை அதிகாரியிடம் கேட்டதற்கு அந்த அதிகாரி, “இதோ கரண்டு மரத்தில் ஏறி சாவு” என கூறியிருக்கிறார்.

இதனால் மனமுடைந்த ரவீந்திரன், அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். என்னைப்போல் இந்த முகாமில் யாரும் இனிமேல் பாதிக்க கூடாது, என்னை போல யாரும் அவமானப் பட கூடாது என்று, மின்னழுத்த மின்சார கம்பியை காலால் தொட, உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் தீ பிளம்பு போல வெடி வெடித்தது போல அவரது உடல் சிதறி கீழே விழுந்து ரவீந்திரன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

எனவே, இந்த இறப்புக்கு காரணமாயிருந்த வருவாய் துறை அதிகாரியையும், துணை போன தமிழக ஜெயலலிதா அரசையும் வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் வருவாயய் துறை அதிகாரியை பணி நீக்கம் செய்வதோடு, இறந்த ரவீந்திரன் குடும்பத்திற்கு தமிழக அரசு 5 லட்சம் நிவாரணமும், மகனுக்கு சரியான மருத்துவமும் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழீழத்தில் இனப்படுகொலை நடந்ததால், தாயகமான தமிழகத்திற்கு தஞ்சமடைந்தனர். ஆனாலும் இங்கும் அவர்களை சுதந்திரமாக வாழ விடாமல் சிறை போன்ற முகாம்களில் அடைத்திருப்பது கொடுமை செய்வது போன்ற வேதனையான விடயம் ஆகும்.

இனப்படுகொலை என தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றிவிட்டு, இங்கேயும் படுகொலைக்கு துணை போவது போன்ற சூழ்நிலை காணப்படுகிறது, தமிழகத்திலே தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாததை உணர்த்துகிறது. இந்த நிலையை அரசுகள் மாற்ற வேண்டும்.

அவர்களும் மனிதர்களே என்னும் அடிப்படையில் அவர்களுக்கு திறந்த வெளி முகாம் அமைத்து அவர்களும், இந்திய பிரஜையை போல சுதந்திரமாக வாழவும், தமிழக அரசு உடனே தலையிட்டு அனைத்து வசதிகளையும் தமிழீழ அகதிகளுக்கு செய்து தர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, March 6, 2016

அன்புக்கு அடிமையாக்கும், பிரேம் அவர்களுக்கு உதித்த திரு வாழ்த்து!

பசுமை பூங்காவில்,

சோலையின் சுவாசத்தில்,

நாஞ்சில் நாட்டில் நல்லவராய்,

4பேர் கூட்டணியியை ஊரூராய்,

கொண்டு செல்லும் மாசற்ற மாணிக்கம்.

இலவசத்தை இல்லாதாக்கி பொழுதெல்லாம்,

புத்தியோடு உத்திகளை உவகையோடு செய்யும்,

உவர் நிலத்தை உழவனாய் கடைந்தெடுக்கும் உழவாளி!

விண்ணுயர மாளிகைகளை ஓமனில் ஓய்வறியாது உருவாக்கி,

வங்கி வரை நாவினால் வாள் வீசி வீரத்தை பறை சாற்றி,

கொஞ்சும் குமரிக்கு பெருமை சேர்த்த பெருந்தகை.

தாயகத்தின் கனவுகளை இயன்றளவு எளிதாக்கிட,

எல்லை தாண்டி, ஏகலைவனே இணையென்று,

குடும்பமே துணையென்று கூதூகலித்திட,

கழகத்தின் கண்மணிகள் அறியப்பெற,

இணையத்திலே இணைந்தோமே,

இணைந்தே களத்தில் உறவாக,

எந்நாளும் பணியாற்றிட,

பிறந்த நாள் வாழ்த்து.


அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

தம்பியின் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கருணையே உருவாய் கொண்டும்,

தமிழர் நலனில் ஈடில்லா அக்கரையோடும்,

ஈழத்தின் தலைமகனை உயிராயேற்றும்,

கலிங்கப்பட்டி கர்ணனை கனவிலும் நினைத்தும்.

இணையத்தின் ஏவுகணையை குறி பார்த்து,

தன்னலமில்லா வியூகத்தில் தனித்துவம்பெற்று,

தமிழே இதய துடிப்பாய் வடிவமைத்து,

குடும்பத்தை குதூகலத்தோடு கொண்டாடும்,

அப்பனென்று இலவசமாய் அனுதினமும் அழைக்கும்

மகனுக்கு மனுவேலனாய், எந்நாளும் கடமையாற்றி,

மண்ணுலகில் மனிதராய், புனிதம் பெற்றிட,

நீர் பிறந்த கருணை நாளில், 

தம்பியின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்