Friday, January 6, 2017

பள்ளி கல்லூரிகளில் வாரம் ஒருமுறை வேட்டி கட்டாயமாக்க தமிழக அரசுக்கு மைக்கேல் வேண்டுகோள்!

வேட்டி தினம்... தமிழர்களின் அடையாளம் வேட்டி, நமது பாரம்பரிய அடையாளத்தை சில வருடங்களுக்கு முன்பு தொலைத்துவிடுவோமோ என்ற எண்ணம் என் மனதில் தோன்றியதுண்டு... ஆனால் முதன் முதலாக என தாத்தாவின் வேட்டையை கட்டி மகிழ்ந்த தினம் இன்னமும் பசுமரத்தாணி போல நினைவலைகளாக எண்ணும் போது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழின், தமிழரின் நாகரீகத்தின் அடையாளமாகவும் வேட்டி திகழ்கிறது. இதை வருங்கால தலைமுறைக்கும் எடுத்து செல்ல வேண்டும். இப்போதைய கால சூழலில் சில ஓரிரு பள்ளிகளில் வேட்டியை சீருடையாக வைத்திருக்கிக்கிறார்கள் என சில மாதங்களுக்கு முன் கேள்விபட்டு அந்த புகைப்படங்களை பார்த்தது மனதில் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.

இனி வரும் காலங்களில் அனைத்து கல்லூரி பள்ளிகளில், தமிழர் பண்பாட்டை காக்கும் விதமாக, ஒரு வாரத்திற்கு ஒரு நாள் கட்டாயம் வேட்டியணிந்து வர தமிழக அரசு ஏற்ப்பாடுகள் செய்ய வேண்டுமென வலியுறுத்தி, இந்த நாளை அனைத்து தமிழர்களும், அனைத்து இந்திய மக்களும் கொண்டாடி மகிழ வேண்டுமென்று, தமிழர் பண்பாட்டை காக்கும் இந்த வேட்டி தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன்.

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment