Monday, March 29, 2021

CIO300 Awards Winner – MENA 2021.

The CIO300 Awards, has recognized Chief Information Officers (CIO) that have displayed considerable feats in using IT in innovative ways to deliver business value; whether by creating competitive advantage, optimizing business processes, enabling growth or improving relationships with customers and; has through this enabled or pioneered a successful path for organization.


I am very much thankful to my CEO sandeep jaitly and our management team to gave this opportunities to implement and develop with new technology for this company.

Thursday, March 11, 2021

2021 சட்டபேரவை மதிமுக வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்!

நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்:

  1. 35. மதுராந்தகம் ( தனி) - மல்லை சி.ஏ. சத்யா  
  2. 204. சாத்தூர் - டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன்
  3. 115. பல்லடம் - க. முத்துரத்தினம்
  4. 192. மதுரை தெற்கு - மு. பூமிநாதன்
   5. 220. வாசுதேவநல்லூர் (தனி) - டாக்டர் சதன் திருமலைக்குமார்
   6. 149. அரியலூர் - வழக்குஉரைஞர் கு. சின்னப்பா

மதுராந்தகம் - மல்லை சி.ஏ. சத்யா  

சாத்தூர் - டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன்

பல்லடம் - க. முத்துரத்தினம்

மதுரை தெற்கு - மு. பூமிநாதன்


வாசுதேவநல்லூர் (தனி) - டாக்டர் சதன் திருமலைக்குமார்

அரியலூர் - வழக்குஉரைஞர் கு. சின்னப்பா

Monday, March 8, 2021

மகளிர் தின வாழ்த்துக்கள்!

இன விடுதலையில் தமிழர்கள் பங்கு தன் இனத்திற்காக அளப்பரியது.

தமிழீழ விடுதலைக்காக சகோதரி அங்கயற்கண்ணி அவர்கள், இலங்கைக் கடற்படையினரின் வடபிராந்திய தலைமை கட்டளையிடும் தாய்க்கப்பல் மீது கரும்புலித் தாக்குதல் நடாத்தி கப்பலை தகர்த்து வீரச்சாவடைந்தார். 

உலக மகளிரில் தமிழச்சிகள் உலகில் தலைசிறந்தாவர்களாகவே இருக்கிறார்கள். 

இதுபோன்ற அனைத்து உலக மகளிருக்கும், தங்கள் தியாக உணர்வை போற்றும் வகையில் மகளிர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்

Sunday, March 7, 2021

நாகர்கோவில் டவுண் பள்ளிவிளை ரயில் நிலைய முன்பதிவு மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தாததால், இந்த முன்பதிவு வசதி திருவனந்தபுரத்திற்கு மாறும் அபாயம்!

நாகர்கோயில் வெட்டூர்ணிமடம் அருகே 
பள்ளிவிளையில் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் பயணசீட்டு முன்பதிவு மையம் தினசரி காலை 8:00 முதல் மாலை 8:00 வரை செயல்பட்டு வருகின்றது. 

இந்த முன்பதிவு மையத்தை மக்கள், பயண சீட்டு முன்பதிவு ‌செய்ய, அதிகம் பயன்படுத்தாத காரணத்தால், அங்கிருந்து தட்கல் டிக்கெட்டுகள் அதிக பயணிகளுக்கு கிடைக்க பெறுகின்றது.

இந்த முன்பதிவு மையம் அதிக பயணிகள் அதிக அளவில் முன்பதிவு செய்து பயன்படுத்தினால் மட்டுமே,‌ நாகர்கோயில் டவுண் ரயில் நிலையத்தில் பயணசீட்டு முன்பதிவு வசதி தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

ஆகவே நாகர்கோயில் டவுண் ரயில் நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள், அதிக பணம் கொடுத்து தட்கல் பயண சீட்டு பெற்று பயணம் செய்வதை தவிர்த்து, முன்பதிவு செய்து ‌குறைவான கட்டணம் கொண்ட பயணசீட்டு பெற்று பயனடையுங்கள்.  

அப்போது நம்‌ முன்பதிவு மையத்தையும் இருப்பில் வைக்க முடியும். மக்கள் முன்பதிவு செய்து பயன்பெறவில்லையென்றால், இந்த முன்பதிவு மையத்தை திருவனந்தபுரம் கோட்டம் இங்கிருந்து எடுத்துவிடும்.

பின்னர் அந்த பகுதி மக்கள் ‌அனைவரும் நாகர்கோயில் ரயில் நிலையத்தில் கால் கடுக்க கியூவில், நெருக்கடிக்கு மத்தியில் நின்று பயண சீட்டு எடுக்கும் நிலை வரும்‌என்பதை எச்சரிக்கையாக பதிவு செய்கிறேன்.

ஆகவே நாகர்கோயில் டவுண் ரயில் நிலைய முன்பதிவு மையத்தை பயண சீட்டு முன்பதிவிற்காக பயன்படுத்த உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

சக பயணியாக, 

மைக்கேல் செல்வ குமார்.
நாகர்கோயில் டவுண் பயணி
07-03-2021

Saturday, March 6, 2021

கன்னியாகுமரி தொகுதிக்கு ஹிந்தி அறிவிப்பு மூலம் குமரியில் ஹிந்தியை திணிக்கும் பொன் ராதாகிருஷ்ணனை தேர்தலில் தோற்கடிப்போம்!

தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற 2021 ஏப்ரல் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாசிச பாசக, கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் அறிவிப்பை
ஹிந்தியில் அறிவிப்பு செய்து வெளியிட்டிருக்கிறது, ஹிந்தி திணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒன்றிய பாசிச பாசக.

தமிழர் தொட்டிலாம் நாஞ்சில் நாட்டிலே, தமிழ் பேசும் குமரியிலே ஹிந்தி வெறி பிடித்த பாசிச பாசக, ஹிந்தியை வேகமாக திணிக்க முயலுகிறார்கள்.

இரு மொழி கொள்கை பின்பற்றப்படும் தமிழ் நாட்டில் எதற்கடா ஹிந்தியில் குமரி தேர்தல் அறிவிப்பு?

கன்னியாகுமரி வாக்காள பெருமக்களே, தமிழ் உணர்வு மிகுந்து இருக்கும் குமரி மண்ணில் பொன்.இராதாகிருஷ்ணன் மூலம் தமிழை அழித்து ஹிந்தியை திணிக்க முயலுகிறது மத்திய ஒன்றிய அரசு.

பொன் ராதாகிருஷ்ணனும் தமிழை அழித்து ஹிந்தியை வளர்க்க பாசிச பாசகவுக்கு துணை புரிகிறார். குறைந்த பட்சம் தேர்தல் அறிவிப்பைக் கூட தமிழில் வெளியிட முடியாத பாசிச பாசக, குமரி தொகுதியை கைப்பற்றினால், தமிழ் அழிக்கப்பட்டு ஹிந்தி அமல்படுத்தப்படும் என்று மறைமுகமாக சொல்கிறார்கள்.

ஆகவே, பாசிச பாசக எனும் கொடிய விசத்தை வேர்லேயே முற்றாக அழிக்க வேண்டியது குமரி தமிழனான நமது கடமையாக இருக்கிறது என்பதை குமரி தமிழர்கள் உணர வேண்டும்.

குமரி தொகுதியில் தமிழை அழித்து ஹிந்தியை அமல்படுத்த முயலும் பொன் ராதாகிருஷ்ணனை ஏப்ரல் 6 தேர்தலில் டெப்பாசிட் இழக்க செய்து தமிழ் கொடுத்த தமிழன்னையை காக்க உறுதியேற்போம். ஆரிய மாயையை முறியடிப்போம்.

தமிழ் மான உணர்வுடன்,
மைக்கேல் செல்வ குமார்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி
06-03-2021

Thursday, March 4, 2021

மனுநீதி (எ) மனுதர்ம சாஸ்திரம் நூல் புதிய வடிவில் வெளியீடு! ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

150 வருடத்திற்கு முன்னர் எழுதிய மனுநீதி நூலை எளிய வடிவில் மொழி பெயர்த்து மனுநீதி (எ) மனுதர்ம சாஸ்திரம் நூலை சுவடு இதழின் நூலாசிரியர் நல்லு லிங்கம் அவர்கள் எழுதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் திருமாவளவன் அவர்கள் வெளியிட்டார்கள்.

மதிமுக அமைப்பு செயலாளர் திரு. வந்தியத்தேவன் அவர்கள் நூலை பெற்று கொண்டார்கள்.

நூல் வெளிவர காரணமாயிருந்த, அதற்கு உதவிய, சுவடு பதிப்பகத்தாருகு ஆதரவாக இருந்த, நூல் ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வருணாசிரத்தை தோலுரித்து காட்டுகின்ற உண்மையை உரைக்கின்ற நூலாக உலக வலம் வரும் நுலிற்கு வாழ்த்துக்கள்.


மைக்கேல் செல்வ குமார்.