Saturday, March 6, 2021

கன்னியாகுமரி தொகுதிக்கு ஹிந்தி அறிவிப்பு மூலம் குமரியில் ஹிந்தியை திணிக்கும் பொன் ராதாகிருஷ்ணனை தேர்தலில் தோற்கடிப்போம்!

தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற 2021 ஏப்ரல் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாசிச பாசக, கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் அறிவிப்பை
ஹிந்தியில் அறிவிப்பு செய்து வெளியிட்டிருக்கிறது, ஹிந்தி திணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒன்றிய பாசிச பாசக.

தமிழர் தொட்டிலாம் நாஞ்சில் நாட்டிலே, தமிழ் பேசும் குமரியிலே ஹிந்தி வெறி பிடித்த பாசிச பாசக, ஹிந்தியை வேகமாக திணிக்க முயலுகிறார்கள்.

இரு மொழி கொள்கை பின்பற்றப்படும் தமிழ் நாட்டில் எதற்கடா ஹிந்தியில் குமரி தேர்தல் அறிவிப்பு?

கன்னியாகுமரி வாக்காள பெருமக்களே, தமிழ் உணர்வு மிகுந்து இருக்கும் குமரி மண்ணில் பொன்.இராதாகிருஷ்ணன் மூலம் தமிழை அழித்து ஹிந்தியை திணிக்க முயலுகிறது மத்திய ஒன்றிய அரசு.

பொன் ராதாகிருஷ்ணனும் தமிழை அழித்து ஹிந்தியை வளர்க்க பாசிச பாசகவுக்கு துணை புரிகிறார். குறைந்த பட்சம் தேர்தல் அறிவிப்பைக் கூட தமிழில் வெளியிட முடியாத பாசிச பாசக, குமரி தொகுதியை கைப்பற்றினால், தமிழ் அழிக்கப்பட்டு ஹிந்தி அமல்படுத்தப்படும் என்று மறைமுகமாக சொல்கிறார்கள்.

ஆகவே, பாசிச பாசக எனும் கொடிய விசத்தை வேர்லேயே முற்றாக அழிக்க வேண்டியது குமரி தமிழனான நமது கடமையாக இருக்கிறது என்பதை குமரி தமிழர்கள் உணர வேண்டும்.

குமரி தொகுதியில் தமிழை அழித்து ஹிந்தியை அமல்படுத்த முயலும் பொன் ராதாகிருஷ்ணனை ஏப்ரல் 6 தேர்தலில் டெப்பாசிட் இழக்க செய்து தமிழ் கொடுத்த தமிழன்னையை காக்க உறுதியேற்போம். ஆரிய மாயையை முறியடிப்போம்.

தமிழ் மான உணர்வுடன்,
மைக்கேல் செல்வ குமார்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி
06-03-2021

No comments:

Post a Comment