Tuesday, March 3, 2015

பன்னிரெண்டாம், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு வாழ்த்து!

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை (தேர்வுகள்) சார்பில் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 5 அன்றும்; பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 19 அன்றும் தொடங்குகின்றன. பல இலட்சக் கணக்கான மாணவக் கண்மணிகள் இந்தப் பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். 

மாணவ செல்வங்கள், தேர்வுக்காக வீட்டிலிருந்து புறப்படுவதற்கு, முன்னதாகவே தேர்வுக்கு தேவையான பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் மற்றும் இரத உபகரணங்களை தவறாது சரி செய்து எடுத்து செல்லும்படிய் அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

மேலும் மாணவர்கள் பயிலும் பள்ளிகள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே சென்று பதற்றமோ, அச்சமோ இன்றி இயல்பாக தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

அரசு பேருந்துகள், தேர்வுக்குப் புறப்பட்டுச் செல்லும் மாணவர்களை எல்லா நிறுத்தங்களிலும் நின்று ஏற்றி இறக்கிச் செல்லும் வகையில் அரசு வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும்.

தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிக்கூடப் பகுதிகளில், சத்தமாக ஒலிப்பெருக்கியை இயக்கிடுவதை பொதுமக்கள் முற்றாகத் தவிர்த்திட முன்வர வேண்டும்.

வருங்கால தமிழகத்தின் தூண்களான என் இனிய மாணவச் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய என் அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

Saturday, February 28, 2015

குமரி மாவட்டம், குருந்தன்கோடு பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட, நாயக்கன்விளை கிறிஸ்தவ ஊழிய கட்டடத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பஞ்சாயத்து தலைவர், அனுமதியில்லாமல் இயங்கும் தீங்கு விளைவிக்கும் பன்றி பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?

குமரி மாவட்டம், குருந்தன்கோடு பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட, நாயக்கன்விளை கிராமத்தின், குட்டிமாந்தட்டு மடை பகுதியில், சடையால் புதூர் செல்லும் சாலையில், ஒரு கிறிஸ்தவர் தனது சொந்தமான நிலத்தில், சிறிய வீடு கட்டி குடிபுகுந்துள்ளார். தனது வீட்டின் மறு பகுதியில் வெளிபுறத்தில் சிறிய தொழுகை இடத்தையும் உருவாக்கி வயோதிபர்களுக்காக, குடும்ப வறுமையில் கக்ஷ்டபடுபவர்களுக்காக, மற்றும் பல்வேறு பிரச்சனைகளை கொண்டவர்களுக்கு ஜெபித்து வருகிறார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்களும் அதை விரும்பும் பொதுமக்களும் கலந்துகொள்கின்றனர். கடந்த ஐந்து வருடங்களாக இந்த ஊழியத்தை செய்து வரும் இவர் மக்கள் அதிகமாக வருவதால் சிறிய அளவிலான பெந்தேகோஸ்தே சபை போல விரிவு படுத்துகின்ற நிலையில், குருந்தன்கோடு பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி அவர்கள் தமிழக காவல்துறை உதவியுடன் அந்த தொழுகை நடக்கும் இடத்திற்கு சென்று, இப்படிபட்ட ஊழியங்களின் கட்டடங்களுக்கு தாங்கள் அனுமதி வாங்கவில்லையென்று கூறி அதை காவல்துறை உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளார். இது அவர் சார்ந்திருக்கும் பாஜக வின் கொள்கைகளை பறைசாற்றுகின்றது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். 

இப்படிபட்ட கிறிஸ்தவ ஊழியங்களை நடத்த கட்டடங்களுக்கு அனுமதியில்லை என்று கூறி அதை தடுக்கும் பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி அவர்கள், எந்த வித அரசு அனுமதியும் இல்லாமல் சட்ட விரோதமாக, பலமுறை பொதுமக்களின் போராட்டத்திற்கு பிறகும் கடந்த ஒரு வருட காலமாக கொடுப்பைக்குழி ஊரின் ஒரு பகுதியில் இயங்கிவரும் பன்றி பண்ணையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பன்றி பண்ணைக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என்ன? பலமுறை பொதுமக்கள் மனுகொடுத்தும் பொதுமக்களின் மனுக்களை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்வது ஏன்? பன்றி பண்ணையை பற்றி பஞ்சாயத்து தலைவர் வாய் திறக்காமல் மெளனமாக உலாவருவது ஏன்? பன்றி பண்ணை முதலாளிகளிடம் விசுவாசமாக இருக்கிறாரா? அவரோடு சேர்ந்து அவரின் கூட்டாளிகளையும் பன்றி பண்ணைக்கு எதிராக போராட விடாமல் தடுக்கிறாரா?

ஊர் நன்மைக்காக போராட்டத்தில் முனைப்போடு பணியாற்றுகின்ற இளைஞர்களின் மீது பொய் வழக்கு பதிவு செய்த பன்றி பண்ணை முதலாளிகளை கண்டித்து வழக்கை திரும்ப பெற செய்யாதது ஏன்? சொந்த ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் சொந்த ஊரிலே நிகழும் மக்கள் விரோத செயல்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சொந்த ஊர் மக்களையே காப்பாற்ற முடியாத பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி குருந்தன்கோடு பஞ்சாயத்து முழுவதுமுள்ள பகுதி மக்களை எப்படி காப்பற்றுவார்? சிறிய பிரச்சினைகளுக்கே தீர்வு காண முடியாத தலைவரின் தகுதிதான் என்ன?

இவ்வளவு கண்டனங்களுக்கு பிறகும் அதிகாரிகளையும் தன் வசமாக்கி பன்றி பண்ணையை அகற்றாமலிருக்கும் திரு.வைகுண்டமணி அவர்களை மக்கள் மன்றத்தில் நிறுத்தி தமிழக அரசு அவரது தலைவர் பதவியை பறிக்க வேண்டுமென்று முக நூல் வாயிலாக் வேண்டுகோள் வைக்கிறேன்.

அடுத்த தேர்தலில் இவர் போன்ற தலைவர்களுக்கு மக்கள் பணம் பாராமல் பொதுமக்கள் நலம் சார்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதாவது இவரை போன்றவர்களுக்கு புத்தி தெளிகிறதா என பார்ப்போம்.

போராடுவோம் வெற்றி பெறுவோம்.....

மறுமலர்ச்சி மைக்கேல்.

Wednesday, February 25, 2015

ஜெசிகா-வின் தமிழின உணர்வு!

தமிழீழ சிறுமி ஜெசிகா மற்றும் ஜெசிகா-வின் தகப்பனாரின் தமிழின உணர்வு வெளிப்பட்டிருக்கின்றது, இந்த இன உணர்வு தமிழனை தவிர, தமிழ் இனத்தை தவிர வேறு எந்த இனத்துக்கும் கிடையாது. தமிழன் என்று சொல்லுவோம், தலை நிமிர்ந்து சொல்லுவோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்

அன்னை தெரசாவை கொச்சைபடுத்திய மோகன் பகவத்-க்கு கடுங்கண்டனம்!

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், மத மாற்றம் செய்யும் நோக்கத்துடன் தான் அன்னை தெரசா சேவை  செய்தார் என்று கூறியிருக்கிறார். அன்னை தெரசாவை இதைவிட மோசமாக அவமதிக்க முடியாது; அவரது சேவையை இதைவிட கொச்சைப்படுத்த முடியாது. பகவத்தின் இந்த பேச்சு கடுமையான கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துகொள்கிறேன்.

அன்னை தெரசா என்றாலே அவரது தன்னலம் கருதாத சேவை தான் நினைவுக்கு வரும். அவர் மதம், இனம், மொழி ஆகிய அனைத்தையும் கடந்தவர். அதனால் தான் மதம், மொழி, இனம் ஆகிய மூன்றின் அடிப்படையிலும் எந்த தொடர்பும் இல்லாத இந்தியாவுக்கு வந்து சேவை செய்தார். தாய், தந்தையை கடுமையான நோய் தாக்கிவிட்டால் அவர்களை கவனித்துக் கொள்ள பிள்ளைகளே முன்வராத இந்த காலத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களையும் தமது அன்புக் கரங்களால் அள்ளி எடுத்து கவனித்துக் கொண்டார். இப்படிப்பட்ட சேவை செய்தவரை மோகன் பகவத் அறியாதிருப்பது துரதிஸ்டவசமானது. அவரின் சேவைக்கு மோகன் பகவத் இப்படியாக அவதூறு கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. இது போன்ற பொது கூட்டங்களில் மக்களின் மனதை வென்றவர்களை இனிமேலாவது மோகன் பகவத் போன்றவர்கள் நிறுத்து கொண்டு மக்கள் தொண்டாற்றவேண்டுமென கேட்டு கொள்கிறேன். இப்படி பேசுபவர்களை மத்திய பாஜக அரசு கண்டிக்காமலிருப்பது இந்து மத கொள்கையை வெளிப்படையாக ஆதரிப்பது போல இருக்கிறது. எனவே மத்திய அரசானது இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டிக்க வேண்டுமென்றும் கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

Saturday, February 21, 2015

உலக தாய் மொழி தின நல்வாழ்த்துக்கள் !

தாய் மொழி வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமில்லை ; தாய்மை உணர்வோடு போற்றி பயன்படுத்தப்பட வேண்டிய மொழி. அன்னை மொழி மீதான பற்று ஒவ்வொருவருக்கும் கட்டாயத்தேவை மட்டுமல்ல, அதை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும். தாய் மொழிதான் மனித வாழ்க்க முறையை கலாச்சாரத்தை கற்றுகொடுக்கிறது. ஓவ்வொரு மனிதனும் மிகப்பெரிய உலகம் போற்றும் தலைவர்களாக வலம் வருகின்றார்களே அவர்களெல்லாரும் தாய்மொழியின் சிறப்பை உணர்ந்து பணியாற்றினார்கள். தாய் மொழியாம் தமிழை போற்றிய திருவள்ளுவர் உலக பொதுமறையாம் திருக்குறளை நமக்கு அருளி நம் தாய் உணர்வை தீவிரபடுத்தியிருக்கின்றார். எனவே தம்முடைய தாய் மொழியாம் தமிழ் மொழியை மதித்து, தமிழை உலகறிய செய்ய உறுதி ஏற்போம்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

Friday, February 20, 2015

தமிழீழத்து ஜெசிகா இரண்டாவது இடத்தில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4-ல் வெற்றி!

தமிழீழத்து தங்கை ஜெசிகா இரண்டாவது இடத்தில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4-ல் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு நன்றி நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.வெற்றி பெற்ற முழு தொகையையும், ஒரு பகுதி சென்னையில் உள்ள குழந்தை காப்பகத்துக்கும், மீதமுள்ள முழுவதையும் தமிழீழத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அன்பளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தைரியமும், கொடையுள்ளமும் யாருக்கு உண்டு தமிழனை தவிர.... 

மறுமலர்ச்சி மைக்கேல்...