Wednesday, February 25, 2015

அன்னை தெரசாவை கொச்சைபடுத்திய மோகன் பகவத்-க்கு கடுங்கண்டனம்!

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், மத மாற்றம் செய்யும் நோக்கத்துடன் தான் அன்னை தெரசா சேவை  செய்தார் என்று கூறியிருக்கிறார். அன்னை தெரசாவை இதைவிட மோசமாக அவமதிக்க முடியாது; அவரது சேவையை இதைவிட கொச்சைப்படுத்த முடியாது. பகவத்தின் இந்த பேச்சு கடுமையான கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துகொள்கிறேன்.

அன்னை தெரசா என்றாலே அவரது தன்னலம் கருதாத சேவை தான் நினைவுக்கு வரும். அவர் மதம், இனம், மொழி ஆகிய அனைத்தையும் கடந்தவர். அதனால் தான் மதம், மொழி, இனம் ஆகிய மூன்றின் அடிப்படையிலும் எந்த தொடர்பும் இல்லாத இந்தியாவுக்கு வந்து சேவை செய்தார். தாய், தந்தையை கடுமையான நோய் தாக்கிவிட்டால் அவர்களை கவனித்துக் கொள்ள பிள்ளைகளே முன்வராத இந்த காலத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களையும் தமது அன்புக் கரங்களால் அள்ளி எடுத்து கவனித்துக் கொண்டார். இப்படிப்பட்ட சேவை செய்தவரை மோகன் பகவத் அறியாதிருப்பது துரதிஸ்டவசமானது. அவரின் சேவைக்கு மோகன் பகவத் இப்படியாக அவதூறு கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. இது போன்ற பொது கூட்டங்களில் மக்களின் மனதை வென்றவர்களை இனிமேலாவது மோகன் பகவத் போன்றவர்கள் நிறுத்து கொண்டு மக்கள் தொண்டாற்றவேண்டுமென கேட்டு கொள்கிறேன். இப்படி பேசுபவர்களை மத்திய பாஜக அரசு கண்டிக்காமலிருப்பது இந்து மத கொள்கையை வெளிப்படையாக ஆதரிப்பது போல இருக்கிறது. எனவே மத்திய அரசானது இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டிக்க வேண்டுமென்றும் கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

No comments:

Post a Comment