Tuesday, July 21, 2015

3 தமிழர்களுக்கு கருணை காட்ட கூடாது என வாதிட்ட மத்திய அரசுக்கு கண்டனம்!

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிரபராதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற அரசியல்  சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு, இந்த மனு எந்த அடிப்படையில் விசாரணைக்கு உகந்தது என கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர்  ரஞ்சித் குமார், சிபிஐ விசாரணை நடத்திய வழக்கில், முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாக தெரிவித்தார். ராஜிவ் கொலை குற்றவாளிகளுக்கு இனியும் கருணை காட்டக் கூடாது என்றும் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட சாந்தன், முருகன் தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, 24 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டி, அவர்களை விடுவிப்பது குறித்து தமிழக அரசு எடுத்த முடிவு சரியானதே என்றும் வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

நிரபராதிகளை உச்சநீதிமன்றமே கடந்த ஆண்டு விடுதலை வழங்கிய பிறகும், மத்திய அரசு விடுவிக்காமல், கருணைகாட்ட கூடாது என கூறியிருப்பது மனித நேயமற்ற செயலாகும். இதனால் மத்திய அரசை வன்மையாக கண்டிப்பதோடு, 3 தமிழர்களுடன், மொத்தமாக 7 தமிழர்களையும் மத்திய அரசு விடுவிக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, July 17, 2015

உறவுகள் அனைவருக்கும் புனித ரமதான் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

அகிலமெங்கும் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள், ரமதான் காலங்களில் காலை முதல் மாலை வரை உண்ணாமல் அருந்தாமல் பசி தாகங்களை பொறுத்துக்கொண்டு விரதம் மேற்கொள்கின்ற தவத்தின் நிறைவு நாள்தான் விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திருநாளாம் ரமலான் ஈது பெருநாள் ஆகும்.

இஸ்லாமியப் பெருமக்கள், விருந்தோம்பும் உயர்ந்த பண்புடன் மனிதநேயத்தோடு அனைவரிடத்திலும் அன்பு காட்டி வாழ்ந்து வருகின்றனர். அனைத்து சமயத்தினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக பரிவுடன் சகோதரத்துவத்தை வளர்ப்பதுதான் இந்திய நாட்டின் ஜனநாயத்தைக் காக்கும் அரண் ஆக அமையும். எனவே சமய நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்

இஸ்லாமியப் பெருமக்கள் இனிய ரமலான் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, குடும்பத்தில் சந்தோசம் ஒளிர  ரமதான் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

இந்தியாவின் தேசிய மொழி இந்தி அல்ல, பள்ளிப் பாடத்தில் தவறான கேள்வி - பதில்! உடனே நீக்க தமிழக அரசுக்கு கோரிக்கை!

தொன்மைத் தமிழ் மொழியின் மாண்பினைக் காக்கவும், தமிழர்களின் நெடிய நாகரிகம், பண்பாட்டில் அந்நியக் கலாச்சாரப் படையெடுப்பை தடுக்கவும், 1937 ஆம் ஆண்டு முதல் இந்தித் திணிப்பை எதிர்த்து, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பட்டுக்கோட்டை அழகிரிசாமி உள்ளிட்ட தமிழர் தலைவர்கள் கடுமையாகப் போராடினர். 1965 இல் மூண்டெழுந்த மொழிப்போரில் இலட்சக்கணக்கான மாணவர்கள் போலீசுக்கும் இராணுவத்துக்கும்அஞ்சாது வீதிகளில் இறங்கிப் போராடினர். எட்டுத் தமிழர்கள் தீக்குளித்து மடிந்தனர். கணக்கற்றோர் அடக்கு முறைக்குப் பலியானார்கள். 1967 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘இந்திக்குத் தமிழகத்தில் இடம் இல்லை; தமிழும் ஆங்கிலமும் மட்டுமே’ என சட்டமன்றத்தில் பிரகடனம் செய்தார்.

இந்நிலையில், 2015௧6 ஆம் கல்வி ஆண்டில் வெளிவந்துள்ள சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில்பக்கம் 329 (ஆங்கில வழிக் கல்வி பக்கம் 306) இல் இந்தியாவின் தேசியமொழி எது? என்ற கேள்வி கேட்கப்பட்டு, அதில் ஆங்கிலம், தமிழ், இந்தி என்ற மூன்று பதில்களுள் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கேட்டுள்ளனர். ‘இந்தி’ என்ற பதிலைத் தேர்வு செய்யுமாறு ஆசிரியர்கள் கூறி உள்ளனர். இது மிகத் தவறான வழிகாட்டுதல்ஆகும்.

இந்தக் கேள்வி தேசிய ஒருமைப்பாடு என்ற பாடப்பிரிவின் கீழ்வருகிறது. ஆனால் இப்பாடத்தில் எந்த இடத்திலும் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் பாடத்தின் இறுதியில் மேற்கண்டவாறு கேள்வி கேட்டு மாணவர்களைக் குழப்பி உள்ளனர்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, இந்தியாவின் தேசிய மொழிஎன்று எந்த மொழியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்தியும், ஆங்கிலமும் அரசு இந்திய அரசின் அலுவல் மொழிகள் மட்டுமே. இந்தியாவிலேயே இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடி வெற்றி கண்டது தமிழ்நாடு மட்டும்தான். பிற மாநிலங்களால் இந்தித் திணிப்பைத் தடுக்க முடியாமல் போனது. இன்று அம்மாநிலங்கள் தங்கள் சொந்த மொழிகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளன.

இந்தியாவில் இந்தி மட்டுமே பேசப்படுகிறது என்ற மாயை, உலகம் முழுவதும் இந்திய அரசால் பரப்பப்பட்டு வருகிறது. இந்திய அரசின் இந்தப் பொய்ப் பரப்புரையை தமிழ்நாடு மட்டுமே இன்றுவரைகடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று தமிழக மாணவர்களை நம்ப வைக்கின்ற விதத்தில், மேற்கண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது. தமிழக அரசு உடனடியாக இந்தக் கேள்வியை நீக்க வேண்டும்; தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்த தகவல்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, July 15, 2015

காமராஜர் பிறந்த நாளில் அவரது சாதனைகளை பரப்புரை செய்வோம்!

ஒருமுறை காரில் பய‌ணம் செய்து கொண்டிருந்த காமராசர் சிறுவன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தார்.

காரை நிறுத்த சொல்லி, அந்த சிறுவனை அழைத்து "ஏன் தம்பி, பள்ளிக்கூடம் போகலையா? என்று கேட்டார்.

காமராசர் முதலமைச்சர் என்பதை அறியாத சிறுவன் " பள்ளிக்கூடம் போனா சோறு யார் போடுவாங்க? என்று கேட்டான்.

"சோறு போட்டா பள்ளிக்கூடம் போறியா? என்று கேட்டதற்கு " போறேன்" என்றான் சிறுவன்.

உடனே பள்ளிகளில் "மதிய உணவுத் திட்டம்" கொண்டுவந்தார் காமராசர். அப்படி கல்விக்கு முக்கியத்துவம் தந்தார் கல்வித் தந்தை காமராசர். அவரது பிறந்த நாளில் அவரது சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைப்போம்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, July 14, 2015

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசை கொடுத்தவர் இசையோடு கலந்துவிட்டார்!

மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாநதன், ‘நீராடும் கடலுடுத்த' என்ற தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.சுமார் 1200 படங்களுக்கும் மேல் இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். 87 வயதான எம்.எஸ்.விஸ்வநாதன் சமீபகாலமாக முதுமை காரணமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். 

இந்நிலையில், இன்று அதிகாலை மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.பழம்பெரும் இசையமைப்பாளரான எம்.எஸ்.வி.யின் சாதனைகள், பெருமைகள் ஏராளம். அவற்றில் ஒன்று தான் தமிழ்த் தாய் வாழ்த்திற்கு இசையமைத்தது.தமிழ்த் தாய் வாழ்த்தான ‘நீராடும் கடலுடுத்த' பாடலுக்கு எம்.எஸ்வி. மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்திருந்தார். இந்தப் பாடலை ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜனும், இசையரசி பி.சுசீலாவும் இணைந்து பாடினார்கள்.இந்தப் பாடலே இன்றளவும் பள்ளிகள் உட்பட அனைத்து இடங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

அப்படிபட்ட இசை மாமேதை இழப்பு உலகமெங்கும் வாழும் இசை உணர்வாளர்களுக்கு பேரிளப்பாகும். அன்னார் அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.


மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, June 30, 2015

சட்டத்தை மதிக்காமல் சீருடையுடன் மொட்டையடித்த அதிமுக போலீஸுக்கு கடும் கண்டனம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து தேனியில் அ.தி.மு.க.,வினர் ஏராளமானோர் மொட்டை போட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் சீருடையுடன் மொட்டை போட்டுக்கொண்டார். இது அங்கு வந்திருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் அவரது பெயர் வேல்முருகன். இடைத்தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்று இத்தனை நாளாக விரதம் இருந்த நேரு சிலை அருகில் மொட்டை போட்டு தனது வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார். வேல்முருகனின் விரதம் இதோடு முடியவில்லையாம். பிப்ரவரி மாதம் வரும் ஜெயலலிதா பிறந்த நாளில், மிக அதிக எடையுள்ள வாகனத்தை தன்மீது ஏற்றி சாதனை புரிய உள்ளாராம்.

இப்படிபட்ட அரசு அதிகாரிகளை உடனே பணி நீக்கம் செய்யவேண்டும். ஆளூம் கட்சி ஆதரவு ஆட்கள் என்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், எந்த சட்டத்தையும் மீறலாம் என்ற மனப்பான்மை அதிமுகவினரிடையே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாகவே அராஜக ஆட்சியை அதிமுக கட்டவிழ்த்துள்ளது மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக போலீஸ் அதிகாரி சீருடையோடு பணியிலிருக்கும்போதே சட்டத்தை மீறியுள்ளது அதிமுக அரசின் அடாவடியை காட்டியுள்ளது. இதற்கு மத்திய புலனாய்வு துறையானது ஆய்வு செய்து அந்த காவலரை தேச துரோக வழக்கில் கைது செய்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டுமென்று கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

Thursday, June 25, 2015

மனித உறவுகள் சீராக இருக்க A to Z 🔔

இல்லத்தில்...அலுவலகத்தில்... பொது வாழ்வில்...
மனித உறவுகள் சீராக இருக்க A to Z 🔔
 
🔔APPRECIATION - மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்
 
🔔BEHAVIOR - புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச்சொற்களைச் சொல்லவும் கூட நேரம இல்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள்
 
🔔COMPROMISE - அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்
 
🔔DEPRESSION - மற்றவர்களின் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்
 
🔔EGO - மற்றவர்களை விட உங்களையே உயர்த்த கர்வபடாதீர்கள்
 
🔔FORGIVE - கண்டிக்கக்கூடிய அதிகாரமும் , நியாயமும்’ உங்கள் பக்கம் இருந்தாலும் எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்
 
🔔GENUINENESS - எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையாக’ கையாலுங்கள்
 
🔔HONESTY - தவறு செய்தால் உடனே’ மன்னிப்புக் கேட்பதைக்’
கௌரவமாகக் கருதுங்கள்
 
🔔INFERIORITY COMPLEX – எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள் நான் சிறியவன் என்று தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்
 
🔔JEALOUSY - பொறாமை வேண்டவே வேண்டாம் கொண்டவனையே அழிக்கும்.
 
🔔KINDNESS - இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்
 
🔔LOOSE TALK - சம்பந்தளிலாமலும் , அர்த்தமில்லாமலும் பின் அறியாமலும் பேச வேண்டாம்
 
🔔MISUNDERSTANDING - மற்றவர்களைத் தவறாகப புரிந்துகொள்ளதீர்கள்
 
🔔NEUTRAL - எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம் .பேசிவிட்டு முடிவு எடுங்கள் முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்
 
🔔OVER EXPECTATION -அளவுக்கு’ அதிகமாகவும்’ தேவைக்கு அதிகமா ஆசைப்படாதீர்கள்
 
🔔PATIENCE - சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்
 
🔔QUIETNESS -தெரிந்ததை மாத்திரமே அநேகப் பிரச்சனைகளுக்குக் காரணம் தெரியாபததைப் பேசுவதுதான்.கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்
 
🔔ROUGHNESS - பண்பில்லாத வார்தைகளையும் தேவைஇல்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்
 
🔔STUBBORNNESS - சொன்னதே சரி செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்
 
🔔TWISTING - இங்கே கேட்டதை அங்கேயும் அங்கே கேட்டதை  இங்கேயும் சொல்வதை விடுங்கள்
 
🔔UNDERESTIMATE - மற்றவர்களூக்கு மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்
 
🔔VOLUNTARY -அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று  காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள்.பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள் பின்பு அதற்கு பதில் கொடுங்கள்
 
🔔WOUND - எந்தப் பேச்சும் , செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்
 
🔔XEROX - நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டடும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்தவேண்டும்
 
🔔YIELD - முடிந்தவரை விட்டுக்கொடுங்கள் விட்டுகொடுப்பவன் கெட்டுப்போவதில்லை, கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை
 
🔔ZERO - இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியம் ஆகும்

மறுமலர்ச்சி மைக்கேல்