Tuesday, September 1, 2020

ஆர் எஸ் எஸ் கொள்கையை நிறைவேற்ற, ₹600 கோடி நிதியா?

சென்னையில், 2019 ஜனவரி மாதம், நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், செங்கல்பட்டு அடுத்த பையனுாரில், 103.07 ஏக்கர் நிலத்தில், சாயி பல்கலை அமைக்க, தமிழக அரசின் உயர் கல்வித் துறைக்கும், சாயி கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.


சாயி பல்கலை, முதல் ஏழு ஆண்டுகளில், 600 கோடி ரூபாய் முதலீட்டில், 12 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில், 6,000 மாணவர்களுடன், 300 பேராசிரியர்கள், 300 நிர்வாக பணியாளர்களுடன் இயங்கும்.இரண்டாம் கட்டமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 30 லட்சம் சதுர அடி கட்டடத்தில், 20 ஆயிரம் மாணவர்கள், 1,000 பேராசிரியர்கள், 1,000 நிர்வாக பணியாளர்களுடன் இயங்க திட்டமிடப்பட்டுள்ளது.


செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிதாக அமைக்கப்பட உள்ள, சாயி பல்கலைக்கு, 600 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்ட, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று 31-08-2020, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அடிக்கல் நாட்டினார் என்பது மத்திய அரசுக்கு கைகூலியா தமிழக அரசு செயல்படுவதை உறுதிபடுத்துகிறது.


தனியார் பல்கலை கழகம் திட்டமிடுவதற்கு அரசின் நிதி எதற்கு வழங்கவேண்டும் என்ற கேள்வியே இப்போது மிஞ்சுகிறது.


தமிழக அரசு ஆர் எஸ் எஸ் கொள்கையை நிறைவேற்ற இந்த பல்கலை கழகத்திற்கு நிதியை வாரி வழங்குவது கண்டிக்கதக்கது.


மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, July 5, 2020

வெளிநாட்டு தமிழர்களை மீட்க கோரிக்கை!


உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் தாயகம் வர தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

வெளிநாட்டு தமிழருக்கான தனி நல அமைச்சகமும், வாரியமும் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள்.‌

2011 ல் அறிவித்த வெளிநாடு தமிழர்கள் நல சட்ட வாரியம், இயங்காத நிலையில் தமிழக அரசு தலையிட்டு சரியான வழிமுறைகளை வகுத்து பாதிக்கப்படும் தமிழர்களை தாயகம் மீட்டு வரவும் ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஓமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

#BringBackTamils
#SetUpMinistryOfPersonalWelfare
#SetUpSeparateWelfareBoard

Saturday, November 16, 2019

World CIO 200 Submit Winner Award!

World CIO 200 Submit Winner Award 2019 at Oman.  Thanks to my Management team (Golden Tulip Nizwa Hotel), colleagues, Friends & Family. They encouraged, supported in all the ways to achieve this CIO (Chief Information Technology Officer) award.  Among 80 nominated, 14 were selected from Sultanate of Oman.

Regards,
Micheal Selva Kumar

Monday, May 13, 2019

தமிழீழ விடுதலை புலிகள் சார்ந்த முகநூல் பதிவுகளை முடக்கும் முகநூல் சமூக வலைதளத்தை இந்திய ஒன்றியத்தில் தடை செய்ய வழக்கு தொடர வேண்டும். தமிழ உணர்வுள்ள வழக்கறிஞர்களுக்கு மைக்கேல் வேண்டுகோள்!

தமிழீழ விடுதலை புலிகளையும், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களையும் உள்ளூர் தமிழர் முதல் உலக தமிழர்கள் வரை எங்கள் நெஞ்ச கூண்டில் தாங்கி நிற்கிறோம்.
தமிழருக்கெனெ ஒரு தனி நாடு தமிழீழம் அமைப்பதையே நோக்கமாக கொண்டிருக்கிறோம். எங்கள் மண்ணில் எங்கள் சுதந்திர தமிழீழ தேசத்தை கட்டியமைத்து புலிகொடியை பறக்க விட ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம்.
எங்கள் தாயகத்தை மீட்டெடுக்கவே எங்கள் உணர்வுகளை வலைதளங்களில் படங்களாக, எழுத்துக்களாக பதிவிட்டு வெளிப்படுத்துகிறோம்.
தமிழர்களின் தமிழீழ தாகத்தை கண்டு பொறுக்க முடியாமல், கடந்த சில வாரங்களாகவே முகநூலில் விடுதலை புலிகள் சார்ந்த படமிட்டு தமிழர் உணர்வுகளை வெளிப்படுத்துவதை பொறுக்க முடியாத பாசிச பாசக இயக்கி கொண்டிருக்கும் இந்திய ஒன்றியம், முகநூல் நிர்வாகத்திடம் பிரபாகரன் மற்றும் விடுதலை புலிகள் படமிட்ட பதிவுகளை தடை செய்ய மறைமுக உத்தரவிட்டதோடு தொடர்ந்து செய்தால் முகநூல் கணக்கையே முடக்க சொல்லியிருக்கிறது.
இந்த திட்டமிட்ட சமூக வலைதள தமிழின அழிப்பை தமிழர்களாக வன்மையாக கண்டிக்கிறோம்...
இந்திய ஒன்றிய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், மதிமுக பொதுச் செயலாளருமான திராவிட ரத்னா வைகோ அவர்கள் விடுதலை புலிகள் இயக்கம் இந்திய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் கொள்கைகளை பற்றி பேசலாம் என நீதிமன்றத்தில் வாதாடி காப்புரிமை பெற்றுத்தந்திருக்கிறார்.
ஆகவே விடுதலை புலிகளை பற்றி பேசும்போது முகநூல் நிர்வாகம் அதை முடக்கினால், பேச்சு காப்புரிமையை ஆவணமாக கொண்டு முகநூல் நிர்வாகத்தை மன்னிப்பு கோர வைப்பதோடு, தொடர்ந்து பயனர்களின் பதிவுகளை முடக்கினால், முகநூலை இந்திய ஒன்றியத்தில் தடை செய்ய, தமிழ் உணர்வுள்ள வழக்கறிஞர்கள் ஆயிரகணக்கானோர் வழக்கு தொடர்ந்து முகநூல் என்ற சமூக வலைதளத்தையே இந்திய ஒன்றியத்தில் தடை செய்து விரட்டியடித்து, தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகமும் விடுதலை புலிகளுமே என்பதை உலகிற்கு உணர்த்த இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த வேண்டுமென அன்போடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
தணியாத தமிழீழ தாகத்தோடு,
மைக்கேல் செல்வ குமார்
13-05-2019

Sunday, April 29, 2018

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் மதிமுக வெள்ளிவிழா!

கழகத்தின் கண்மணிகளே!

திராவிட இயக்கத்தை கட்டி காத்திடும் இடத்தில் மதிமுக உள்ளது என்பதை தோழமை கட்சிகள் அறிந்து, திராவிட இயக்கத்தின் கடைசி கையிருப்பு தலைவர் வைகோ அவர்கள் செல்லுமிடமெல்லாம் மாலை, சால்வை அணிவித்து மரியாதை செய்வதை காணலாம்.

அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும், அவர்களுக்கு நாம் பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டுமென்று ஜாதி, மத வேற்றுமைகளற்ற பாதுகாப்பான அரசியலை முன்னெடுப்பவர் தலைவர் வைகோ அவர்களும், மதிமுகவும்.

ஜாதி, மத கலவரங்களை தூண்டி அதன் மூலம் ஆதாயம் அடைய துடிக்கும் மத்திய மோடி அரசு, மாநிலங்களின் உரிமைகளை பறித்து மாநிலங்களை மதிக்காமல செயல்படுவதால், ஆட்சியிலிருந்தே அகற்றுவது தமிழர்களின் மிகபெரிய கடமையாகும்.

மாநில சுயாட்சியை முன்னெடுக்கும் வகையில் பல மாநில தலைவர்கள் சந்திப்பு இன்றியமையாததாகிறது. இதன் மூலம் வரும் காலங்களில் மத்தியில் கூட்டாட்சியை நிலைநிறுத்தி, மாநிலங்களில் சுயாட்சியை நிறுவ வேண்டிய தருணம்.

இந்நிலையில்தான் நெருப்பின் மீது தொடங்கப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் வெள்ளிவிழாவை நோக்கி நகர்கிறது.

24 ஆண்டுகள் முடிவுற்று 25 ஆம் ஆண்டின் தொடக்க நாள் மே 6. உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் நம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு புத்துணர்வு கொடுக்கும் விதத்தில் மதிமுக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ருசைல் ரவுண்டானா அருகில் உள்ள செல் பெட்ரோல் நிலையம் அருகாமையில் அமைந்துள்ள “சிம்பொனி டைன் இன்” ல் (பழைய ஸ்பைஸ் வில்லேஜ் ரெஸ்டாரண்ட்) 11-05-2018 மாலை 3 மணி அளவில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

கழகத்தின் கொள்கைகளை உயர்த்தி பிடிக்கவும், கழகத்தின் மேல் கொண்ட பற்றுறுதியை நிலைநாட்டவும், தமிழர் உரிமைகளை மீட்கவும், கடல் கடந்து வாழ்ந்தாலும், தமிழக வாழ்வாதங்களை காக்கும் தலைவர் வைகோ அவர்களின் குரலுக்கு வலிமை சேர்க்க, ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை உறுப்பினர்கள்,  கழகத்தினர் என அனைத்து தமிழர்களும் தவறாது கலந்துகொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
29-04-2018

Thursday, October 12, 2017

15 ஆண்டுகளுக்கு பிறகு செப்பனிடப்பட்ட எங்கள் கிராம சாலை!

2001 அல்லது 2002 ல் வாஜ்பாய் பிரதம அமைச்சராக இருந்த காலகட்டத்தில் போடபட்ட சாலை இப்பொழுது 15 ஆண்டுகளுக்கு பிறகு செப்பனிடப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் மகிழ்ச்சிதான். ஆனால் ஒருவகையில் பண இழப்பையும் ஏற்ப்படுத்துகிறது.

எப்படி என காண்போம்.

நான் பிறந்து வளர்ந்த பொன்னாடாம், சூரிய உதயம் காணும் எங்கள் குமரி மாவட்டத்தின், கொடுப்பைக்குழி கிராமத்தில், இப்போது போடப்பட்டிருக்கும் சாலையின் அருகே இருக்கும் வீட்டின் தரை மட்டம், இந்த சாலை செப்பனிடப்பட்டபின் தாழ்ந்துள்ளது என்பது வேதனையளிக்கிறது. சாலையிலிருந்து அண்ணாந்து பார்த்த வீடுகள், இப்போது சாலையின் மட்டத்திற்கு சரிசமமாக இருப்பது மன உழைச்சலை ஏற்படுத்துகிறது.

சாலை சீரமைப்பது, செப்பனிடுவது என்பது, பழைய சாலையின் மேல் மட்டத்தை அகற்றி விட்டு பழைய சாலை இருந்த அதே உயரத்திற்கு புதிய சாலை போடுவதுதான் சரியான விதி. அப்படி செய்தால், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆனால் தமிழகத்தில் அதற்கு மாறாக, பழைய சாலையை தோண்டி அகற்றுவதற்கு ஒதுக்கிய பணத்தை செலவளிக்காமல், அதற்கு ஒதுக்கிய பணத்தை கொள்ளையடித்துவிட்டு, ஏற்கனவே பழுதாகியிருக்கும் சாலையின் மேல், புதிய சாலை அமைத்துவிட்டு, அரசுக்கு கணக்கு காட்டி விடுகிறார்கள்.

இதனால் அனைத்து சாலைகளின் பக்கத்தில் இருக்கும் அனைத்து வீடுகளும் சாலையை விட தாழ்வானதாக அமைந்துவிடுகிறது.

அப்படியானால் சாலையானது, வீட்டின் தரைமட்டத்திற்கு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது பொருள். இப்படியே போனால் இன்னும் இரண்டு, மூன்று தடவை சாலை செப்பனிடப்பட்டால் , வீட்டு தரை மட்டத்தை விட சாலை மட்டம் உயரமாக இருக்கும். இது சரியான முறை கிடையாது.

இப்படி சாலை உயரமாக இருப்பதால், மழை காலங்களில் எளிதாக மழை நீர் வீட்டினுள் வருகிறது, வீடு பாதிப்படைகிறது. எனவே வீட்டை இடித்து புது வீடு கட்ட வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்படுகிறது.

50 வருடங்களுக்கு திட்டமிட்டு கட்டும் வீடு இதே போன்று சாலைகள் அமைத்தால் 25 வருடங்களிலே இடிக்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது.

இதனால் மக்களின் பொருளாதாரம் வீழ்ச்சிபெறும். தனி நபர் வருமானம் வெகுவாக குறையும். ஆட்சியாளர்கள் காசு சுருட்டும் நிலை ஏற்படும். இது நாட்டுக்கே பெரிய இழப்பாகும்.

இதற்கு பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களே காரணம். அவர்கள் இந்த நிலையை உணர்ந்து மக்கள் பண இழப்பை இனிமேலாவது தடுக்க தனது வீட்டுக்கும் இதே நிலைதான் என புரிந்து பொறுப்புணர்வுடன் கடைமையாற்ற வேண்டும்

இவையெல்லாம் மறுக்கப்படும் பட்சத்தில், வளருகிற தலைமுறை இளைஞர்களாவது வீதிக்கு வந்து இது போன்ற மறைமுகமான அநீதிகளை தட்டி கேட்க வேண்டும்.

கேலி கிண்டல்களை குறைத்து களத்திற்கு வர வேண்டும். அரசுகள் அடிமைகளாக இருப்பதை கண்டிக்க வேண்டும். நாம் வாக்களித்த அரசு நமக்கு நன்மை செய்யவில்லையென்றால், அரசை கவிழ செய்யும் அதிகாரம் வாக்களித்த நமக்கே இருக்க வேண்டுமென்று போராட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிபட்ட நாள் வரும்போதுதான் இந்தியா வல்லரசாகும். தமிழ்நாடு தழைக்கும்.

தமிழ்நாடு முழுதும் இதே நிலை நீடிப்பதை தடுக்க நாம் என்ன செய்ய போகிறோம்.

ஒரே வழி நல்லவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் கொடுப்பது....

சிந்திப்பீர்களா?

ஊர்பாசத்துடன்,
மைக்கேல் செல்வ குமார்