Sunday, November 29, 2020
முகநூல் மார்க் அவர்களுக்கு மைக்கேலின் அன்பு மடல்!
Wednesday, October 14, 2020
நடிகர் விஜய் சேதுபதிக்கு அன்பு வேண்டுகோளும், எச்சரிக்கையும்!
இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்ஷே ஒரு நெல்சன் மண்டேலா என புகழ்ந்து, நெல்சன் மண்டேலாவின் தியாகத்தை கொச்சைப்படுத்தியவன் இந்த தமிழின துரோகி முரளிதரன்.
தமிழீழ இனப்படுகொலையில் காணாமல் ஆக்கப்பட்ட 20000 இளைஞர்களுக்காக அமைப்பு உருவாக்கப்பட்டு அவர்களை மீட்க போராடுகின்றவர்களை நாடகமாடுகிறார்கள் என கொச்சைப்படுத்தியவன் இந்த துரோகி முரளிதரன்.
லண்டனில் ஒரு நிகழ்வில், தமிழ் மக்களிடையே ஒருமுறை தமிழில் பேசுங்கள் என கேட்டபோது தமிழ் தெரியாது என தாய்மொழிக்கு துரோகம் செய்தன் தமிழின துரோகி முரளிதரன்.
அந்த தமிழின துரோகி முரளிதரனின் வாழ்க்கை வரலாறை படமாக்க, சிங்களவன் கொடி பொறித்த ஆடை அணிந்து அவர்களுக்கு சேவகம் புரிவது போல, தமிழின பற்றாளனாக இருக்கும் சகோதரர் விஜய் சேதுபதி நடிப்பது ஏற்புடையதல்ல.
அந்த படத்திலிருந்து விலகி, வருத்தம் தெரிவித்து, பச்சை தமிழனாக வலம் வர வேண்டுமென கேட்கிறேன்.
இனதுரோகிகளுடன் உறவாடி தமிழின துரோகி வரிசையில் இடம்பெற கூடாது எனவும் அன்பு வேண்டுகோள் வைப்பதோடு, சிங்களவனுடன் உறவு தொடருமானால் தமிழ் மக்கள் சினத்திற்கு சின்னாபின்னமாக நேரிடும் என்பதையும் எச்சரிக்கையோடு தெரிவித்துகொள்கிறேன்.
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
14-10-2020
#VijaySethupathi
Saturday, September 26, 2020
கத்தார் மதிமுக நடத்திய பெரியார் அண்ணா பிறந்த நாள்-மைக்கேல் உரை!
Sunday, September 6, 2020
Tuesday, September 1, 2020
ஆர் எஸ் எஸ் கொள்கையை நிறைவேற்ற, ₹600 கோடி நிதியா?
சாயி பல்கலை, முதல் ஏழு ஆண்டுகளில், 600 கோடி ரூபாய் முதலீட்டில், 12 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில், 6,000 மாணவர்களுடன், 300 பேராசிரியர்கள், 300 நிர்வாக பணியாளர்களுடன் இயங்கும்.இரண்டாம் கட்டமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 30 லட்சம் சதுர அடி கட்டடத்தில், 20 ஆயிரம் மாணவர்கள், 1,000 பேராசிரியர்கள், 1,000 நிர்வாக பணியாளர்களுடன் இயங்க திட்டமிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிதாக அமைக்கப்பட உள்ள, சாயி பல்கலைக்கு, 600 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்ட, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று 31-08-2020, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அடிக்கல் நாட்டினார் என்பது மத்திய அரசுக்கு கைகூலியா தமிழக அரசு செயல்படுவதை உறுதிபடுத்துகிறது.
தனியார் பல்கலை கழகம் திட்டமிடுவதற்கு அரசின் நிதி எதற்கு வழங்கவேண்டும் என்ற கேள்வியே இப்போது மிஞ்சுகிறது.
தமிழக அரசு ஆர் எஸ் எஸ் கொள்கையை நிறைவேற்ற இந்த பல்கலை கழகத்திற்கு நிதியை வாரி வழங்குவது கண்டிக்கதக்கது.
மறுமலர்ச்சி மைக்கேல்
Sunday, July 5, 2020
வெளிநாட்டு தமிழர்களை மீட்க கோரிக்கை!















