Sunday, November 29, 2020

முகநூல் மார்க் அவர்களுக்கு மைக்கேலின் அன்பு மடல்!


அன்பு சகோதரர் மார்க் அவர்களே!


"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பயிற்றுவித்த எங்கள் பாட்டன் கணியன் பூங்கன்றனார் ஊரிலிருந்து மைக்கேல் செல்வ குமார் எழுதும் மடல்.

அன்பு சகோதரர் மார்க் அவர்களே!

தமிழ் மக்கள், முகநூலில் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் படத்தையோ, தமிழீழ படத்தையோ, தமிழீழம் சார்ந்த செய்திகளையோ பதிந்தால், பதிவுகள் எங்கள் முகநூல் கணக்குகளிலிருந்து அகற்றப்படுகிறது. முகநூல் கணக்குகள் முடக்கப்படுகிறது. இது தற்போது அல்ல, சில வருடங்களாக நடைபெற்று வருகிறது என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகத்திற்கு எதிரான உங்கள் செயலாகும். இந்த முடக்கங்கள் எல்லாம் உங்களுக்கு தெரிந்து நடக்கிறதா என்று தெரியவில்லை. தெரியவில்லயென்றால் இந்த மடல் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழர்களின் பதிவுகளை முகநூலில் முடக்குவதன் மூலம் தமிழர்களை விடுதலையை தடுக்குறீர்கள், அவர்களை அடிமையாகவே இனவிடுதலை அடையாமல் வைக்க நீங்கள் சிங்கள பெளத்த இலங்கை அரசுக்கு வேலை செய்கீறீர்கள் என்பதை உங்கள் மீது குற்றச்சாட்டாக வைக்கிறேன்.

தமிழீழம் சார்ந்த பதிவுகளை, நீங்கள் தமிழ் மக்களிடத்தில் பேசி அறிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ஆபாச படங்களையோ கொலை கொள்ளை சம்பவங்களையோ ஆதரிக்கும் படங்கள் முகநூலில் வந்து பெண்களை முகம் சுழிக்க வைக்கிறதே? அப்படி பட்ட பதிவுகளை நீங்கள் தடுக்காமல் தமிழர்களின் தமிழீழ உணர்வுகளை முடக்க நினைக்கிறீர்கள் என்று உங்களை குற்றம்சாட்டுகிறேன். நீங்கள் என்று சொல்வது தனிநபரான உங்களை அல்ல உங்கள் முகநூல் நிறுவனத்தை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

அப்படியான ஆபாச பதிவு செய்பவர்களை முடக்குவதில்லை. அவர்கள் அதிகம் எழுதுகிறார்கள். அவர்கள் மேலும் சுதந்திரம் கொடுத்து எழுத தூண்டுவதுபோல அவர்களை தடை செய்யாமல் இருப்பது முகநூல் நிறுவனத்தின் நம்பகதன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.

தமிழ் மக்கள் இதயங்களிலிருந்து தமிழீழத்தையும் மேதகு வே பிரபாகவன் அவர்களையும் அழிக்கவோ நீக்கவோ முடக்கவோ முடியாது. மாறாக அடக்குமுறை ஒடுக்குமுறை என்பது தமிழர்களை திமிறி எழவே செய்யும் என்பதை கூறிகொள்கிறேன்.

இப்படியே எங்களின் தமிழீழ உணர்வுகளை வேகமாக வீரியமாக முடக்குவீர்களேயானால், எங்கள் உணர்வுகளை முடக்க முடக்க தமிழீழம் மலரும் காலம் விரைவாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழர்களின் விடுதலைக்கு ஆதரவு கரம் நீட்டவில்லையென்றாலும் கேடு விளைவிக்காமல் இருங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

தமிழர்களின் உணர்வுகளை அறிந்துகொண்டு, ஆராய்ந்து புரிந்து பதிவுகள் மீதான நீக்கம், முடக்கத்தை இனிமேலாவது செய்யாமல் இருக்க வேண்டுமென்று உங்கள் முகநூல் நிறுவனத்தை கேட்டுக்கொள்கிறேன். இதை translator மூலம் படித்து புரியாத பட்சத்தில் உங்கள் நிறுவனத்தில் பணி செய்யும் உணர்வுள்ள தமிழன் மூலம் பதிவின் உண்மையை அறிந்து இனிமேலாவது தமிழர்கள், தமிழீழம் சாந்த பதிவுகளை செய்ய அனுமதிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்
தமிழன், தமிழ்நாடு, இந்தியா

Wednesday, October 14, 2020

நடிகர் விஜய் சேதுபதிக்கு அன்பு வேண்டுகோளும், எச்சரிக்கையும்!

2009 ல்‌ தமிழீழம் மக்கள் சிங்கள வெறியர்களால் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டு இனப்படுகொலை செய்த  அன்று, இன்றைக்குதான் நான் நிம்மதியாக் தூங்குவேன். இதுதான் என்னுடைய மகிழ்ச்சியான நாள் என்று துரோகம் உரைத்தவன் முரளிதரன்.

இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்‌ஷே ஒரு நெல்சன் மண்டேலா என புகழ்ந்து, நெல்சன் மண்டேலாவின் தியாகத்தை கொச்சைப்படுத்தியவன் இந்த தமிழின துரோகி முரளிதரன்.

தமிழீழ இனப்படுகொலையில் காணாமல் ஆக்கப்பட்ட 20000 இளைஞர்களுக்காக அமைப்பு உருவாக்கப்பட்டு அவர்களை மீட்க  போராடுகின்றவர்களை நாடகமாடுகிறார்கள் என கொச்சைப்படுத்தியவன் இந்த துரோகி முரளிதரன்.

லண்டனில் ஒரு நிகழ்வில், தமிழ் மக்களிடையே ஒருமுறை தமிழில் பேசுங்கள் என‌ கேட்டபோது தமிழ் தெரியாது என தாய்மொழிக்கு துரோகம் செய்தன் தமிழின‌ துரோகி முரளிதரன்.

அந்த தமிழின துரோகி முரளிதரனின் வாழ்க்கை வரலாறை படமாக்க, சிங்களவன் கொடி பொறித்த ஆடை அணிந்து அவர்களுக்கு சேவகம் புரிவது போல, தமிழின பற்றாளனாக இருக்கும் சகோதரர் விஜய் சேதுபதி நடிப்பது ஏற்புடையதல்ல.

அந்த‌ படத்திலிருந்து விலகி, வருத்தம் தெரிவித்து, பச்சை தமிழனாக வலம் வர வேண்டுமென கேட்கிறேன்.

இனதுரோகிகளுடன் உறவாடி தமிழின துரோகி வரிசையில் இடம்பெற கூடாது எனவும் அன்பு வேண்டுகோள் வைப்பதோடு, சிங்களவனுடன் உறவு தொடருமானால் தமிழ் மக்கள் சினத்திற்கு சின்னாபின்னமாக நேரிடும் என்பதையும் எச்சரிக்கையோடு தெரிவித்துகொள்கிறேன்.


மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
14-10-2020
#VijaySethupathi

Saturday, September 26, 2020

கத்தார் மதிமுக நடத்திய பெரியார் அண்ணா பிறந்த நாள்-மைக்கேல் உரை!

கத்தார் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் இணையவழி கருத்தரங்கமாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் 25-09-2020 மாலை‌ நேரத்தில்  கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினராக திராவிட ரத்னா அன்பு தலைவர் வைகோ அவர்களின் போர்வாள் மல்லை தந்த முல்லை கழக துணை பொதுச் செயலாளர் ஆருயிர் அண்ணன் Mallai C E Sathya அவர்கள் நிகழ்வின் இறுதி பேருரையாக பெரியார் அண்ணா பற்றி விளக்கமாக உரையாற்றினார்கள். 

அண்ணன் ஏ.எஸ்.மோகன் மதிமுக அவர்களும் வேலை பளுவின் மத்தியிலும் உரை நிகழ்த்தினார்.

வளைகுடா அமைப்பாளர் வல்லம் பசீர் அருமையானதொரு உரை தந்தார்.

குழந்தைகளை நல்லவர்களாக வார்ப்பித்து பாடங்களை கற்பித்து வரும் ஆசிரியர் ஒரு சகோதரனாக என்னிடத்தில் அன்பு பாராட்டுகின்ற அன்பு சகோதரி ஆசிரியர் அன்பியல் ஜேஜே தனக்கே உரிதான செருக்கோடு அழகிய தமிழ் மணக்க‌ உரை நிகழ்த்தினார்.

கத்தார் நிர்வாகிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்து நல்லதொரு உரை நிகழ்த்தினார்கள்.

அடியேனும் ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் கலந்துகொண்டு பெரியா‌ர் அண்ணா பற்றி சில கருத்துக்களை கூறி சிற்றுரை நிகழ்த்தினேன்.

பெரியார் அண்ணா புகழ் ஓங்குக.

வாய்ப்பு வழங்கிய கத்தார் கழகத்தாருக்கு நன்றி.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, September 1, 2020

ஆர் எஸ் எஸ் கொள்கையை நிறைவேற்ற, ₹600 கோடி நிதியா?

சென்னையில், 2019 ஜனவரி மாதம், நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், செங்கல்பட்டு அடுத்த பையனுாரில், 103.07 ஏக்கர் நிலத்தில், சாயி பல்கலை அமைக்க, தமிழக அரசின் உயர் கல்வித் துறைக்கும், சாயி கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.


சாயி பல்கலை, முதல் ஏழு ஆண்டுகளில், 600 கோடி ரூபாய் முதலீட்டில், 12 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில், 6,000 மாணவர்களுடன், 300 பேராசிரியர்கள், 300 நிர்வாக பணியாளர்களுடன் இயங்கும்.இரண்டாம் கட்டமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 30 லட்சம் சதுர அடி கட்டடத்தில், 20 ஆயிரம் மாணவர்கள், 1,000 பேராசிரியர்கள், 1,000 நிர்வாக பணியாளர்களுடன் இயங்க திட்டமிடப்பட்டுள்ளது.


செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிதாக அமைக்கப்பட உள்ள, சாயி பல்கலைக்கு, 600 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்ட, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று 31-08-2020, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அடிக்கல் நாட்டினார் என்பது மத்திய அரசுக்கு கைகூலியா தமிழக அரசு செயல்படுவதை உறுதிபடுத்துகிறது.


தனியார் பல்கலை கழகம் திட்டமிடுவதற்கு அரசின் நிதி எதற்கு வழங்கவேண்டும் என்ற கேள்வியே இப்போது மிஞ்சுகிறது.


தமிழக அரசு ஆர் எஸ் எஸ் கொள்கையை நிறைவேற்ற இந்த பல்கலை கழகத்திற்கு நிதியை வாரி வழங்குவது கண்டிக்கதக்கது.


மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, July 5, 2020

வெளிநாட்டு தமிழர்களை மீட்க கோரிக்கை!


உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் தாயகம் வர தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

வெளிநாட்டு தமிழருக்கான தனி நல அமைச்சகமும், வாரியமும் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள்.‌

2011 ல் அறிவித்த வெளிநாடு தமிழர்கள் நல சட்ட வாரியம், இயங்காத நிலையில் தமிழக அரசு தலையிட்டு சரியான வழிமுறைகளை வகுத்து பாதிக்கப்படும் தமிழர்களை தாயகம் மீட்டு வரவும் ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஓமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

#BringBackTamils
#SetUpMinistryOfPersonalWelfare
#SetUpSeparateWelfareBoard

Saturday, November 16, 2019

World CIO 200 Submit Winner Award!

World CIO 200 Submit Winner Award 2019 at Oman.  Thanks to my Management team (Golden Tulip Nizwa Hotel), colleagues, Friends & Family. They encouraged, supported in all the ways to achieve this CIO (Chief Information Technology Officer) award.  Among 80 nominated, 14 were selected from Sultanate of Oman.

Regards,
Micheal Selva Kumar