Wednesday, August 24, 2016

நாஞ்சில் நாட்டு மைந்தன் சிங்கப்பூர் மறுமலர்ச்சி நண்பர்கள் செயலாளர் அண்ணன் சுகுமாரன்!

தமிழ்நாட்டின் தென் கோடியாம் நாஞ்சில் நாடு என அழைக்கப்படும் குமரி மாவட்டத்தின் மைந்தன் அண்ணன் சுகுமாரன் அவர்களிடம் முகநூலில் பேசியிருக்கிறேன். அவரை பற்றி மிக அறிந்திருந்தாலும் அவரிடம் அலைபேசியினூடாக பேசியதில்லை. ஆனால் நேற்று 23-08-2016 அரை மணி நேரத்திறு மேலாக உரையாடினார்.

நேற்று இரவு முகநூலில் பேசிக்கொண்டிருக்கும்போது அண்ணன் சுகுமாரன் அவர்கள் அழைக்கிறேன் என்றார். சரி அண்ணா என்று எனது அலைபேசி இலக்கத்தை பரிமாற அழைப்பு வந்தது. 

அண்ணா நலமா என விசாரிக்க அவரும் நலம் விசாரித்தார். ஊர் பற்றி பேசினோம். இப்போது அதிக மாற்றங்கள் ஊரில் இருக்கிறது என்பதை பற்றியும், ஊரில் இருக்கும் குடும்பங்கள், நண்பர்கள் அனைவரையும் பற்றி பேசினோம்.

அப்போது அவர் ஊரான மேல்கரை அருகிலுள்ள திங்கள் சந்தை பற்றி பேசும்போது சம்பத் சந்திரா அவர்கள் தொடங்கி கழக பேச்சுக்கள் தொடர்ந்தன. மக்கள் மனோ நிலை தேர்தலில் எப்படி மாறுபடுகிறது என்பதையும் பேசினோம். 

அண்ணன் சிங்கப்பூர் மறுமலர்ச்சி நண்பர்கள் செயலாளராக இருப்பதால் சிங்கப்பூர் வாழ்க்கை முறைகள், வாழ்வில் ஏற்ப்படுகின்ற சந்தோசங்கள், இழப்புகளால் ஏற்ப்படுகின்ற மன வருத்தங்கள் அனைத்தையும் அசைபோட்டோம். ஆனாலும் நாஞ்சில் நாட்டு மண்ணுக்கே உண்டான வீரம் நிறைந்திருப்பதால் அண்ணன் அனைத்து தடைகளையும் தாண்டி சிங்கப்பூரில் மகிழ்ச்சியாக வாழ்கிறார் என்று சொல்ல எனக்கும் மனதில் மகிழ்ச்சியாக இருந்தது.

அப்போது நான் ஓமனில் இருப்பதை பேசும்போது, அவரும் 20 வருடத்திற்கு முன்னர் நான் இருக்கும் ஊரின் அருகிலுள்ள பர்க்கத் அல் மவுஸ் என்னும் இடத்தில் அவர் வேலை பார்த்ததையும், அந்த வேலைகளை விட்டு இடம் பெயர்ந்ததையும் சொல்லும்போதே அண்ணன் கழக வாஞ்சை அந்த காலத்திலேயே மேலோங்கி இருந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது,

எங்கள் மாவட்டத்து காரர் அண்ணன் சுகுமாரன் அவர்கள் 2014 ல் மலேசியாவில் ஒரு வார காலம் தங்கி தலைவர் வைகோ அவர்களுடன் இருந்ததையும், பின்னர் சென்னையில் தலைவரையும் சந்தித்ததையும் பேச இன்னும் பல நினைவலைகள் எங்கள் மனதில் நிழலாடின.

தமிழனுக்கே உரிய அன்பு கலந்து உங்களிடன் பேசவேண்டும் என நினைப்பேன். ஆனால் முடியாமல் போய் விட்டது. அதனால்தான் இன்று அழைத்தேன் என்று அண்ணன் சொன்னபோது, என் மனதில் எவ்வளவு பெரிய ஆள் எளியவனான என்னையும் அழைத்து நலம் விசாரித்து அன்பு பாராட்டுகிறார் என்று நினைக்க, அதற்கு காரணமானவர் ஈரெழுத்து மந்திரம் வைகோ அவர்கள் தான் என்பது இன்னும் உணர்வுபூர்வமானது. 

மதிமுக என்பதே ஒரு குடும்ப உணர்விலே இயங்கும் இயக்கம் என்பது இதே போன்ற சான்றுகள் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன. அயல் நாட்டிலிருந்தாலும் கழக வளர்ச்சிக்கு பாடுபடுகிறார். அனைத்து சவால்களையும் திறம்பட கையாண்டு அண்ணன் இன்னும் வாழ்வில் அதிக வெற்றியடைய வேண்டும்.

அன்பு பாராட்டிய அண்ணனுக்கு மிக்க நன்றிகள்.

அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, August 23, 2016

இசை நாயகன் ஜிம்-க்கு பிறந்த நாள் வாழ்த்து!

கச்சி விளையாடிய பருவத்தில்,

கிணத்தருகே வேடிக்கை பார்ப்பான்,

சிங்காம்பிள்ளை விளையாடும்போது,

சினத்துடன் சீறி செல்வான்.

மட்டைப்பந்து விளையாடும்போது

மல்லு கட்டி மடை திறப்பான்.

உடற்பயிற்ச்சி கூடத்தினை

அவன் பெயராலே அழைத்ததுண்டு.



நாங்களே சிறுவர்கள், ஆனால் அவனோ,

எங்களுக்கே சிறுவனாக தெரிந்தான்.

நாங்களோ படித்து, பரதேசம் தேடி,

அவனோ வளர்ந்து வாலிபனாகிவிட்டான்.

தொண்டாற்றும் தன்மை கொண்டான்.

வருடங்கள் கடந்தன கல்லூரி மாணவனானன்.

இசையால் பல சபைகளை கையாண்டான்

இன்றோ இசையை உருவாக்கும் மேதையவன்.



இசையில் இயக்குனராகலாமே என்றேன். 

சினிமாவில் நாட்டமிலை என்றான்.

உயிருள்ள பொது இசையை நாடினாய்,

நாடு போற்றும் இசை கலைஞனாவாய்.

புகழ் பெரிதும் கிடைத்திடவே

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.


அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, August 21, 2016

"நாங்கள் கண்டெடுத்த திரவியம்" ஐயாவுக்கு பிறந்த தின வாழ்த்து!


விவாதத்திற்கு வேரமைத்து,

நீர் ஊற்றி தாகம் தணிக்க,

புயலாய் வந்து அசைத்து பார்த்து,

சக்தி உண்டா என சோதனையிட்டு,

பக்குவமாய எடுத்துரைத்தும்,

பண்பினை சொல்லி கொடுத்தும்,

அறுபதையும் ஆற்றலுடன் தாண்டி,

எங்கள் இளம் வயதை கவர்ந்திழுத்து,

அனைவரையும் தன்னில் அரவணைத்து,

அன்பென்னும் ஆயுதத்தால் ஆட்கொண்ட,

எங்களுக்கு கிடைத்த திரவியமே!

ஊர் போற்ற உங்கள் வாழ்வு

நாள் தோறும் சிறப்புற்றிட

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.


அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, August 19, 2016

பன்னாட்டு ஒளிப்பட தினமாம்!


இன்று 19-08-2016 பன்னாட்டு ஒளிப்பட தினமாம்...
.
இந்த ஒளிப்படத்தை விட நான் வேறென்ன ஒளிப்படத்தை பதிவிட முடியும். என் இனம் இன்னும் முள் வேலிக்குள் அல்லவா அடைந்து கிடக்கிறது. நஞ்சை அல்லவா அருந்த செய்கிறான் சிங்களவன். தமிழனுக்கென்று ஒரு நாடு இருந்தால் தமிழனுக்கு இந்த அவலம் நடந்திருக்குமா...
.
துரோகிகளும் எட்டப்பர்களும் இருக்கும் நாட்டில் தமிழீழ குடியரசு மலரும் நாள் தான் எமக்கான ஒளிப்படம் விடுதலையின் ஒளிப்படமாக இருக்கும்.

.
மறுமலர்ச்சி மைக்கேல்

அண்ணன் அய்யலுசாமி அவர்களின் அன்பு மழையில் இன்று!

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அண்ணன் அய்யலுசாமி அவர்கள் என்னை வாட்சப்பில் தொடர்பு கொண்டு மைக்கேல் நான் இப்போது நிஸ்வாவில்தான் உள்ளேன் என்றார். அதற்கு முன் மஸ்கட்டில் வேலை பார்த்தார் அப்போதே சொன்னேன் அண்ணே உங்களை வெள்ளி கிழமை விடுமுறையாதலால் சந்திக்கிறேன் என்றேன். ஆனால் அந்த வெள்ளி கிழமை சந்திக்க இயலவில்லை வேறு வேலை இருந்ததால். 

அடுத்த வாரம் அண்ணா சந்திக்க வருகிறேன் என்ற போது அவர் ஷாப்பிங்க் செல்கிறேன் என்றார். சரி அண்ணா அங்கே சந்திக்கிறேன் என்றேன். அப்ப்போது என் நண்பன் சதீசுடன் அவனது காரில் ஒரு நண்பரை மருத்துவமனை அழைத்து சென்று விட்டு சந்திக்கலாம் என்ற நினைத்த வேளையில் அன்றும் வாய்ப்பை இழந்தேன். 

ஆதலால் இந்த வாரமாவது சந்தித்து விடவேண்டுமென்று நினைத்து இன்று 19-08-2016 காலையிலே தகவல் தெரிவித்துவிட்டு சென்றேன். நான் இருக்கும் இடத்தில் இருந்து 25-30 கிலோ மீட்டர் தூர பயணம் செய்து சென்றேன். அந்த இடம் பர்க் இடைத்தை தாண்டிய இடம். அதில் SAUD BHAWAN KIA MOTORS ல் டாக்சியை நிறுத்தி இறங்கி பார்க்கும்போதே எனக்காக காத்திருந்த அண்ணன் அய்யலுசாமி அவர்கள் கை அசைத்து அவர் நிற்பதை உறுதி செய்தார்கள். 

பின்னர் என்னை அழைத்து அவருடைய அலுவலகம் அழைத்து சென்று உடனே தமிழர் வழக்கப்படி நீர் அருந்துங்கள் என்று புதிய பாட்டிலை திறந்து கொடுக்க நானும் குடித்துவிட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது 1 மணி நேரத்திற்க்கு மேலாகிவிட்டது. அந்த இடைவெளியிலும் எனக்காக இனிப்பு உணவுகளும், இனிப்பு நீர் ஆகாரமும் எனக்காக வாங்கி வைத்ததை கொடுக்க அண்ணன் அய்யலுசாமியும் நானும் பருகினோம்.

கழகம் சார்ந்து பேச தொடங்கி, தேர்தல் தொடக்கம், முடிவு, ஓமன் இணையதள நண்பர்கள், குடும்பம், வேலை என எல்லாவற்றையும் அசைபோட்டோம். அண்ணனின் அன்பு கலந்த வார்த்தைகள் ஓமனில் இன்று ஒரு இன்பத்தை தந்தது. ஏனென்றால் எங்கு பார்த்தாலும் அரபி வார்த்தைகள் ஆங்கில வார்த்தைகள். அவ்வப்போதுதான் தமிழ் எனவே அதுவும் ஒரு ஆனந்தம்.

பின்னர் கடைசியில் அண்ணனின் அலைபேசியிலேயே அண்ணனுடன் ஒரு செல்பி எடுத்துவிட்டு விடைபெற்றேன். அண்ணன் அய்யலுசாமி அவர்கள் ஒரு நண்பரை அனுப்பி எனக்கு டாக்சி நிறுத்தத்தை காட்டிவிட செய்துவிட்டு டாக்சியில் செல்லும் வரை காத்திருந்து வழியனுப்பினார்கள். அன்பு பாராட்டி என்னை உணர்வுகளால் நிரப்பிய அண்ணன் அய்யலுசாமி அவர்களுக்கு என் நன்றி...

அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, August 9, 2016

உதித்த நாள் நல் வாழ்த்துக்கள் சுரேஷ் அண்ணா!

அண்ணன் புகழ் பாட,

அனுதினமும் ஆழ்ந்து உணர்ந்து,

ஆன்றோர் சொல் கேட்டு,

தம்பியவன் தனிப் பாட்டில்,

தமையனை தாங்கி பிடித்து,

உள்ளமென்னும் ஓரக் கண்ணால்,

உள்ளூர மனம் பகுத்தறிந்து,

வெண் பல் புன்னகையுடன்,

வாழ்வாங்கு வாழ்வீர் நீர்.

தாயகத்தை பெயரில் சேர்த்து,

புலியின் கரம் பற்றி,

வார்ப்பிப்புடன் வெற்றி காண,

தம்பியின் புகழ் வாழ்த்தை,

மனம் திறந்து ஏற்றுக்கொள்ளும்,

உதித்த திருநாள் நல்வாழ்த்துக்கள்.


அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, August 7, 2016

மனம் காணும் நட்புகளுக்கு மனதார நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

உலகில் இறைவனுக்கே கிடைக்காத வரம் உண்டென்றால் அது நண்பர்கள் மட்டுமே. ஆனால் மனிதர்களாகிய நமக்கு நட்புகள் கிடைத்திருக்கிறது என்றால் அது புனிதமானதாகவே கருதப்படவேண்டியது.

உற்றார் உறவினர்கள் கூட எதிர்பார்ப்பார்கள். ஆனால் எதிர்பார்க்காத உணர்வென்றால் நண்பர்கள் மட்டுமே. நண்பர்கள் சிறு வயது முதல் தொடங்கி இப்போதை நம் வயது வரை நண்பர்கள் வட்டம் பெருகிக்கொண்டேதான் இருக்கிறது. 

ஏதோ ஒரு உள்ளூர உணர்வுதான் நண்பர்களாக இணைக்கிறது. நட்பு என்பது செல்லுமிடங்களிலெல்லாம் உணர்வை ஊட்டி வளர்க்கும் ஊடகமாகவே அமைகிறது. இதில் ஒரே தட்டில் உண்டும், ஒரே போர்வையை இழுத்து பிடித்து  உறங்கியும், திருவிழா காலங்களில் இளநீர் பறித்து குடித்துவிட்டு மீந்ததை வேறு விடயங்களுக்காக பயன்படுத்தியதும், நுங்கு பறித்து வெட்ட வெட்ட குடித்துவிட்டு, மீந்ததை கண்ணீரில் விட்டு கண்ணை குளிர வைத்ததும், கிணத்தடி அரட்டைகளும், ஒரு சைக்கிளில் 4 பேர் பயணங்களும், ஒரே ஐஸ்கிரீமை பலபேர் சாப்பிட்ட நாட்களும்தான் மறக்க முடியாதவை. ஆனால் இன்னும் பல சொல்ல வேண்டுமென்றால் நட்புகளின், நண்பர்களின் உணர்வு கலந்த பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்றைக்கும் 07-08-2016 காலையில் நான் சிற்றுண்டி சாப்பிட்டு வரும் வழியில் நண்பர்கள் கொள்ளிக்கட்டை ஊதுவதற்காக வரும் நேரத்தில் எதிர்ப்பட்டார்கள். அவர்கள் கொள்ளிக்கட்டை ஊதினால், நான் இருந்தால் சற்று தள்ளிதான் நிற்ப்பார்கள். பேசிக்கொண்டே அவர்கள் ஊதிக்கொண்டிருப்பார்கள். அப்போது நான் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது நான் நின்ற தோரணையை பார்த்து ஒரு நண்பர் அதை படம் பிடி அழகாக இருக்கிறது இந்த போஸ் என்று அடுத்த நண்பனின் ஆப்பிள் அலைபேசியில் படம் பிடித்தார்கள். பார்த்தீர்களா நட்பு என்பது எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டுமே வெளிப்படுத்தி நண்பர்களை மகிழ்விக்கும் ஒரு அடையாளம்.

அனைவரும் நட்போடு வாழ்வோம். ஆயுளை பெருக்குவோம்.

நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்.


நட்பில்,
மறுமலர்ச்சி,
மைக்கேல் செல்வ குமார்