Tuesday, August 9, 2016

உதித்த நாள் நல் வாழ்த்துக்கள் சுரேஷ் அண்ணா!

அண்ணன் புகழ் பாட,

அனுதினமும் ஆழ்ந்து உணர்ந்து,

ஆன்றோர் சொல் கேட்டு,

தம்பியவன் தனிப் பாட்டில்,

தமையனை தாங்கி பிடித்து,

உள்ளமென்னும் ஓரக் கண்ணால்,

உள்ளூர மனம் பகுத்தறிந்து,

வெண் பல் புன்னகையுடன்,

வாழ்வாங்கு வாழ்வீர் நீர்.

தாயகத்தை பெயரில் சேர்த்து,

புலியின் கரம் பற்றி,

வார்ப்பிப்புடன் வெற்றி காண,

தம்பியின் புகழ் வாழ்த்தை,

மனம் திறந்து ஏற்றுக்கொள்ளும்,

உதித்த திருநாள் நல்வாழ்த்துக்கள்.


அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment