Monday, October 31, 2016

பொருளாதார சுமையில் களை இழந்த எங்கள் Staff Party!

ஒவொரு வருடமும் நான் பணி செய்யும் நிறுவனத்தில் பணி செய்யும் கீழ் நிலை ஊழியர்கள் முதல் மேல் நிலை ஊழியர்களுக்காக பார்ட்டி (Annual Staff Party) நடைபெறும். அது மாலை 6 மணி அளவில் தொடங்கி இரவு 2 மணி வரை நடக்கும்.

அனைவருக்கும் பரிசுகள், மேலும் காசு கூப்பன்கள் போன்றவை கிடைக்கும். மேலும் பல திறன் சார்ந்த போட்டிகளும் நடக்கும் அதற்கு அருமையான பரிசு பொருட்களும் கிடைக்கும். சந்தோசங்கள் நிறைந்தே காணப்படும். சிரிப்புக்கு அளவே இருக்காது. கை தட்டல்கள் காதுகளை துளையிட முயலும்.

பல விதமான நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றுவோம். ஆனால் இந்த வருடம் ஒன்றிரண்டு திறன் போட்டிகள் ஒரு சில துறைகளுக்கு மட்டுமே நடத்தப்பட்டது, சில துறைகளுக்கு நடத்தப்படவில்லை நேரமின்மை என கூறப்பட்டது.

ஏனென்றால் இந்த தடவை காலை 11.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது. அதில் ஒரு சில திறன் போட்டிகளுக்கு நேரங்கள் அதிகமாக செலவளிக்கப்பட்டுவிட்டது. சில கலகலப்பான போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை.

ஒரு சில போட்டிகள் மட்டுமே நடைபெற்றாலும் பரிசுகளும் எப்போதும் போல அல்லாமல் ஆறுதல் பரிசுகள் போலதான் இருந்தன.

உணவு வகைகள் ஒரு சில புது வகைகளே இருந்தன. அதையும் அந்த துறை அல்லாத பணியாளர்களின் கைவண்ணத்தில் செய்யப்பட்டாலும் சுவை இருந்தது. ஆனால் அதிகமான வைகைகள் காட்சிப்படுத்தப்படவில்லை. ஏனென்றால் எங்கள் நிறுவனம் 4 நட்சத்திர உணவு விடுதி. அங்கே உணவுகளை காட்சி படுத்துதல் அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த தடவை எதுவுமே இல்லாதது போன்ற உணர்வு. ஒரு சில புகைப்படங்கள் கடமைக்கு எடுத்தது போன்ற உணர்வுதான் ஏற்ப்பட்டது.

மொத்தத்தில் இந்த வருடம் ஒரு நிறைவு இல்லாதது போலிருந்தது. எல்லாம் காரணம் கச்சா எண்ணெய் விலை குறைவுதான் என்றால் நம்பவா போகிறீர்கள். ஆம் எங்கள் நிறுவனமும் பாதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை குறைவால் அரசு துறை அதிகாரிகள் எங்கள் ஹோட்டலில் தங்குவதில்லை. ராஜா எங்கள் பகுதியில் உள்ள அரண்மனைக்கு வராததாலும், அதனால் அரசு துறை ஊழியர்கள் தங்குவது குறைந்ததாலும், மேலும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் நிகழ்ச்சிகளை இந்த வருடம் குறைத்துக் கொண்டதால் அதன் இழப்பும் அதிகமாகவே இருந்தது. சுற்றுலா வரும் வெளிநாட்டினரும் சில அச்சுறுத்துதல்களால்,அவர்களின் வருகையும் மிக குறைந்துவிட்டது.

அதனால் எங்கள் நிறுவன மொத்த வருமானம் மிக குறைந்து பட்ஜெட்டை விட குறைவாகவே காணப்படுகிறது. அதன் தாக்கம் ஊழியர்களின் வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் பார்ட்டியிலும் நெருக்கடியை ஏற்ப்படுத்தியது என்பதே நிதர்சனம்.

இது வரை கடன் வாங்காத நான் பணி செய்யும் ஓமன் நாடு இந்த 2016 ஆம் ஆண்டு கடன் வாங்கி பட்ஜெட் போட்டது என்பது ஆச்சரியமும் அதிர்ச்சியுமாகும். மேலும் அனைத்து அரபு நாடுகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது. சில நாடுகள் சிறிதளவு தப்பித்திருக்கிறது. உதாரணம் துபாய்.

ஒரு நாட்டில் பொருளாதாரம் இல்லையென்றால் எந்த விடயங்கள் எல்லாம் தடைபடுகிறது. அதனால் மகிழ்ச்சி எவ்வளவு தடைபடுகிறது என்பதற்கு நேற்று நடந்த எங்கள் பார்ட்டியே சான்று.

எண்ணெய் விலை இப்படியே போனால் இன்னும் 3 ஆண்டுகள் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும். ஏற்கனவே குறைக்கப்பட்ட ஊதியம் கூட கிடைக்கப்பெறாமல் போகும் நிலை வரலாம். வெளிநாட்டினர், குறிப்பாக இந்தியர் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும்.

அந்த நிலை உருவானால் எங்களை போன்றோர் நிலை? அடுப்பை கோழி கிண்டும் நிலைதானோ? மோடி விழித்துக்கொள்வாரா?

மறுமலர்ச்சி மைக்கேல்

Saturday, October 29, 2016

தீபாவளி நல் வாழ்த்துக்கள் 2016!

சிறிய மண் விளக்குகளை வரிசையாய் வைத்து அதில் எண்ணையுடன் திரியை வைத்து, விளக்கேற்றி அதிலுள்ள ஒளியின் மூலம் இருள் நீக்கி வெளிச்சம் தரும் நன்நாளே "தீபாவளி" எனும் "தீபஒளி" திருநாளாகும்.

இந்த தீபாவளி திருநாளில், தீய எண்ணங்களை அழித்துவிட்டு நல்ல எண்ணம் எனும் ஒளியை மனதில் ஏற்ற வேண்டும் என்பதையே தீப ஒளியின் மூலம் பறைசாற்றப்படுகிறது.

தீபாவளி திருநாளில் புத்தாடையுடன் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த "தீபஒளி" திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Saturday, October 22, 2016

இந்திய கபடி அணிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! வாழ்வாதாரத்திற்கும் நடுவன் அரசு ஏற்ப்பாடு செய்ய வேண்டும்!

உலக கோப்பை கபடி போட்டி இந்தியாவில் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய கபடி அணி தொடர்ந்து 3 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றி ஹாட்ரிக் அடித்து சாதனை படைத்துள்ளது. இதில் முன்னணி இந்திய வீரர் 14 புள்ளிகள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு எடுத்துச் சென்றார்.

அரையிறுதி போட்டியில் தாய்லாந்துடன் விளையாடி அணி தாய்லாந்து அணியை அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்க்கடித்து, இறுதி சுற்றுக்கி தேர்வாகியிருந்த ஈரானுடன் மோத முடிவானது.

இன்று நடந்த போட்டியில் ஈரான் முதலில் ஆதிக்கம் செலுத்தினாலும், இந்தியா 38-29 என்ற புள்ளி கணக்கில் ஈரானை தோற்க்கடித்து வெற்றிக்கொடியை நிலைநாட்டியது.

தொடர்ந்து வெற்றிக்கொடியை நிலைநாட்ட அரும்பாடு பட்ட வீரர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு உறுதுணையாக இருந்து வீரர்களின் உடல் நலனிலும், ஊக்கமும் அளித்த பயிற்ச்சியாளருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வெற்றி கோப்பையை கைப்பற்றிய கபடி வீரர்களுக்கு இந்திய நடுவண் அரசு அதிக பரிசு தொகையை அறிவித்து அவர்களது வாழ்வாதாரத்திற்காக மரியாதையான அரசு வேலையையும் வழங்கிட வலியுறுத்துகிறேன்.

வீரர்களை உற்சாகப்படுத்தும் பட்சத்தில், வீரர்கள் இன்னும் வேகமாக தங்கள் திறமைகளை நிரூபிக்க, இப்படிபட்ட ஊக்க பரிசுகள் வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

வைகோவின் களப்புலியை கண்டு இணையமே பயந்துவிட்டதோ?

பல நாட்களாகவே முகநூலில் நண்பர்கள் அழைத்தால் ஒலி எதுமே கேட்காது. பின்னர் நான் தனி செய்தியில் நண்பர்களிடத்தில் சொல்வேன் இந்த நாட்டில் வாய்ஸ் எல்லாம் பிளாக் செய்கிறார்கள் என்று. அப்புறம் நாங்கள் தனிசெய்தியில்தான் பேசுவது வழக்கம்.

ஆனால் சிறுது நேரத்திற்கு முன் வைகோவின் வரிப்புலி அண்ணன் திருப்பதி சாய் அவர்கள் அழைத்தார்கள். நான் எப்போதும் போல அட்டன் செய்தேன். நானும் ஒலி கேட்காது, தனி செய்தியில் ஒலி கேட்கவில்லை என்ற செய்தி சொல்ல மினிமைஸ் செய்கிறேன் ஒலி கேட்டுவிட்டது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இன்றைய நிகழ்வுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தலைவர் சந்தோசமாக இருந்தார் என்று அண்ணன் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.

பாருங்கள் என்ன ஆச்சரியம் வைகோவின் வரிப்புலி அழைப்பார் என்று இணையமே அதிர்ந்துவிடும் என பயந்து மார்க் சரி செய்துவிட்டாரோ?

மகிழ்ச்சியான தருணம் திருப்பதிசாய் அண்ணா நன்றி.

தமிழன்புடன்,

மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, October 21, 2016

குமரி கட்டளை தளபதி தலமையில் சென்னைக்கு!

புலிப்படை தலைவனை காண குமரி மாவட்டத்திலிருந்து மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர் டிமிட்டிலால், ஓமன் இணையதள அணி உறுப்பினர் மாஹீன் ஆகியோர் சென்னை பயணம்.

நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தாயகத்தில்...

உங்கள் பயணம் சிறக்கட்டும். நல்ல முடிவுகள் வரட்டும். தமிழகம் செழிக்கட்டும், தமிழர்கள் வளரட்டும், தமிழ் புகழ் ஓங்கட்டும்...

தமிழன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, October 19, 2016

சகோதரர்கள் சோமு, சசிகுமார், ரவி ஆகியோருகு உதித்த திருநாள் வாழ்த்துக்கள்


சகோதரர் தமிழீழ சோமு அவர்கள் கொண்டுள்ள தமிழ் பற்றை தான் சார்ந்திருக்கும் கழகப்பற்றை நாம் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்ப்படவில்லை. தன் ரத்த நாளங்களின் வேகம் குறைந்தாலும் தமிழ் மீதுள்ள காதல் ஓட்டம் குறையாவண்ணம் செயல்படுபவர். தமிழனுக்கு ஒரு நாடு கிடைக்காதா என்று ஏங்கும் உன்னத ஜீவி. அதனால்தான் தன் பெயரிலே அதை தாங்கி பிடிக்கிறார். வெற்றியோ தோல்வியோ சலிப்படையாமல், தான் தூக்கி பிடிக்கும் கொடியை பிறர் காண, துன்பம் தீர்க்கும் கொடி என்ற வாசகம் அவர்கள் எண்ணத்தில் உதிக்க, உயர பறக்க செய்து விட்டு செல்கிறார் செல்லுமிடமெல்லாம். சகோதரருக்கு என் அன்பு வாழ்த்தை அவர் பிறந்த பொன்னாளில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணன் வைகோ சசி குமார் அவர்கள் ஆயிரம் சோதனை காலங்களிலும் சிறுது நாள் விலகியிருக்கலாம் என முடிவெடுத்தாலும், தமிழ் பற்றாலும், நண்பர்களின் நட்பினாலும், முடங்கி கிடக்க முடியாமல், பொதுவாழ்விற்கு தன்னை அற்ப்பணித்தவர். களமாடிக்கொண்டிருக்கும் லட்சகணக்கான காளயர்கள் கூட்டத்தில் உறுமும் புலி போன்றவர். அண்ணனை வாழ்த்துவதில் மகிழ்ச்சி. வளமோடு வாழ்க.

உறந்தை ரவி அவர்களை சொல்ல எண்ண ஓட்டமெல்லாம் பல கூறுகளாய் பல செயல்களை நினைவுபடுத்தினாலும், சிங்கப்பூரில் மறுமலர்ச்சியை ஏற்ப்படுத்த மறுமலர்ச்சி வேங்கையாக வலம் வருபவர். அன்பு காட்டு சகோதரருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, October 18, 2016

இளம் கருவூலம் தீபனுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

மென் பொறியாளராய் வேலை பார்த்தாலும், கடினமாக பழகுபவர்களுக்கு கடினமாகவும், மென்மையானவர்களுக்கு மென்மையாகவும் பழக கூடியவர். அறிவார்ந்த சொற்களை பயன்படுத்தி நாகரீகமான பதிவின் மூலம் மறந்து விட்ட வரலாற்றை கூட கண் முன்னே கொண்டு வந்து காட்சி படுத்துபவர்.

இவர் ஒரு ஊற்று பெருக்கு. அது புதியவர்களுக்கு பயன்படுகின்ற ஒரு கருவூலம். இளம் பேச்சாளருக்கெல்லாம் சவால் விடும் அளவிற்கு குறிப்புகளை சிறு மூளையில் சேமித்து வைத்திருக்கும் ஒரு அற்புத ஜீவி. 

தம்பியின் தமிழீழ உணர்வை கண்டு அனைவரும் பாராட்டியதுண்டு. அவரின் பெயரிலே தமிழீழம் கலந்த வரலாறே அடங்கியிருப்பது நிதர்சனம்.

அவரின் கனவும், எங்கள் கனவும், தமிழீழ தமிழர்களின் கனவும், உலக தமிழர்களின் கனவுமான தமிழீழம் மலரும் என்ற ஒரு உன்னதமான நம்பிக்கையில் அன்பு தம்பி தீபனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்வில் வளம் பல பெற்று, அன்பு என்னும் உலகை உணர்விலே கையாண்டு, வெற்றி புகழ்மாலை சூட வாழ்த்துகிறேன்.

தமிழன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Monday, October 17, 2016

கொடையுள்ளம் கொண்ட கருணா, கெளரி சகோதரர்களுக்கு பிறந்த நாள்!

சகோதரர் கருணா அவர்கள்:

அனைத்து நண்பர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதில் வல்லவர். கருணை உள்ளம் கொண்ட அண்ணன் இருக்குமிடமெல்லாம் சிரிப்பலைகள் அடித்துக்கொண்டேயிருக்கும். 

நவரத்தினத்தில் தவழ்ந்தாலும், மண் தரை நண்பர்களிடத்தில் பாகுபாடு பார்ப்பதில்லை. கல்லை கடைந்தாலும் அவர் மனது எப்போதுமே இரக்கமுடையதாகவே காணப்படும். 

ஊராட்சியில் துணை தலைவராக இருந்திருந்தாலும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் தன்னால் இயன்ற கழக பணிகளை செய்யும் தன்னலம் கருதா சேவகன்.

அண்ணன் பிறந்த நாள்களை கடப்பது போல இல்லற வாழ்விலும் அடியெடுத்து குழந்தை செல்வங்களுடன் கடக்க பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து, மணக்கோலத்தில் மலர் தூவி வாழ்த்து சொல்ல ஆவலுடன்......


சகோதரர் கெளரி அவர்கள்:

திருப்பூரில் இருப்பது போல காட்சியளிப்பார். ஆனால் தமிழகம் சுற்றி வருவார். வேலை நிமித்தமானாலும் இயற்கையையும், அதன் வரலாற்றையும் நண்பர்களுக்கு பரிசாக கொடுப்பார்.

ஒவ்வொரு நாளும் ஓர் இடம் போல தோன்றும். இந்திய எல்லை வரை கடந்து வருவார். ஆனாலும் கடல் தாண்டிய கண்மணிகளிடத்தும் அன்பு கூருவார்.

ஆதி சங்கரனே அருள் பாலித்து கொடையுள்ளம் கொண்டவராக இருப்பார். கருணையை தன் பலமாக கருதுபவர். சில உயிர் காக்கும் கருவியாக செயல்பட்டவர். இன்னும் திரை மறைவில் பல சேவகம் செய்பவர். 

அண்ணனை இந்த நன்னாளில் வாழ்த்துவது மிகுந்த மன மகிழ்ச்சியை தருகிறது. நேரம் கடந்தாலும், மன பண்புகளை எழுதுவது பேரின்பமே...

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...


மறுமலர்ச்சி மைக்கேல்.