Wednesday, October 19, 2016

சகோதரர்கள் சோமு, சசிகுமார், ரவி ஆகியோருகு உதித்த திருநாள் வாழ்த்துக்கள்


சகோதரர் தமிழீழ சோமு அவர்கள் கொண்டுள்ள தமிழ் பற்றை தான் சார்ந்திருக்கும் கழகப்பற்றை நாம் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்ப்படவில்லை. தன் ரத்த நாளங்களின் வேகம் குறைந்தாலும் தமிழ் மீதுள்ள காதல் ஓட்டம் குறையாவண்ணம் செயல்படுபவர். தமிழனுக்கு ஒரு நாடு கிடைக்காதா என்று ஏங்கும் உன்னத ஜீவி. அதனால்தான் தன் பெயரிலே அதை தாங்கி பிடிக்கிறார். வெற்றியோ தோல்வியோ சலிப்படையாமல், தான் தூக்கி பிடிக்கும் கொடியை பிறர் காண, துன்பம் தீர்க்கும் கொடி என்ற வாசகம் அவர்கள் எண்ணத்தில் உதிக்க, உயர பறக்க செய்து விட்டு செல்கிறார் செல்லுமிடமெல்லாம். சகோதரருக்கு என் அன்பு வாழ்த்தை அவர் பிறந்த பொன்னாளில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணன் வைகோ சசி குமார் அவர்கள் ஆயிரம் சோதனை காலங்களிலும் சிறுது நாள் விலகியிருக்கலாம் என முடிவெடுத்தாலும், தமிழ் பற்றாலும், நண்பர்களின் நட்பினாலும், முடங்கி கிடக்க முடியாமல், பொதுவாழ்விற்கு தன்னை அற்ப்பணித்தவர். களமாடிக்கொண்டிருக்கும் லட்சகணக்கான காளயர்கள் கூட்டத்தில் உறுமும் புலி போன்றவர். அண்ணனை வாழ்த்துவதில் மகிழ்ச்சி. வளமோடு வாழ்க.

உறந்தை ரவி அவர்களை சொல்ல எண்ண ஓட்டமெல்லாம் பல கூறுகளாய் பல செயல்களை நினைவுபடுத்தினாலும், சிங்கப்பூரில் மறுமலர்ச்சியை ஏற்ப்படுத்த மறுமலர்ச்சி வேங்கையாக வலம் வருபவர். அன்பு காட்டு சகோதரருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment