Tuesday, October 18, 2016

இளம் கருவூலம் தீபனுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

மென் பொறியாளராய் வேலை பார்த்தாலும், கடினமாக பழகுபவர்களுக்கு கடினமாகவும், மென்மையானவர்களுக்கு மென்மையாகவும் பழக கூடியவர். அறிவார்ந்த சொற்களை பயன்படுத்தி நாகரீகமான பதிவின் மூலம் மறந்து விட்ட வரலாற்றை கூட கண் முன்னே கொண்டு வந்து காட்சி படுத்துபவர்.

இவர் ஒரு ஊற்று பெருக்கு. அது புதியவர்களுக்கு பயன்படுகின்ற ஒரு கருவூலம். இளம் பேச்சாளருக்கெல்லாம் சவால் விடும் அளவிற்கு குறிப்புகளை சிறு மூளையில் சேமித்து வைத்திருக்கும் ஒரு அற்புத ஜீவி. 

தம்பியின் தமிழீழ உணர்வை கண்டு அனைவரும் பாராட்டியதுண்டு. அவரின் பெயரிலே தமிழீழம் கலந்த வரலாறே அடங்கியிருப்பது நிதர்சனம்.

அவரின் கனவும், எங்கள் கனவும், தமிழீழ தமிழர்களின் கனவும், உலக தமிழர்களின் கனவுமான தமிழீழம் மலரும் என்ற ஒரு உன்னதமான நம்பிக்கையில் அன்பு தம்பி தீபனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்வில் வளம் பல பெற்று, அன்பு என்னும் உலகை உணர்விலே கையாண்டு, வெற்றி புகழ்மாலை சூட வாழ்த்துகிறேன்.

தமிழன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment