Monday, October 17, 2016

கொடையுள்ளம் கொண்ட கருணா, கெளரி சகோதரர்களுக்கு பிறந்த நாள்!

சகோதரர் கருணா அவர்கள்:

அனைத்து நண்பர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதில் வல்லவர். கருணை உள்ளம் கொண்ட அண்ணன் இருக்குமிடமெல்லாம் சிரிப்பலைகள் அடித்துக்கொண்டேயிருக்கும். 

நவரத்தினத்தில் தவழ்ந்தாலும், மண் தரை நண்பர்களிடத்தில் பாகுபாடு பார்ப்பதில்லை. கல்லை கடைந்தாலும் அவர் மனது எப்போதுமே இரக்கமுடையதாகவே காணப்படும். 

ஊராட்சியில் துணை தலைவராக இருந்திருந்தாலும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் தன்னால் இயன்ற கழக பணிகளை செய்யும் தன்னலம் கருதா சேவகன்.

அண்ணன் பிறந்த நாள்களை கடப்பது போல இல்லற வாழ்விலும் அடியெடுத்து குழந்தை செல்வங்களுடன் கடக்க பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து, மணக்கோலத்தில் மலர் தூவி வாழ்த்து சொல்ல ஆவலுடன்......


சகோதரர் கெளரி அவர்கள்:

திருப்பூரில் இருப்பது போல காட்சியளிப்பார். ஆனால் தமிழகம் சுற்றி வருவார். வேலை நிமித்தமானாலும் இயற்கையையும், அதன் வரலாற்றையும் நண்பர்களுக்கு பரிசாக கொடுப்பார்.

ஒவ்வொரு நாளும் ஓர் இடம் போல தோன்றும். இந்திய எல்லை வரை கடந்து வருவார். ஆனாலும் கடல் தாண்டிய கண்மணிகளிடத்தும் அன்பு கூருவார்.

ஆதி சங்கரனே அருள் பாலித்து கொடையுள்ளம் கொண்டவராக இருப்பார். கருணையை தன் பலமாக கருதுபவர். சில உயிர் காக்கும் கருவியாக செயல்பட்டவர். இன்னும் திரை மறைவில் பல சேவகம் செய்பவர். 

அண்ணனை இந்த நன்னாளில் வாழ்த்துவது மிகுந்த மன மகிழ்ச்சியை தருகிறது. நேரம் கடந்தாலும், மன பண்புகளை எழுதுவது பேரின்பமே...

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...


மறுமலர்ச்சி மைக்கேல்.

No comments:

Post a Comment