Saturday, February 6, 2021

போராடும் பெண் ஆசிரியர்களின் கழிவறை தண்ணீர் வசதியை நிறுத்திய எடப்பாடி அரசு! கண்டனம்! சமூக ஆர்வலர்கள் கழிவறை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுகோள்!

நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர்.


இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண் ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். போராடிய முதல் நாளாம் 4 ஆம் தேதி முதலே பெரும்பாலான கழிப்பறையில் தண்ணீர் வசதியை நிறுத்தி வைத்திருந்தனர். ஒன்றிரண்டு கழிப்பறைகளில் மட்டும் தண்ணீர் வசதி இருந்தது.

இந்நிலையில் இன்று 06-02-2021 மாலை முதல் அனைத்து கழிப்பறைகளிலும் தண்ணீர் வசதியை நிறுத்தி வைத்துள்ளது தமிழக எடப்பாடி அடிமை அரசு. கழிவறை இல்லையென்றால் பெண்கள் கண்டிப்பாக போராட்டத்திலிருந்து விலகிவிடுவார்கள் என்று பிற்போக்கு சிந்தனையுடன் உடல் உபாதைகளுக்கான வசதியை கூட சொந்த மக்களுக்கு கொடுக்காமல் தடுத்து வைத்து மக்களை துன்புறுத்துகிறது இந்த அடிமை அரசு. உடல் உபாதைகளை செய்ய முடியாமல் திணறும் பெண் ஆசிரியர்களின் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இப்படிபட்ட மனித உரிமை மீறல்களை அடிமைஅரசு பாசிச பாசகவுடனே இணைந்து செய்வது அப்பட்டமாக தெரிகிறது. மனித அடிப்படை உரிமைகளை கூட கொடுக்காத எடப்பாடி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

மனித உரிமை ஆர்வலர்கள் தலையிட்டு உடனடியாக பெண் ஆசிரியர்களுக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்யவும், சமூக ஆர்வலர்கள் தங்களாலான உதவியை செய்திடவும் வேண்டுகிறேன்.

மைக்கேல் செல்வ குமார்.

No comments:

Post a Comment