Sunday, February 7, 2021

#P2P தமிழீழ மக்கள் எழுச்சி!

#P2P பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சி போராட்டம் இன்று 07-02-2021 நிறைவுற்றது.

பொலீஸ் தடை, நீதிமன்றத்தடை, நுண்ணிய இனவாதத்தடைகள் தாண்டி, மக்கள் எழுச்சியாக ஆண்டுகால காத்திருப்பின்பின் நடந்துமுடிந்துள்ளது.

கவனித்த விடயங்கள் சில,

அதில் முக்கியமானது, மாபெரும் பேரணிகள்/ மக்கள் எழுச்சி நிகழ்வுகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெறாததன் இடைவெளியை புரிந்துகொள்ள முடிந்தது. (சாதக பாதக என இரு பக்கத்திலும்)

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும், அவற்றின் மீதான நியாயங்களும் மதம் தாண்டி, கட்சி தாண்டி, அரசியல் தாண்டி மக்களை எழுச்சியுற செய்திருந்தன.

யார் தொடங்கினாலும், யார் முன்னின்றாலும், யார் தடைகளை உடைத்தாலும், யார் மக்களை அழைத்து வந்தாலும், யார் பணம் செலவழித்தாலும், யார் வாதிட்டாலும், யார் வழிநடத்தினாலும், யார் நேரில் வந்திருந்தாலும்

அனைத்தும் மக்களுக்காகவே செய்யப்பட்டன.

ஒரு தந்தை பிள்ளைகளுக்கு செய்யும் கடமை போன்று இவை அனைத்தும் இனத்துக்காக செய்யப்பட்ட, செய்யப்படவேண்டிய கடமையாக நினைத்துக் கொண்டால் போதும்.

தொடக்கத்தின் வெற்றியும், முடிவின் பிரமாண்டமும் அவசியம் என்பதுபோல, கிழக்கின் வெற்றிக்கு கொஞ்சமும் சளைக்காமல், பேராதரவு கொடுத்த முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மக்களுக்கும், பிரமாண்டம் கொடுத்த யாழ்ப்பாண மக்களுக்கும் 🙏

தார்மீக ஆதரவு என்பது வெறும் வார்த்தையல்ல. அது ஒரு பெரும் உணர்வு.

தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்.

No comments:

Post a Comment