Wednesday, May 18, 2022

பேரறிவாளன் தூக்கு கயிறை, அவர் அழைத்தால் மட்டுமே வரும் நண்பன் ராம் ஜெத்மலானியின் வாதங்களால் அறுத்து எறிகிறார் வைகோ. தூக்குக் கயிறு அறுந்து வீழ்ந்தது. ராம் ஜெத்மலானிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார் வைகோ. தூக்கு கயிறை அறுத்ததால் இன்றுவரை உயிரோடு இருக்கும் பேரறிவாளன் இன்று விடுதலை. தமிழின காவலர் தலைவர் வைகோ அவர்கள் மகிழ்ச்சி அறிக்கை. தனக்காக கார்மேகம் பொழிவதில்லை. தனக்காக சோழ நதி பாய்வதில்லை. தனக்காக பூங்குயில்கள் இசைப்பதில்லை. தனக்காக செவ்வாழை செழிப்பதில்லை. தனக்காக தலைவர் வைகோ வாழவில்லை. தமிழர்களுக்காக வாழ்கிறார்...


via IFTTT

My Leader is My BRAND. என் தலைவன் எனது பிராண்ட். வைகோதாண்டா என் பிராண்ட். வைகோ. VAIKO எதையுமே அவர்‌ எதிர்பார்த்து செய்ததே இல்லை. செய்ய‌போவதுமில்லை..


via IFTTT

Wednesday, May 11, 2022

கருப்பு மே-ல் மகிந்த வீடு கருகியதில் சின்ன ஆறுதல்! பற்றி எரியும் வீடுகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைபவன் நானல்ல. ஆனால் யாருடைய வீடு பற்றி எரியும்போது மகிழ்ச்சியில் இருக்கிறேன் என பார்க்க வேண்டும். என் மக்களை கொத்து கொத்தாக சிதற சிதறடித்து கொன்றாய். 90 ஆயிரம் தாய்மார்களை விதவைகளாக்கினாய். எம் இளைஞர்களை காணாமல் ஆக்கினாய்‌. தாய்மார்கள் இன்றளவும் சாலையில் வந்து தனது மகன்கள் எங்கே என நீதி கேட்கிறார்கள். எம் இனத்தை நீ அழித்தாய் அன்று! உன்னையே உன் இனம் அழிக்க துடிக்கிறது இன்று! எம் மக்கள் வீடில்லாமல் அலைந்தனர் அன்று. உன் வீடோ‌பற்றி எரிகிறது இன்று. எம் பிஞ்சு‌‌ பாலகனை கொன்றாய். உன்‌‌ பாலகர்கள் ஓடி ஒழிகிறார்கள். சிங்களவர்களிடத்தில் இனவெறி தூண்டி தமிழர்களை கொன்றாய். இன்று சிங்களவர்களே உன்னை கொல்ல வகை தேடுகிறார்கள். இரண்டு சம்பவங்களும் மே மாதம்தான். எப்போது எவன் சாவான் என்று நான் நினைப்பதில்லை. ஆனால்‌ இருவர் சாகவேண்டுமென்றே நினைத்தவன். ஒருவன் செத்துவிட்டான். மிஞ்சியதோ நீதான். சிங்களவன் கையாலே உன் சாவு நிகழவேண்டும். அதை கண்டு‌ நான் மகிழ வேண்டுமென்றே நினைக்கிறேன். மகிந்த ராஜபக்சேவே உன் சாவை நோக்கி நான். தமிழினம் உன்னை வரவு வைக்க காத்திருக்கிறது. எங்கள் தியாகங்கள் வரலாறாகின்றன. எங்கள் நிலம்‌ எமதாகும் ஒரு நாள். புலிக்கொடி பட்டொளி வீசி பறக்கும். தமிழரின் தாகம், தமிழீழ தாயகம். தாயகம் மலருவதை காண, மைக்கேல் செல்வ குமார் 11-05-2021


via IFTTT

கருப்பு மே-ல் மகிந்த வீடு கருகியதில் சின்ன ஆறுதல்!

பற்றி எரியும் வீடுகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைபவன் நானல்ல. ஆனால் யாருடைய வீடு பற்றி எரியும்போது மகிழ்ச்சியில் இருக்கிறேன் என பார்க்க வேண்டும்.

என் மக்களை கொத்து கொத்தாக சிதற சிதறடித்து கொன்றாய். 90 ஆயிரம் தாய்மார்களை விதவைகளாக்கினாய். எம் இளைஞர்களை காணாமல் ஆக்கினாய்‌. தாய்மார்கள் இன்றளவும் சாலையில் வந்து தனது மகன்கள் எங்கே என நீதி கேட்கிறார்கள்.

எம் இனத்தை நீ அழித்தாய் அன்று!
உன்னையே உன் இனம் அழிக்க துடிக்கிறது இன்று!

எம் மக்கள் வீடில்லாமல் அலைந்தனர் அன்று.
உன் வீடோ‌பற்றி எரிகிறது இன்று.

எம் பிஞ்சு‌‌ பாலகனை கொன்றாய்.
உன்‌‌ பாலகர்கள் ஓடி ஒழிகிறார்கள்.

சிங்களவர்களிடத்தில் இனவெறி தூண்டி தமிழர்களை கொன்றாய்.
இன்று சிங்களவர்களே உன்னை கொல்ல வகை தேடுகிறார்கள்.

இரண்டு சம்பவங்களும் மே மாதம்தான்.

எப்போது எவன் சாவான் என்று நான் நினைப்பதில்லை. ஆனால்‌ இருவர் சாகவேண்டுமென்றே நினைத்தவன். 

ஒருவன் செத்துவிட்டான். 
மிஞ்சியதோ நீதான். 

சிங்களவன் கையாலே உன் சாவு நிகழவேண்டும்.
அதை கண்டு‌ நான் மகிழ வேண்டுமென்றே நினைக்கிறேன்.

மகிந்த ராஜபக்சேவே உன் சாவை நோக்கி நான்.

தமிழினம் உன்னை வரவு வைக்க காத்திருக்கிறது. எங்கள் தியாகங்கள் வரலாறாகின்றன.

எங்கள் நிலம்‌ எமதாகும் ஒரு நாள்.
புலிக்கொடி பட்டொளி வீசி பறக்கும்.

தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்.

தாயகம் மலருவதை காண,

மைக்கேல் செல்வ குமார்
11-05-2021

Wednesday, March 23, 2022

தமிழீழம் சார்ந்து பேசினால், தொடரும் முகநூல் முடக்கம். காப்புரிமை வாங்கி தந்த தலைவர் நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப கோரிக்கை!

அன்பு தலைவர் வைகோ அவர்களின் தலைவர் பெயர் வந்ததற்காக எனது ஒரு வீடியோ சார்ந்த பதிவை முடக்கினார்கள். 30 நாள் தடை அறிவித்தார்கள். நான் அதை ஏற்கவில்லை. இப்போது அதை மறு பரிசீலனை செய்கிறோம் என்று தகவல் தந்தார்கள். இப்படியே போனால் முழுதாக முடக்கிவிடுவோம் என எச்சரிக்கை செய்துவிட்டு இந்த பதிவு தவறல்ல என்று மன்னுப்பு கோரிவிட்டு இன்று 23-03-2022 காலையில் விடுவித்துள்ளார்கள்.

ஆனாலும் live 90 நாட்களுக்கு செய்ய இயலாது. இன்னும் Account restricted என்ற நிலையிலே இருக்கிறது.

மேலும் 2009 முதல் நான் பதிவிட்ட அன்பு தலைவர் வைகோ அவர்களின் தலைவர் சார்ந்த அவர் கட்டியெழுப்பிய நாடு சார்ந்த பதிவுகளை முடக்கியிருக்கிறோம் என்றும் சொல்லி எச்சரித்திருக்கிறார்கள். அப்படியென்றால் எனது கணக்குகளை முழுதுமாக நோண்டி நோண்டி பார்க்கிறார்கள்.

இதை பார்க்கும்போது அன்பு தலைவர் வைகோ அவர்களின் தலைவர் பெயர் வந்தாலே என் கணக்கு முடக்கப்படவேண்டுமென செட்டப் செய்து வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இந்திய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கோ அதன் கட்டமைப்புக்கோ தலைவருக்கோ ஆதரவாக பேசலாம் எழுதலாம் என்று இந்திய ஒன்றிய உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு சட்டமாக்கி பேச்சு உரிமைக்கு காப்புரிமை வாங்கி தந்திருக்கிறார் அன்பு தலைவர் வைகோ MP அவர்கள். ஆனால் இன்னும் என்னை போன்ற ஆயிரக்கணக்கான தமிழீழ உணர்வாளர்களை எங்கள் உரிமைகளை முடக்குவது இந்திய ஒன்றிய அரசின் கடமையாக செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் மதிமுகவினர் தினமும் முடக்கப்படுகிறார்கள் எனப்தே வேதனையாக இருக்கிறது.

எத்தனை முறைதான் பலரும் பதிவாக போடுக்கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம். ஆகவே இதை நாடாளுமன்றத்திலே மூர்க்கமாக பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அன்பு தலைவர் வைகோ MP அவர்கள் முகநூல் முடக்கம் பற்றி பேசவேண்டி கோரிக்கையாகவே வைக்கிறேன்...

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் மதிமுக
23-03-2021

Wednesday, March 16, 2022

தம்பி தமிழருணுக்கு திருமண வாழ்த்து!

ன்பு தலைவர் வைகோ அவர்களால் அடையாளம் காணப்பட்ட உரிமை போராளி தம்பி தே.தமிழருண் பெரம்பலூர். பின்புலம் இல்லாது, பொருளாதார கோரப்பிடியிலும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாவட்ட அமைப்பாளராக சிறப்பாக செயலாற்றி தனது களப்பணியால் மாநில துணை அமைப்பாளராக உயர்ந்திருக்கிறார்.

இன்று அவர் தனது இல்லற வாழ்வில் புகுந்திருக்கிறார். தமிழ் பெயரை தனதாக்கிய அரசியை, தனது பள்ளி பருவ தோழியையே காதலியாக கொண்டு இன்று மனைவியாக்கியிருக்கிறார். அன்புத் தம்பியின் சுகத்திலும், சுகவீனத்திலும் தங்கை தமிழரசி உறுதுணையாக இருந்து குடும்பத்தை மாளிகையாக கட்டியெழுப்ப வேண்டும். தம்பியின் திருமணம், தம்பியின் சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறையில் இன்று சிறப்பாக நடைபெற்றிருக்கிறது நினைத்து உள்ளபடியே மனம் மகிழ்கிறேன். தந்தையும் தாயும் இல்லாத நிலையில் தலைவர் வைகோ அவர்களும் டெல்லியில் இருக்கும் நிலையில் கலந்துகொள்ளாத நிலையிலும், இயற்கை அவர்களும் இருக்கிறதென்ற நிலையில் அவர்கள் இல்லற வாழ்வில் வளம் பெற, யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. ஒருவரில் ஒருவர் அன்பு கொண்டு தாழ்பணிந்து மகிழ்வுடன் வாழ திருமண நல் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன், மைக்கேல் செல்வ குமார் செயலாளர் ஒமான் மதிமுக 16-03-2021

Thursday, March 3, 2022

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துக! தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்!

தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் சீருடைப் பணியாளர்கள் முதலான அரசு பணியாளர்களுக்கு 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, இத்திட்டத்தில் சுமார் ஆறு இலட்சம் அரசு ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம், பணிக்கொடை, மருத்துவக் காப்பீடு முதலான எந்தவிதப் பலன்களும் இல்லாததால், இதனை இரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நிறைவேற்ற வேண்டுமென 19 ஆண்டுகளாக, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகிறார்கள்.

இதனை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிற அரசு ஊழியர்கள், 25.03.2022 அன்று தமிழ்நாடு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து, கையெழுத்துப் படிவங்களை வழங்கி, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கோரிக்கை வைக்க உள்ளார்கள்.

மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. கேரளா, ஆந்திரா, டில்லி ஆகிய அரசுகள் இது குறித்து வல்லுநர் குழுவின் பரிந்துரைகளைப் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களின்போதும், 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் தி.மு.கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளிலும் இந்த கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

எனவே புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றாக இரத்து செய்துவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்குமாறு மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.03.2022

Saturday, February 26, 2022

அமீரக மதிமுக பொருளாளர் தந்தை மறைவிற்கு ஒமான் மதிமுக இரங்கல்!

அமீரக மதிமுக பொருளாளர் லெனின்‌ ஜோஸ் (+971557132040 அமீரகம், +919442947553 இந்தியா) அவர்களின் தந்தையார் திரு.S.லாசர் (74) அவர்கள் இன்று (26.02.2022) காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்கள்‌ என்ற செய்தி கேட்டு வேதனையுற்றேன்.

தந்தை மறைவு என்பது மகனுக்கு ஈடு செய்ய இயலாதது.‌ தந்தை மறைவு குடும்ப பொறுப்பு‌ கூட்டியிருக்கிறது. 

கடைசி காலங்களில்‌ அவரை கூட இருந்து கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள். அவர் நிம்மதியாக இளைப்பாறுவார்.

தந்தை‌ மறைவிற்கு ஆழ்ந்த வருத்தத்தை ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் மதிமுக.
26-02-2022

Durai Vaiko MDMK Vaiko 

Saturday, January 1, 2022

2022 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

உலக மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒவ்வொரு புதிய ஆண்டின்‌‌ தொடக்க நாளாக கொண்டாடப்படும் நாள் தான் ஜனவரி 1. இந்த ஜனவரி 1ஆம் நாளில் நாம் புத்துணர்ச்சியுடனும், புதிய உறவுகளுடன், நம் வாழ்க்கையின் கஷ்டங்களை கடந்து, முன்னேற்றத்திற்கான ஒவ்வொரு தேடுதலையும் முயற்சித்து, வாழ்வில் வெற்றி அடைய இந்த புதிய ஆண்டில் வாழ்த்துகளுடன், புதிய ஆண்டின் தொடக்க நாளை கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்
01-01-2022
ஒமான்