என் வீட்டில் ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டதுடன் தகவல் தெரிவித்ததும் உடனடியாக வந்த வந்த காவல்துறை பத்திரிகையாளர்களுக்கு நன்றிகள். என் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் இன்றைய 12-11-2016 தின தந்தி, மற்றும் தினகரனில் நாகர்கோயில் பதிப்பில் வெளி வந்துள்ளது.
இந்த களவு சம்பவத்தை அனைத்து மக்களும் ஒரு பாடமாக கொண்டு அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகிறேன். வாய்ப்புள்ளவர்கள் தங்கள் வீடுகளில் சிசிடிவி காமிரா பொருத்துங்கள். மேலும் இயலாதவர்கள் ஏரியாவிற்கு ஒரு காவல் காக்கும் பொருட்டு ஒரு ஆள் அல்லது இரண்டு ஆட்கள் கூட நியமித்து ரோந்து வர செய்யுங்கள்.
மேலும் வீட்டிலுள்ளவர்களும் தைரியமாகவும், எப்போதும் விழிப்பாகவும் இருக்க வேண்டுகிறேன். தமிழ்நாட்டில், கல்வியறிவு முதலிடம் உள்ள மாவட்டமனான கன்னியாகுமரியின் தலைநகர் நாகர்கோயிலிலே இந்த சம்பவம் அதிர்ச்சியானதாகும்.
எனவே காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடுகளை உடனே குற்றவாளிகளை கண்டுபிடித்து பெற்று உரிமையாளரான எங்களிடத்தில் ஒப்படைத்து தர்மம் காக்க பாடுபட வேண்டுமெனவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
களவு சம்பவம் பற்றிய தினத்தந்தி, தினகரன் லிங்க் மற்றும் ScreenShot இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
(12-11-2016 நாகர்கோயில் பதிப்பு, dknnagercoil பிரிவில் 15 ஆம் பக்கம்)
நேற்றைய பதிவின் முழு விபர லிங்க்: https://www.facebook.com/MarumalarchiMicheal/posts/756127801192300





















