Monday, November 7, 2016

கடை விரிக்க, பாய் விரிப்பு?


பால் குணத்தில், வான் புகழ் கண்ட வைகோவை,
வீண் பழி சுமத்தாவிடில் விண்ணதிர விமர்சிப்பானென்று!

நவரசம் பேசி, வைகோவின் வைர சொல் பெற்று,
வார்த்தைகளுக்கு வண்ணம் பூசி, வசைபாடி மகிழ்வதேன்?

சரிந்தழிந்த திமுக வின் செல்வாக்கை நீ நிமிர்த்த,
வைகோ வை பகடை காயாக்க முயலுகிறாயோ?

பாமரன் வீடு எரித்து, குளிர் காயும் குணாளனே! 
நேர்மையாளன் அரசியலை அழிப்பதற்கு ஏன் துடித்தாய்?

அன்று பனை மரக் கீழ் நின்று பால் குடித்த விகடனே!
இன்று! நீ கள் குடித்து கல் மனதை பெற்றதேனோ

சுருட்டு முடியின்கெட்ட வாசம், உனை எட்டப்பனாக்கியது!
சொட்டை தலை சூனியத்தில், நரம்பில்லா நடிகனானாய்!

ராஜ தந்திரி பார்வையியிலே, அவர் சுதியில் உன் தாளம்!
உண்டபின் இலை போல உனை வைப்பார் என்றறியாய்?

கோபாலபுரம் கோபுரமென்று, கோமானாய் உனை அரவணைக்க,
சூட்சமத்தின் சுவை அறியாமல், சயனைடை பெற்றாயே!

தேர்தலையே திசை திருப்ப, தளர்ந்த பாதிகள் துணையிருக்க
நீ பெற்ற 1500 கோடியை மடைமாற்றம் ஏன் செய்தாய்!

வைகோ மேல் வாரியிறைத்தாய், மக்களை நம்ப செய்தாய்!
மாற்று அரசியல் கூட்டணியை, ஏன் நீ மழுங்கடித்தாய்?

நீண்ட செவி கொண்ட, குருட்டு விகடனே,
முரசொலிக்கு மகுடியானதால், காயடித்த காளையாவாய்!

உன் எழுத்தின் அர்த்தங்கள் புரியாத புதிராகினும்!
உன் பால் கொண்ட பற்றினால் உன் தமிழ் பருகினோமே!

விசமென்று புரியாமல், விழித்திருந்து பகிர்ந்தோமே!
விடியலை நீ தேடி, அமாவாசையை அழைத்துக்கொண்டாய்!

தனித்துவம் பெற்றிருந்தாய், தாலாட்டி மகிழ்ந்தார்கள்!
தரந்தாழ்ந்து போய் விட்டாய், உனை தூக்கி எறிவார்கள்.

கொட்டி கொடுத்த தமிழ் சொற்கள், கொஞ்சி விளையாட,
கூட்டிக் கொடுத்த அறிஞர்களால், உன் கூடாரம் காலியாகும்!

காகிதத்தில் எண்கள் வரைந்து, உன் மனதை மலடாக்கினர்!
உன் வாசகங்கள் ஜாலமிட்டால், அணு குண்டின் சுவையறிவாய்!

அந்நேரம் உன் எண்ணம் வைகோவை நினைக்கும் முன்னே!
அவர் குரல் ஒலித்திருக்கும், உனை காக்க கண்டன குரலாக.

மறுமலர்ச்சி மைக்கேல்

#ShameOnYouVikatan

No comments:

Post a Comment