Tuesday, January 12, 2021
டெல்லியில் போராடும் விவசாயிகளை படை கொண்டு விரட்ட ஒன்றிய அரசு திட்டம்!
நினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக நீதிக்கான குரல் இணையவழி கண்டனக்கூட்டம்-மைக்கேல் உரை!
2009 தமிழீழ போரில் சிங்களம் தமிழர்களை திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை செய்ததில் வீரச்சாவடைந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் 2018 ஆம் ஆண்டு நிறுவிய நினைவுத்தூபியை இடித்தழித்த சிங்கள அரசுக்கு எதிராக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நேற்று 11-01-2021 நடத்திய நீதிக்கான குரல் இணையவழி கண்டனக் கூட்டத்தில் மதிமுக சார்பில் ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவையிலிருந்து அன்பு தலைவர் வைகோ எம்பி அவர்களின் தம்பி அடியேனின் (மைக்கேல்) கண்டன சிற்றுரை.
Monday, January 11, 2021
நினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக நீதிக்கான குரல் இணையவழி கண்டனக்கூட்டம்!
தமிழீழ மாணவர் போராட்டத்திற்கு அடிபணிந்தது சிங்கள அரசு!
தமிழீழ யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூணை இடித்ததற்காக பல்கலைகழக மாணவர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தால் கிழக்கு மாகாண மாணவர்களும் போராட திரண்டனர்.
ரஜினியை விடுங்க மண்டவீங்கிகளா!
எனக்கு உடல் நிலை சரியில்லை. அரசியலுக்கு வரமுடியவில்லை என சொல்லிய பிறகும் எதுக்குடா வம்படியா இழுத்து விட்டு கொல்ல பாக்குறீங்க மன்றம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்திய போக்கிரிகளா...
Saturday, January 9, 2021
நினைவு தூணை இடித்த சிங்கள அரசை கண்டிக்கிறேன்!
எங்கள் உறவுகளை தமிழர்களை தமீழிழத்தில் முள்ளிவாய்க்காலில் முற்றாக அழித்து கொன்றுவிட்டு அவர்கள் நினைவால் யாழ் பல்கலையில் எழுப்பிய நினைவுதூண்களை கூட நேற்று இரவு 08-01-2021 யாரும் இல்லாத நேரத்தில் அழித்து அப்படி ஒரு இனக்கொலை நடக்கவில்லை என்பது போல மறைக்க பார்க்கிறது சிங்கள பேரினவாதம்.










