Tuesday, January 12, 2021

டெல்லியில் போராடும் விவசாயிகளை படை கொண்டு விரட்ட ஒன்றிய அரசு திட்டம்!


இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியில் கடந்த 50 நாட்களாக ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். அது விவசாயிகளை அடியோடு பாதிக்கும் சடங்கள் என்று சொல்லி பஞ்சாப் விவசாயிகள் முழுதும் திரண்டனர். இப்போது பல மாநில விவசாயிகளும் அவர்களுடனும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

10 க்கும் மேற்பட்ட தடவை பேச்சுவார்த்தைகளை நடத்தி விவசாயிகளை கலைந்து செல்ல மத்திய அரசு வற்புறுத்தியும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது ஒன்றே தீர்வு என்று போராடி வரும் விவசாயிகளை கலைந்து செல்ல வைக்க பாசிச பாஜக அரசு திட்டமிட்டே உச்சநீதிமன்றத்தின் உதவியுடன் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்ததால்,

1. விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு செல்வார்கள். ஜனவரி 26 குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடும் மத்திய அரசு. தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகளை தனிதனியாக மிரட்டி ஆசை வார்த்தை காட்டி பாசிச பாஜகவுக்கு அடிபணிய வைப்பார்கள் அல்லது ஆசைபடுபவர்களுக்கு பதவி சுகம் கிடக்க உறுதி கொடுப்பார்கள். சட்டம் கிடப்பிலே கிடக்கும். விவசாயிகள் தங்கள் வேலைகளில் மும்முரமாக விவசாயத்திலே இருப்பார்கள்.

மத்திய அரசு மேல்முறையீடு செய்யும். உச்சநீதிமன்றம் சில வழிமுறைகளை திருத்தி கொடுத்து வேளாண் சட்டங்களை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் நிறவேற்றலாம் என தீர்ப்பு வரும்.

இப்போது போராட ஆட்கள் இருக்காது. பலர் ஆசைக்கு அடிபணிந்திருப்பார்கள். பலர் அடக்கப்பட்டிருப்பார்கள். போராட்டம் நடத்த பழைய வீரியத்துடன் போராட விவசாயிகள் இருக்கமாட்டார்கள்.

வேளாண் சட்டம் சில மாதங்களில் இலகுவாக நிறைவேறிவிடும்.

2. இடைக்கால தடை விதித்தாலும், 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெறும் வரை, டெல்லியில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்திருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இதை சாதகமாக்க பாசிச பாசக அரசு விவசாயிகளை கலைந்து செல்ல வலியுறுத்தும். விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று மேலும் தெரிவிப்பார்கள். அப்போது பாசக அரசு என்ன சொல்லுமென்றால், விவசாயிகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் போராட்டம் நடத்துகிறார்கள் என்று சொல்லி படைகளை அனுப்பி அடித்து நொறுக்க முயலும். விவசாயிகள் ரத்த காயங்களுடன் மரணமடைவார்கள். பலர் காயமடைவார்கள். போராட்டம் வீரியம் குறையும்.

இல்லையென்றால் பாசிச பாசக பல குண்டாஸ்களை ஆர் எஸ் எஸ் கும்பலை விவசாயிகளின் இடையே அமர செய்து கலவரத்தை தூண்ட முயலும். ஒன்றிய அரசு விவசாயிகளின் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள், திவிரவாதிகள் புகுந்துள்ளனர், அவர்களை அகற்ற வேண்டுமென்று சொல்லி படைகளை அனுப்பி விவசாயிகளை அடித்து நொறுக்குவார்கள். போராட்டம் முடிவுக்கு வரும்.

குடியரசு தினத்தை சிறப்பாக நடத்துவார்கள்.

நாளடைவில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யும். உச்சநீதிமன்றம் சில வழிமுறைகளை திருத்தி கொடுத்து வேளாண் சட்டங்களை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் நிறவேற்றலாம் என தீர்ப்பு வரும்.

இப்போது போராட ஆட்கள் இருக்காது. பலர் ஆசைக்கு அடிபணிந்திருப்பார்கள். பலர் அடக்கப்பட்டிருப்பார்கள். போராட்டம் நடத்த பழைய வீரியத்துடன் போராட விவசாயிகள் இருக்கமாட்டார்கள்.

வேளாண் சட்டம் சில மாதங்களில் இலகுவாக நிறைவேறிவிடும்.

இதுதான் நடக்கும் என்று எனது அனுமானம்.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

நினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக நீதிக்கான குரல் இணையவழி கண்டனக்கூட்டம்-மைக்கேல் உரை!

2009 தமிழீழ போரில் சிங்களம் தமிழர்களை திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை செய்ததில் வீரச்சாவடைந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் 2018 ஆம் ஆண்டு நிறுவிய நினைவுத்தூபியை இடித்தழித்த சிங்கள அரசுக்கு எதிராக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நேற்று 11-01-2021 நடத்திய நீதிக்கான குரல் இணையவழி கண்டனக் கூட்டத்தில் மதிமுக சார்பில் ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவையிலிருந்து அன்பு தலைவர் வைகோ எம்பி அவர்களின் தம்பி அடியேனின் (மைக்கேல்) கண்டன சிற்றுரை.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, January 11, 2021

நினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக நீதிக்கான குரல் இணையவழி கண்டனக்கூட்டம்!

தமிழீழ யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் 2009 ல் நடந்த முள்ளிவாய்க்கால் தமிழீழ படுகொலையை நினைவு கூரும் வகையில் பல்கலைகழக வழாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக நீதிக்கான குரல் இணையவழி கண்டனக்கூட்டம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் இணையவழி மூலமாக 11-01-2020 ஒருங்கிணைக்கப்பட்டது.
இதில் தாய் தமிழகம், தமிழீழ தாயகம். புலம்பெயர் தமிழர்கள் பங்றேற்றார்கள்.
அடியேனுக்கும் மதிமுக சார்பில் ஒமானிலிருந்து கண்டனகுரல் எழுப்ப வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு நன்றிகள்.
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

தமிழீழ மாணவர் போராட்டத்திற்கு அடிபணிந்தது சிங்கள அரசு!

தமிழீழ யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூணை இடித்ததற்காக பல்கலைகழக மாணவர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தால் கிழக்கு மாகாண மாணவர்களும் போராட திரண்டனர்.

இதை கண்டித்து தமிழகம், உலகம் முழுதுமுள்ள தமிழர்களின் தொடர் கண்டன போராட்டத்தால் அடிபணிந்த சிங்கள அரசு, பல்கலைகழக வளாகத்திலேயே, நினைவுத்தூண் இடித்த இடத்திலே துணைவேந்தர் தலைமையிலேயே மீண்டும் நினைவுசின்னம் எழுப்ப அனுமதியளித்தது. மாணவர்களாக சேர்ந்து அடிக்கல் நாட்டினார்கள்.

தமிழ் எழும். தமிழீழம் மலரும்.
தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்.

மைக்கேல் செல்வ குமார்

ரஜினியை விடுங்க மண்டவீங்கிகளா!

எனக்கு உடல் நிலை சரியில்லை. அரசியலுக்கு வரமுடியவில்லை என சொல்லிய பிறகும் எதுக்குடா வம்படியா இழுத்து விட்டு கொல்ல பாக்குறீங்க மன்றம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்திய போக்கிரிகளா...

வயசான காலத்துலயாவது rajinikanth என்ற நடிகரை மூடிக்குட்டு இருக்க விடுங்கடா...

Saturday, January 9, 2021

நினைவு தூணை இடித்த சிங்கள அரசை கண்டிக்கிறேன்!

எங்கள் உறவுகளை தமிழர்களை தமீழிழத்தில் முள்ளிவாய்க்காலில் முற்றாக அழித்து கொன்றுவிட்டு அவர்கள் நினைவால் யாழ் பல்கலையில் எழுப்பிய நினைவுதூண்களை கூட நேற்று இரவு 08-01-2021 யாரும் இல்லாத நேரத்தில் அழித்து அப்படி ஒரு இனக்கொலை நடக்கவில்லை என்பது போல மறைக்க பார்க்கிறது சிங்கள பேரினவாதம்.

உலகம் இன்னும் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கிறது. தமிழர்கள் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்களே தவிர, இன்னும் கையில் எடுக்கமாட்டார்கள் என்று நினைத்து விட வேண்டாம்.

இப்போதைய தேவையில் அறவழியிலேயே எங்கள் நாட்டை தமிழீழத்தை அடைய விரும்புகிறோம். எங்களை ஒடுக்க ஒடுக்க எங்கள் உணர்வுகளை சிதைக்க சிதைக்க வீறு கொண்டு எழும் நாள் தள்ளி போகாது என்பதை நினைவூட்டுகிறோம்... அப்படி வரும் நாள் உலகமே எதிர்த்தாலும் சிங்கள தரைமட்டமாகும் என்பதையும் எச்சரிக்கிறோம்..

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்.
எங்கள் லட்சிய கனவு, தமிழீழம் அமையும் வரை என்றும் ஓயாது...

தமிழீழ தாகத்துடன்,
மைக்கேல் செல்வ குமார்

Monday, November 30, 2020

கொடுப்பைக்குழியில் மரங்களை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை தேவை! உரிமைகளை வென்றெடுக்க‌ சாலை மறியலுக்கு தயாராவோம்!

குமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சிக்கு‌ உட்பட்ட‌ கொடுப்பைக்குழி கிராமத்தில் பொதுமக்களுடன் இணைந்து காந்திஜி‌ இளைஞர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கடந்த மாதம் 500 க்கு மேலான நாட்டு செடிகள் இரும்பு வேலி பாதுகாப்புடன் ஏறத்தாள ₹100000 செலவில் கொடுப்பைக்குழி ஊர் முழுதுமுள்ள  சாலைக்கும், ஆற்றுக்கும் அதிக இடைவெளிவிட்டு யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் நட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

இன்று 30-11-2020 தமிழ்நாடு அரசு‌ வாகனத்தில் வந்த சிலர் மரங்களை‌ கூண்டோடு பிடுங்கி‌ எறிந்து நாசம்‌ செய்தனர். 

ஊர்‌ மக்கள் வேண்டுகோள் வைத்தும், மரத்தின் பயனை‌ எடுத்து கூறியும், காரணத்தை சொல்லிவிட்டு அகற்றுங்கள் என்று சொல்லியும் கேட்காமல் தான்தோன்றிதனமாக ஆவண போக்கில் மரங்களை அகற்றினார்கள் தமிழ்நாடு அரசு வாகனத்தில் வந்தவர்கள்.
 
ஊர் மக்கள்‌ மரம் நட்டது, மழை தருவதற்காக பசுமை நாடாக‌ மாற்ற வேண்டும்‌ என்ற எண்ணத்தில் குழி தோண்டி‌ புதைத்தது இன்றைய அரசு.

தமிழ்நாடு வாகனத்தில் வந்தவர்கள் எந்த அரசு ஊழியராக இருந்தாலும் பிடுங்கிய மரங்களை திரும்ப நட்டு தர வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் சாலை மறியலுக்கு உரிமைகளை வென்றெடுக்க தயாராக வேண்டும்.

மரம் அகற்றிய பாதக செயலை வன்மையாக கண்டிக்கிறேன். மரங்களை‌ பிடுங்கி எறிந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அரசே அனைத்து மரங்களையும் மீண்டு நட்டு தர வேண்டுமென்று வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை காந்திஜி மன்ற உறுப்பினர் என்ற முறையில் சங்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

மரம் நட்டு வளர்ப்பது பிறந்த குழந்தையை‌‌ பா து கா ப் து போ லா கு ம். இந்த‌ விசம காரியத்தை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்
உறுப்பினர்.
காந்திஜி இளைஞர் முன்னேற்ற சங்கம்.
கொடுப்பைக்குழி.
30-11-2020