Tuesday, January 12, 2021

டெல்லியில் போராடும் விவசாயிகளை படை கொண்டு விரட்ட ஒன்றிய அரசு திட்டம்!


இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியில் கடந்த 50 நாட்களாக ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். அது விவசாயிகளை அடியோடு பாதிக்கும் சடங்கள் என்று சொல்லி பஞ்சாப் விவசாயிகள் முழுதும் திரண்டனர். இப்போது பல மாநில விவசாயிகளும் அவர்களுடனும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

10 க்கும் மேற்பட்ட தடவை பேச்சுவார்த்தைகளை நடத்தி விவசாயிகளை கலைந்து செல்ல மத்திய அரசு வற்புறுத்தியும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது ஒன்றே தீர்வு என்று போராடி வரும் விவசாயிகளை கலைந்து செல்ல வைக்க பாசிச பாஜக அரசு திட்டமிட்டே உச்சநீதிமன்றத்தின் உதவியுடன் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்ததால்,

1. விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு செல்வார்கள். ஜனவரி 26 குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடும் மத்திய அரசு. தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகளை தனிதனியாக மிரட்டி ஆசை வார்த்தை காட்டி பாசிச பாஜகவுக்கு அடிபணிய வைப்பார்கள் அல்லது ஆசைபடுபவர்களுக்கு பதவி சுகம் கிடக்க உறுதி கொடுப்பார்கள். சட்டம் கிடப்பிலே கிடக்கும். விவசாயிகள் தங்கள் வேலைகளில் மும்முரமாக விவசாயத்திலே இருப்பார்கள்.

மத்திய அரசு மேல்முறையீடு செய்யும். உச்சநீதிமன்றம் சில வழிமுறைகளை திருத்தி கொடுத்து வேளாண் சட்டங்களை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் நிறவேற்றலாம் என தீர்ப்பு வரும்.

இப்போது போராட ஆட்கள் இருக்காது. பலர் ஆசைக்கு அடிபணிந்திருப்பார்கள். பலர் அடக்கப்பட்டிருப்பார்கள். போராட்டம் நடத்த பழைய வீரியத்துடன் போராட விவசாயிகள் இருக்கமாட்டார்கள்.

வேளாண் சட்டம் சில மாதங்களில் இலகுவாக நிறைவேறிவிடும்.

2. இடைக்கால தடை விதித்தாலும், 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெறும் வரை, டெல்லியில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்திருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இதை சாதகமாக்க பாசிச பாசக அரசு விவசாயிகளை கலைந்து செல்ல வலியுறுத்தும். விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று மேலும் தெரிவிப்பார்கள். அப்போது பாசக அரசு என்ன சொல்லுமென்றால், விவசாயிகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் போராட்டம் நடத்துகிறார்கள் என்று சொல்லி படைகளை அனுப்பி அடித்து நொறுக்க முயலும். விவசாயிகள் ரத்த காயங்களுடன் மரணமடைவார்கள். பலர் காயமடைவார்கள். போராட்டம் வீரியம் குறையும்.

இல்லையென்றால் பாசிச பாசக பல குண்டாஸ்களை ஆர் எஸ் எஸ் கும்பலை விவசாயிகளின் இடையே அமர செய்து கலவரத்தை தூண்ட முயலும். ஒன்றிய அரசு விவசாயிகளின் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள், திவிரவாதிகள் புகுந்துள்ளனர், அவர்களை அகற்ற வேண்டுமென்று சொல்லி படைகளை அனுப்பி விவசாயிகளை அடித்து நொறுக்குவார்கள். போராட்டம் முடிவுக்கு வரும்.

குடியரசு தினத்தை சிறப்பாக நடத்துவார்கள்.

நாளடைவில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யும். உச்சநீதிமன்றம் சில வழிமுறைகளை திருத்தி கொடுத்து வேளாண் சட்டங்களை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் நிறவேற்றலாம் என தீர்ப்பு வரும்.

இப்போது போராட ஆட்கள் இருக்காது. பலர் ஆசைக்கு அடிபணிந்திருப்பார்கள். பலர் அடக்கப்பட்டிருப்பார்கள். போராட்டம் நடத்த பழைய வீரியத்துடன் போராட விவசாயிகள் இருக்கமாட்டார்கள்.

வேளாண் சட்டம் சில மாதங்களில் இலகுவாக நிறைவேறிவிடும்.

இதுதான் நடக்கும் என்று எனது அனுமானம்.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment